Showing 1–20 of 43 results

  • அலீ (ரலி)

    இந்நூல் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களுடைய பிறப்பு முதல் உயிர்த் தியாகம் வரை முழுமையாகப் பேசுகிறது.

    அவருடைய முன்னோர்கள் தொடங்கி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமை, நபிகளாருடன் நெருக்கம், கல்வியில் சிறப்புத் தகுதி பெற்றமை, கற்றுக்கொடுப்பதில் ஏற்பட்ட ஆர்வம், குடும்பம், ஆட்சிக் காலம், ஆட்சியில் ஏற்பட்ட சோதனைகள் என்று ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அலீ (ரலி) அவர்களைக் குறித்த உண்மைகளை மட்டுமே இந்த வரலாற்று நூல் பேசுகிறது.

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    700
  • அன்புத் தலைவர் அழுத பொழுதுகள்

    தம் பசிக்காக, தம் காயங்களுக்காகக் கண்ணீர் சிந்தாமல், தம் அன்புத் தோழர் களின் வலிகளைக் கண்டு பொங்கியெழுந்த பொழுதுகளை, அற்ப உலகின் தேவைகளுக் காகக் கலங்காமல் மறுமையில் மாபெரும் இறைவனின் திருமுன் நிற்கும் நேரத்தை நினைத்துக் குலுங்கியழுத கண்ணீர் கணங்களை கண் முன் கொண்டு வருகிறது இந்நூல்.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    160
  • இயக்கமும் இனிய உறவுகளும் – மின்னூல் (E-Book)

    Note to customer: After completion of payment, logged in to our website, go to My Accounts and access the E Library section to read the book online

    for Physical Book:

    இயக்கமும் இனிய உறவுகளும்

    தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் யார் என்றுகூடத் தெரியாமல் வாழ்பவர்-களும் இந்தத் தகவல் புரட்சி உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். இலட்சியவாதிகள் இவ்வாறு இருக்க முடியாது. இலட்சியம் வெற்றி பெற உலகை வெல்லும் கொள்கை வலிமையோடு சகோதரத்துவம், அன்பு, கருணை, இரக்கம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, மன்னிக்கும் மனப்பான்மை முதலிய அழகிய பண்புகளும் தேவை என்பதை இஸ்லாமிய வரலாறு எடுத்தியம்புகிறது.

    அந்த அழகிய பண்புகள் என்ன என்பதை இந்த நூல் விரிவாக அலசி ஆராய்கிறது. சிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரும் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்களில் ஒருவராய்த் திகழ்ந்தவருமான மௌலானா குர்ரம் முராத் அவர்கள் திருக்குர்ஆனின் ஒளியிலும் இஸ்லாமிய வரலாற்று ஆதாரங்களின் ஒளியிலும் இந்த அற்புதமான நூலை யாத்துத் தந்துள்ளார்கள். இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் மனித வாழ்வு செம்மையாக அமைந்திட குழு ரீதியாகச் செயல்படுவோருக்கு இந்நூல் ஒரு வழிகாட்டி நூல் எனலாம்.

    Author: KHURRAM MURAD
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    3060
  • இறை நினைவு (திக்ர்) – أذكار

    இந்நூலில், அன்றாடம் காலை, மாலை வேளைகளில் நாம் செய்ய வேண்டிய திக்ர்கள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் திருக்குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்தி உள்ள துஆக்களும் தொகுக்கப்பட்டுள்ளது.

    இதனை நாம் தினசரி ஓதி வருவோம். இறை நினைவுடன் வாழ்வோம்.

    Author: DR. J. MOHIDEEN (Ibnu Jamal)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    50
  • இறைநம்பிக்கையின் அடிப்படை (முஸ்லிம் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கான நூல்)

    நவீனக் கல்வி வளர்ச்சிக்கு இஸ்லாம் எப்போதும் தடையாக இருந்ததில்லை. புத்துலகம் படைக்க இஸ்லாம், கல்வி அறிவு மிக அவசியம் என்பதை வலியுறுத்துகிறது. மேலும் இப்புத்தகம் நவீன கல்வி வளர்ச்சிக்கு தேவையான இறைநம்பிக்கையை வார்த்தெடுக்க உந்து சக்தியாக திகழ்கிறது.

