தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 30 (அர்ரூம்)

100

அன்றைய மக்காவிலும் உலக அரங்கிலும் நிலவிய சமூக, அரசியல் சூழல்கள், ஆட்சி – காட்சி மாற்றங்கள் என அனைத்தையும் அழகாக, நிறைவாக, சிறப்பாக கண் முன்னால் கொண்டு வந்து வைத்துவிடுகின்றார், மௌலானா. குறிப்பாக உலக அரங்கில் அப்போதைய இரண்டு வல்லரசுகளுக்கு இடையில் நடந்த மோதலை அப்படியே அப்போதைய மக்காவில் சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையில் நடந்து வந்த போராட்டத்தோடு கச்சிதமாகப் பொருந்திப் போகின்ற விதத்தில் ஒப்பீடு செய்து விவரித்திருப்பது அருமை.

 

Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST

இந்த அத்தியாயத்தைப் பொருத்த வரை ஐந்து முக்கியமான விவரங்கள் வாசகர்களின் கவனத்தையும் கருத்தையும் கவரும்.

முதலாவதாக, அன்றைய மக்காவிலும் உலக அரங்கிலும் நிலவிய சமூக, அரசியல் சூழல்கள், ஆட்சி – காட்சி மாற்றங்கள் என அனைத்தையும் அழகாக, நிறைவாக, சிறப்பாக கண் முன்னால் கொண்டு வந்து வைத்துவிடுகின்றார், மௌலானா. குறிப்பாக உலக அரங்கில் அப்போதைய இரண்டு வல்லரசுகளுக்கு இடையில் நடந்த மோதலை அப்படியே அப்போதைய மக்காவில் சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையில் நடந்து வந்த போராட்டத்தோடு கச்சிதமாகப் பொருந்திப் போகின்ற விதத்தில் ஒப்பீடு செய்து விவரித்திருப்பது அருமை.

இரண்டாவதாக, மறுமைக்கான வலுவான சான்றாக இருப்பது மனிதர்கள்தாம் என்பதற்கு விளக்கம் அளிக்கின்ற போது இந்தப் பேரண்டத்தில் இருக்கின்ற கோடிக்கணக்கான படைப்புகளில் எந்தவொரு படைப்பிலும் இல்லாத மூன்று தனிச் சிறப்புமிக்க பண்புகள் மனிதனிடம் இருப்பதாக மௌலானா அவர்கள் பதிவு செய்துள்ள விவரங்கள் (குறிப்பு எண் 5) சிந்திக்கத் தூண்டும் உண்மைகளாய் மிளிர்கின்றன.

மூன்றாவதாக, ஏகத்துவம், மறுமை ஆகியவற்றுக்கான சான்றுகளாய் இறைவன் விவரித்துள்ள சான்றுகளுக்கு (வசனங்கள் 17-27) மௌலானா தந்துள்ள விளக்கக் குறிப்புகள் அறிவுக்கு விருந்தாக மனத்தை ஈர்க்கின்றன.

நான்காவதாக, உறவினருக்கும் வறியவருக்கும் பயணிகளுக்கும் அவர்களுடைய உரிமையை வழங்கிவிடு என்கிற இறைக்கட்டளைக்கு தருகின்ற விளக்கத்தின் ஊடே மௌலானா அவர்கள் பதிவு செய்துள்ள ‘மனிதர்களின் ஒழுக்க, ஆன்மிக வளர்ச்சிக்காகக் குர்ஆன் பரிந்துரைக்கின்ற பாதையில் பயணிக்க வேண்டுமெனில் ஒரு சுதந்திரமான சமூகமும் சுதந்திரமான பொருளாதாரமும் (Free Economy) இருந்தாக வேண்டும்.’ (குறிப்பு எண் 57) என்கிற வாசகம் பொருளாதார நெருக்கடிகளால் தத்தளித்துக்கொண்டிருக்கின்ற இன்றைய உலகம் வாசிக்க வேண்டிய, யோசிக்க வேண்டிய கருத்து ஆகும்.

முத்தாய்ப்பாக, ‘உறுதியான நம்பிக்கை கொள்ளாதோர் உம்மை மதிப்பற்றவராக காணக்கூடாது’ என்கிற இந்த அத்தியாயத்தின் இறுதி வசனத்துக்கு மௌலானா அவர்கள் தந்துள்ள விளக்கமோ (குறிப்பு எண் 85) மனத்துக்குள் மாற்றத்தின் வாயில்களைத் திறந்துவிடுவதாய், இந்த மாதிரியான பண்புகள் கொண்டவர்களாய் நாம் மாற வேண்டுமே என்கிற ஆசையையும் ஏக்கத்தையும் கிளர்ந்தெழச் செய்வதாய் மிளிர்கின்றது.

 

Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year Jan 2019
ISBN-13 978-81-232-0347-8
ISBN-10
Language Tamil
Edition 1
Binding PB
Number of Pages 112 Pages

 

SKU: 30 Tafheemul Quran, Moulana Syed Abul A'la Moududi தஃப்ஹீமுல் குர்ஆன், மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி
Categories:, , , , ,
Tags:, , ,
book-author

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 30 (அர்ரூம்)”

Your email address will not be published. Required fields are marked *