குடும்பத்தின் அமைதி குலைந்திருக்கிறதா? அங்கு ஆணவம் புகுந்து விட்டது என்று தெரிந்து கொள்ள முடியும். குடும்பம் மட்டுமல்ல சமூகத்திலும் குழப்பங்களும் சிக்கல்களும் உருவாகியிருக்கிறது என்றால் ஆணவம் தனது வேலையைச் செய்யத் தொடங்கி விட்டது என்றே அர்த்தம்.
‘ஆணவம்’ என்ற தீயநடத்தையை ஒழித்து வாழ வேண்டுமென்று அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் கட்டளையிட்டுள்ளார்கள். இதனை அறிந்து, விலகி வாழ்வதற்கு ஏற்றாற்போல் நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் ‘அழிக்கும் ஆணவம்’ என்ற இந்த நூலை எழுதியுள்ளார்கள். இந்த நூலில் ஆணவத்தின் அறிகுறிகள், ஆணவம் உருவாகுவதற்கான காரணங்கள் என்பவைகளை குறிப்பிட்டு விட்டு இந்த ஆணவம் அகலுவதற்கு என்னென்ன வழிகள் இருக்கிறது என்பதையும் ஆசிரியர் குறிப்பிட்டு உள்ளார்கள்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2021 |
ISBN-13 | 978-81-232-377-5 |
Language | Tamil |
Edition | 2 |
Binding | PB |
Number of Pages | 40 Pages |
Be the first to review “அழிக்கும் ஆணவம் (உளத்தூய்மை- 2)”