Showing 1–20 of 42 results

  • அண்ணல் நபிகளார் வாழ்வினிலே (மின்னூல் – E-Book)

    E-Book

    அண்ணலார் (ஸல்) அவர்களின் நானூறுக்கும் மேற்பட்ட அருள்மொழிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளில் விளக்கத்துடன்!

    125250
  • அலீ (ரலி)

    இந்நூல் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களுடைய பிறப்பு முதல் உயிர்த் தியாகம் வரை முழுமையாகப் பேசுகிறது.

    அவருடைய முன்னோர்கள் தொடங்கி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமை, நபிகளாருடன் நெருக்கம், கல்வியில் சிறப்புத் தகுதி பெற்றமை, கற்றுக்கொடுப்பதில் ஏற்பட்ட ஆர்வம், குடும்பம், ஆட்சிக் காலம், ஆட்சியில் ஏற்பட்ட சோதனைகள் என்று ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அலீ (ரலி) அவர்களைக் குறித்த உண்மைகளை மட்டுமே இந்த வரலாற்று நூல் பேசுகிறது.

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    700
  • அன்புத் தலைவர் அழுத பொழுதுகள்

    தம் பசிக்காக, தம் காயங்களுக்காகக் கண்ணீர் சிந்தாமல், தம் அன்புத் தோழர் களின் வலிகளைக் கண்டு பொங்கியெழுந்த பொழுதுகளை, அற்ப உலகின் தேவைகளுக் காகக் கலங்காமல் மறுமையில் மாபெரும் இறைவனின் திருமுன் நிற்கும் நேரத்தை நினைத்துக் குலுங்கியழுத கண்ணீர் கணங்களை கண் முன் கொண்டு வருகிறது இந்நூல்.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    160
  • இறை நினைவு (திக்ர்) – أذكار

    இந்நூலில், அன்றாடம் காலை, மாலை வேளைகளில் நாம் செய்ய வேண்டிய திக்ர்கள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் திருக்குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்தி உள்ள துஆக்களும் தொகுக்கப்பட்டுள்ளது.

    இதனை நாம் தினசரி ஓதி வருவோம். இறை நினைவுடன் வாழ்வோம்.

    Author: DR. J. MOHIDEEN (Ibnu Jamal)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    50
  • இஸ்லாத்தின் தனித்தன்மைகள்

    இஸ்லாம்….
    · இது, முஸ்லிம்கள் பின்பற்றும் மதம்.
    · அல்லாஹ் என்ற உருவமற்ற இறைவனை வணங்கும் மக்களின் மதம்.
    · ஐவேளை இறைவனைத் தொழச் சொல்லும் மதம்..
    · வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருக்கக் கட்டளையிடும் மதம்..
    · மக்காவை நோக்கி, ஹஜ் என்ற புனிதப் பயணம் மேற்கொள்ளச் சொல்லும் மதம்.
    இதைத் தாண்டி பொது மக்கள் மத்தியில் இஸ்லாத்தைப் பற்றிய புரிதலும் தெளிவும் குறைவாகவே உள்ளன. இறைவழிபாடும், விரதமும், புனிதப் பயணங்களும் அனைத்து சமயங்களுக்கும் பொதுவானவை. இந்நிலையில் இஸ்லாம் எவ்வகையில் தனித்துவமிக்கது என்பதை விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும். இதன் மூலம், இஸ்லாம் குறித்த விரிவான பார்வையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

    Author: Dr. J. Mohideen
    Publisher: Islamic Foundation Trust

    130
  • இஸ்லாமிய இயக்கத்தின் முன்னுரிமைகள்..!

    இன்றையக் காலத்தில் இஸ்லாமிய இயக்கத்தைப் பற்றிய சரியான புரிதலை விவரிப்பதுதான் இந்நூல்.

    பொலிட்டிகல் இஸ்லாம், சூஃபி இஸ்லாம் போன்ற கூப்பாடுகளின் பின்னால் இயங்குகின்ற நுண்ணரசியலை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.

    அழைப்புப் பணியில் அலட்சியத்தை முற்றாகத் துறந்தாக வேண்டிய அவசியத்தை அறிவுறுத்துகிறது இந்நூல்.

    புதிய காலகட்டத்துடன் இயைந்து போகின்ற திட்டமிடலின் குறிப்புகள் ஒவ்வொரு கோடி வைரங்களுக்குச் சமம்.

    Author: Dr. Qurshid Ahmed
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    40
  • இஸ்லாமிய இயக்கம் (மின்னூல் – E-Book)

    E-Book

    சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நூலில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் என்ன, நாம் எத்தகைய வாழ்வு வாழவேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது. முஸ்லிம்களின் முக்கியப் பொறுப்புகள் யாவை, தீனை – மார்க்கத்தை நிலைநாட்டுவதன் கருத்து என்ன, தேவை என்ன போன்ற அடிப்படை செய்திகள் தக்க ஆதாரங்களுடன் அழுகுற எடுத்துரைக்கிறது.