    Author: Moulana Syed
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    250
  • இஸ்லாத்தின் தனித்தன்மைகள்

    இஸ்லாம்….
    · இது, முஸ்லிம்கள் பின்பற்றும் மதம்.
    · அல்லாஹ் என்ற உருவமற்ற இறைவனை வணங்கும் மக்களின் மதம்.
    · ஐவேளை இறைவனைத் தொழச் சொல்லும் மதம்..
    · வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருக்கக் கட்டளையிடும் மதம்..
    · மக்காவை நோக்கி, ஹஜ் என்ற புனிதப் பயணம் மேற்கொள்ளச் சொல்லும் மதம்.
    இதைத் தாண்டி பொது மக்கள் மத்தியில் இஸ்லாத்தைப் பற்றிய புரிதலும் தெளிவும் குறைவாகவே உள்ளன. இறைவழிபாடும், விரதமும், புனிதப் பயணங்களும் அனைத்து சமயங்களுக்கும் பொதுவானவை. இந்நிலையில் இஸ்லாம் எவ்வகையில் தனித்துவமிக்கது என்பதை விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும். இதன் மூலம், இஸ்லாம் குறித்த விரிவான பார்வையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

    Author: Dr. J. Mohideen
    Publisher: Islamic Foundation Trust

    130
  • இஸ்லாமிய இயக்கத்தின் முன்னுரிமைகள்..!

    இன்றையக் காலத்தில் இஸ்லாமிய இயக்கத்தைப் பற்றிய சரியான புரிதலை விவரிப்பதுதான் இந்நூல்.

    பொலிட்டிகல் இஸ்லாம், சூஃபி இஸ்லாம் போன்ற கூப்பாடுகளின் பின்னால் இயங்குகின்ற நுண்ணரசியலை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.

    அழைப்புப் பணியில் அலட்சியத்தை முற்றாகத் துறந்தாக வேண்டிய அவசியத்தை அறிவுறுத்துகிறது இந்நூல்.

    புதிய காலகட்டத்துடன் இயைந்து போகின்ற திட்டமிடலின் குறிப்புகள் ஒவ்வொரு கோடி வைரங்களுக்குச் சமம்.

    Author: Dr. Qurshid Ahmed
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    40
  • இஸ்லாமியக் குடும்பம்

    குடும்ப அமைப்புகள் மீது சிந்தனை ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் போர் தொடுக்கப்படுகிறது.

    ஊடகம், தொலைக்காட்சி, வலைத்தளம், பத்திரிகை போன்றவை வாயிலாக தொடுக்கப்படும் இத்தகைய போர்களால் குடும்ப அமைப்பு கேள்விக்குறியாகிறது. சிலபோது முஸ்லிம்களும் இதற்குப் பலியாகின்றார்கள்.

    ஓர் இஸ்லாமியக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து டாக்டர் யூஸுஃப் அல்கர்ளாவி எழுதியுள்ள இந்த நூல் இக்காலச் சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    Author: DR. YUSUF AL QARDHAWI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    110
  • உத்தம ஸஹாபாக்கள் – மௌலானா மௌதூதி

    உத்தம ஸஹாபாக்கள் அனைவரும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) வழியில் வாழ்ந்த புனிதர்கள் ஆவார்கள். அவர்கள் மீது அவதூறு பரப்புவது பெரும்பாவமாகும் எனவும், ஸஹாபாக்களை குறைகூறுவது பெருங்குற்றமாகும் என்றும் மௌலானா மௌதூதி அவர்கள் பல இடங்களில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளதை இந்நூல் சுட்டிக்காட்டுகின்றது.