    3060
  • இஸ்லாமிய வாழ்வு – குத்பாப் பேருரைகள் (மின்னூல் – E-Book)

    E-Book

    மௌலானா மௌதூதி அவர்களின் குத்பாப் பேருரை நூல் சாதாரணப் புத்தகம் அல்ல!

    கல்வியறிவற்ற பாமர மக்களுக்குப் புரியும் வகையில் அவர்களின் அன்றாட வாழ்வில் பழக்கப்பட்ட விஷயங்களைக் கொண்டே – அடிப்படையான உண்மைகளை எடுத்துரைக்கிறது.

    145290
  • இஸ்லாமியக் குடும்பம்

    குடும்ப அமைப்புகள் மீது சிந்தனை ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் போர் தொடுக்கப்படுகிறது.

    ஊடகம், தொலைக்காட்சி, வலைத்தளம், பத்திரிகை போன்றவை வாயிலாக தொடுக்கப்படும் இத்தகைய போர்களால் குடும்ப அமைப்பு கேள்விக்குறியாகிறது. சிலபோது முஸ்லிம்களும் இதற்குப் பலியாகின்றார்கள்.

    ஓர் இஸ்லாமியக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து டாக்டர் யூஸுஃப் அல்கர்ளாவி எழுதியுள்ள இந்த நூல் இக்காலச் சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    Author: DR. YUSUF AL QARDHAWI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    110
  • இஸ்லாமும் சமூக நீதியும்

    19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியின் முடிவில், மேற்கத்திய நாடுகள் ஏற்கெனவே மதத்திலிருந்து விடைபெற்றுவிட்டன. அவர்களின் கருத்துப்படி, தெய்வீக வழிகாட்டுதலுக்கான தேவையிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்வதற்காக இம்மத நீக்கத்தைச் செய்துகொண்டனர். இப்போது அவர்களுக்கு அறிவின் முக்கிய ஆதாரம் “இயந்திர பொருள்முதல்வாதம்” மட்டுமே ஆகும்.

    இது டார்வின், மார்க்ஸ், ஃபிரைடு போன்றோரின் தத்துவங்களின் வெற்றியின் சகாப்தம். மனிதன் அஷ்ரஃப் உல் மக்லூகத் (படைப்புகளில் சிறந்தவன்) ஆக்கப் பட்டுள்ளான் என்பதையும், அவனது இருப்புக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்பதையும் மக்கள் மனங்களில் இல்லாமல் ஆக்குவதையே இம்மூவரும் நோக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பின்னணியில்தான், மௌலானா மௌதூதி இத்தகைய மேற்கத்திய தத்துவவாதிகளுக்கு தர்க்கரீதியாகத் தமது ஆய்வுகளின் வழியே அறைகூவல் விடுத்ததோடு, அவர்களின் கருத்துகளிலுள்ள ஆழமற்ற தன்மையையும் நிரூபித்துள்ளார்.

    Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
    Publisher: Islamic Foundation Trust

    65
  • உத்தம ஸஹாபாக்கள் – மௌலானா மௌதூதி

    உத்தம ஸஹாபாக்கள் அனைவரும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) வழியில் வாழ்ந்த புனிதர்கள் ஆவார்கள். அவர்கள் மீது அவதூறு பரப்புவது பெரும்பாவமாகும் எனவும், ஸஹாபாக்களை குறைகூறுவது பெருங்குற்றமாகும் என்றும் மௌலானா மௌதூதி அவர்கள் பல இடங்களில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளதை இந்நூல் சுட்டிக்காட்டுகின்றது.

    Author: Asim Nomani
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    30
  • உமர் (ரலி)

    உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
    “யாருமே கஷ்டப்பட்டு உழைக்காமல், யா அல்லாஹ்! எனக்கு வாழ்வாதாரத்தைக் கொடு என்று கேட்காதீர்கள். ஏனென்றால் தங்கமும் வெள்ளியும் விண்ணில் இருந்து
    கொட்டாது. ஏதாவது உழைப்பில் ஈடுபடுபவருக்குத்தான் அல்லாஹ் வாழ்வாதாரம் வழங்குகிறான்.” இவ்வாறு கூறிவிட்டுப் பின்வரும் வசனத்தை ஓதுவார்: “பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்” (திருக்குர்ஆன் 62:10)
    (நிளாமுல் ஹுகூமதுல் இஸ்லாமிய்யா)

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    950
  • உஸ்மான் (ரலி)

    உஸ்மான் (ரலி) அவர்களுடைய சிறப்புப் பெயர்கள், குடும்பம், வம்சம், இஸ்லாத்திற்கு முந்தைய காலம், இஸ்லாத்தை ஏற்ற பிறகு, திருமணம், சோதனை, அபிசீனியா ஹிஜ்ரத், குர்ஆனுடன் தொடர்பு, நபிகளாருடன் நெருக்கம், நற்பண்புகள், மதீனா வாழ்வு, சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள், நாட்டு நலனில் அவரின் பொருளாதாரப் பங்களிப்பு, இரண்டு கலீஃபாக்களுடன் அவருடைய நெருக்கம், அவருடைய ஆட்சியில் அடைந்த வெற்றிகள், கொலையில் முடிந்த பெரும் சோதனை போன்றவை குறித்து ஏராளமான வரலாற்றுச் செய்திகளை இந்நூல் பேசுகிறது.