    Author: Asim Nomani
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    30
  • உமர் (ரலி)

    உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
    “யாருமே கஷ்டப்பட்டு உழைக்காமல், யா அல்லாஹ்! எனக்கு வாழ்வாதாரத்தைக் கொடு என்று கேட்காதீர்கள். ஏனென்றால் தங்கமும் வெள்ளியும் விண்ணில் இருந்து
    கொட்டாது. ஏதாவது உழைப்பில் ஈடுபடுபவருக்குத்தான் அல்லாஹ் வாழ்வாதாரம் வழங்குகிறான்.” இவ்வாறு கூறிவிட்டுப் பின்வரும் வசனத்தை ஓதுவார்: “பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்” (திருக்குர்ஆன் 62:10)
    (நிளாமுல் ஹுகூமதுல் இஸ்லாமிய்யா)

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    950
  • உஸ்மான் (ரலி)

    உஸ்மான் (ரலி) அவர்களுடைய சிறப்புப் பெயர்கள், குடும்பம், வம்சம், இஸ்லாத்திற்கு முந்தைய காலம், இஸ்லாத்தை ஏற்ற பிறகு, திருமணம், சோதனை, அபிசீனியா ஹிஜ்ரத், குர்ஆனுடன் தொடர்பு, நபிகளாருடன் நெருக்கம், நற்பண்புகள், மதீனா வாழ்வு, சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள், நாட்டு நலனில் அவரின் பொருளாதாரப் பங்களிப்பு, இரண்டு கலீஃபாக்களுடன் அவருடைய நெருக்கம், அவருடைய ஆட்சியில் அடைந்த வெற்றிகள், கொலையில் முடிந்த பெரும் சோதனை போன்றவை குறித்து ஏராளமான வரலாற்றுச் செய்திகளை இந்நூல் பேசுகிறது.

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    750
  • ஒழுக்கமே சுதந்திரம்

    ஒழுக்கம் இல்லா சுதந்திரம்
    நூல் இல்லா பட்டம் போன்றது.

    ஒழுக்கமே சுதந்திரம் என அனைவரும் உணர்ந்து
    ஒழுக்கச் சீர்கேடுகளை ஒழித்து
    ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்
    வாருங்கள் ஓர் அணியில் திரள்வோம்!

    Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    2540
  • ஃபாத்திமா (ரலி) – மின்னூல் (E-Book)

    Note to customer: After completion of payment, logged in to our website, go to My Accounts and access the E Library section to read the book online

    ஃபாத்திமா (ரலி)

    அழகுற வடிவமைக்கப்பட்ட ஃபாத்திமா (ரலி) எனும் இந்நூல் இறைத்தூதரின் இறுதிப் புதல்வியின் வாழ்க்கையையும், காலகட்டங்களையும் ஆய்வு செய்கிறது. ஃபாத்திமா (ரலி) அவர்களின் பெற்றோர்களான, அண்ணலார், கதீஜா (ரலி) அவர்களைப் பற்றியும் பல அற்புதமான சம்பவங்களை விவரிக்கிறது. கஅபாவின் அண்மையில் அமைந்த ஃபாத்திமா (ரலி) அவர்களின் வாழ்க்கை பற்றியும், அவருடைய திருமணம், தாய்மை, இஸ்லாத்தின் செய்தியைப் பரப்புவதில் அவருடைய பங்கு ஆகியன பற்றியும் பல நிகழ்வுகளை சுவைபட எடுத்துரைக்கிறது. கதையுடன் கூடிய உயிரோட்டமுள்ள படங்கள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இந்நூலை படிக்க ஆர்வமூட்டுகிறது…

    Author: Ashsheikh M.M.M. Asam
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    80160
  • கடவுள் உண்டு! கடவுள் ஒன்று!

    நாத்திகர்களின் மனம் புண்படாமல், அதே சமயம் நாத்திகத்திற்கு ஓர் ‘அறுவை சிகிச்சை’ நடத்தியிருக்கிறார் நாடறிந்த நல்லிணக்கப் பேச்சாளர்- எழுத்தாளர் டாக்டர் கேவிஎஸ் ஹபீப் முஹம்மத் அவர்கள்.

    நீங்கள் எந்த ஊர் நாத்திகர்? தமிழ்நாட்டு நாத்திகரா? இந்திய நாத்திகரா? சர்வதேச நாத்திகரா? நீங்கள் யாராக இருந்தாலும் சரி- உங்களுக்காகவே தன் அறிவுவாசல்களை அகலத் திறந்துவைத்து இரு கைகளையும் நீட்டி அழைக்கிறது இந்த நூல்.

    நாத்திக நண்பர்கள் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் அறிவார்ந்த முறையில் விடை அளிக்கிறது இந்த நூல்.

    Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    130
  • சிறுபான்மை முஸ்லிம்களுக்கான சட்டம்

    ஷரீஅத்தின் – இஸ்லாமிய சட்டங்கள் அடிப்படைகள், கோட்பாடுகள் எக்காலத்திற்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை, மாற்றத்திற்கு உள்ளாக்க முடியாதவை. அதே வேளை ஷரீஅத் ஒவ்வொரு மனிதனுடைய சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளும். மார்க்கத்தைப் பின்பற்றுவதில் அவனுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்காது. தாங்க இயலாத சுமையை அவன்மீது சுமத்தாது.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    130
  • சூஃபித்துவம் – ஓர் அறிமுகம்

    இந்நூலில் சூஃபித்துவத்தின் விளக்கத்தையும், வரலாற்றையும் மட்டுமின்றி இஸ்லாத்தில் அதன் உண்மையான படித்தரம் பற்றியும் மிகுந்த சிரத்தையுடன் வழங்கியிருக்கிறார்கள். புகழ்பெற்ற சூஃபி ஹஸ்ரத் அலீ பின் உஸ்மான் ஹுஜ்வெரி அவர்களின் வரலாற்றில் என்றும் அழியாத எழுத்துகளின் சில தொகுதிகளையும் சேர்த்து நமக்கு அளித்திருக்கும் முடிவுரை, சூஃபித் துவத்தின் பல்வேறு பரிமாணங்களையும் ஒளிரச் செய்கின்றது.

    Author: Dr. Wakkar Anwar
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    100
  • சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்

    நாம் மறுமை நம்பிக்கை கொண்டவர்களாக, முஸ்லிம்களாக, அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம்.

    நரகத்தைப்பற்றி அதிகம் எச்சரிக்கப்படுகிறது. எந்த அளவிற்கு நரகம் பற்றி மக்களிடம் எச்சரிக்கப்படுகிறதோ அதுபோல சொர்க்கம் பற்றியும் மக்கள் மத்தியில் அதிகம் நினைவுகூரப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக எழுதப்பட்டதே இந்நூல்.

    Author: Jarina Jamal
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    230
  • தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 33 (அல் அஹ்ஸாப்)

    திருக்குர்ஆனின் 33 வது அத்தியாயமான அல் அஹ்ஸாப் – மூன்று முக்கியமான நிகழ்வுகளான 1) அகழிப் போர், 2) பனூ குரைளா போர், 3) ஜைனப் (ரலி) அவர்களை நபிகளார் (ஸல்) மணம் முடித்தது என்பவற்றைக் குறித்து அலசியுள்ளது.

    Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    340
  • தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 35 (ஃபாத்திர்)

    திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 35 (ஃபாத்திர்)

    ஃபாத்திர் அத்தியாயத்தில்…
    * இறைவனின் வல்லமை, அவன் வழங்கியிருக்கும் அருட்கொடைகள், மனிதர்கள் காட்ட வேண்டிய நன்றி

    * ஷைத்தானின் சூழ்ச்சி, அதனால் ஏற்படும் தீங்கு, அவனது மாயவலையில் சிக்கி மனிதன் வேதனைக்குள்ளாவது

    * நாம் எவ்வாறு அவனிடமிருந்து தப்பித்துக்கொள்வது

    * மனிதனின் சக்தி, திறமை ஆகியன ஒன்றுமில்லாதவை, அல்லாஹ் ஒருவனே எல்லா ஆற்றல்களையும் உடையவன்

    முதலான அரிய தகவல்களும் அதற்கான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

    Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    80
  • திருக்குர்ஆனியக் கலைகள்

    திருக்குர்ஆனின் இலக்குகள் என்ன? வசனங்களுக்கிடையேயான தொடர்புகள் என்ன? அத்தியாயங்களின் ஆய்வுப் பொருள் என்ன? என பல முக்கிய விதிகளை எளிய முறையில் இந்நூல் விளக்குவது இந்நூலின் சிறப்பம்சம்.

    திருக்குர்ஆனை கற்க விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல் இது.

    Author: DR. J. MOHIDEEN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    110