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    800
  • கடவுள் உண்டு! கடவுள் ஒன்று!

    நாத்திகர்களின் மனம் புண்படாமல், அதே சமயம் நாத்திகத்திற்கு ஓர் ‘அறுவை சிகிச்சை’ நடத்தியிருக்கிறார் நாடறிந்த நல்லிணக்கப் பேச்சாளர்- எழுத்தாளர் டாக்டர் கேவிஎஸ் ஹபீப் முஹம்மத் அவர்கள்.

    நீங்கள் எந்த ஊர் நாத்திகர்? தமிழ்நாட்டு நாத்திகரா? இந்திய நாத்திகரா? சர்வதேச நாத்திகரா? நீங்கள் யாராக இருந்தாலும் சரி- உங்களுக்காகவே தன் அறிவுவாசல்களை அகலத் திறந்துவைத்து இரு கைகளையும் நீட்டி அழைக்கிறது இந்த நூல்.

    நாத்திக நண்பர்கள் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் அறிவார்ந்த முறையில் விடை அளிக்கிறது இந்த நூல்.

    Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    130
  • சிறுபான்மை முஸ்லிம்களுக்கான சட்டம்

    ஷரீஅத்தின் – இஸ்லாமிய சட்டங்கள் அடிப்படைகள், கோட்பாடுகள் எக்காலத்திற்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை, மாற்றத்திற்கு உள்ளாக்க முடியாதவை. அதே வேளை ஷரீஅத் ஒவ்வொரு மனிதனுடைய சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளும். மார்க்கத்தைப் பின்பற்றுவதில் அவனுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்காது. தாங்க இயலாத சுமையை அவன்மீது சுமத்தாது.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    130
  • சூஃபித்துவம் – ஓர் அறிமுகம்

    இந்நூலில் சூஃபித்துவத்தின் விளக்கத்தையும், வரலாற்றையும் மட்டுமின்றி இஸ்லாத்தில் அதன் உண்மையான படித்தரம் பற்றியும் மிகுந்த சிரத்தையுடன் வழங்கியிருக்கிறார்கள். புகழ்பெற்ற சூஃபி ஹஸ்ரத் அலீ பின் உஸ்மான் ஹுஜ்வெரி அவர்களின் வரலாற்றில் என்றும் அழியாத எழுத்துகளின் சில தொகுதிகளையும் சேர்த்து நமக்கு அளித்திருக்கும் முடிவுரை, சூஃபித் துவத்தின் பல்வேறு பரிமாணங்களையும் ஒளிரச் செய்கின்றது.

    Author: Dr. Wakkar Anwar
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    100
  • தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 35 (ஃபாத்திர்)

    திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 35 (ஃபாத்திர்)

    ஃபாத்திர் அத்தியாயத்தில்…
    * இறைவனின் வல்லமை, அவன் வழங்கியிருக்கும் அருட்கொடைகள், மனிதர்கள் காட்ட வேண்டிய நன்றி

    * ஷைத்தானின் சூழ்ச்சி, அதனால் ஏற்படும் தீங்கு, அவனது மாயவலையில் சிக்கி மனிதன் வேதனைக்குள்ளாவது

    * நாம் எவ்வாறு அவனிடமிருந்து தப்பித்துக்கொள்வது

    * மனிதனின் சக்தி, திறமை ஆகியன ஒன்றுமில்லாதவை, அல்லாஹ் ஒருவனே எல்லா ஆற்றல்களையும் உடையவன்

    முதலான அரிய தகவல்களும் அதற்கான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

    Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    80
  • தஃப்ஹீமுல் குர்ஆன்_அத் 1 & 2 (மின்னூல் – E-Book)

    E-Book

    குர்ஆனின் தொடக்கத்திலேயே அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை இடம்பெறச் செய்திருப்பதன் நோக்கம் இதுதான்: நீங்கள் உண்மையிலேயே இந்த வேதத்தின் மூலம் பயன்பெற விரும்புகிறீர்கள் எனில், முதலில் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள் என்று எடுத்துச் சொல்வதுதான் அந்த நோக்கம்.

    இந்த (அல் பகறா) அத்தியாயத்தைப் புரிந்து கொள்வதற்கு, அருளப்பட்ட சூழ்நிலையையும் வரலாற்றுப் பின்னணியையும் தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

    220440
  • தஃப்ஹீமுல் குர்ஆன்_அத் 36_யாஸீன் (மின்னூல் – E-Book)

    E-Book

    “யாஸீன் திருக்குர்ஆனின் இதயம்” ஆகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த அத்தியாயம் திருக்குர்ஆனின் செய்தியையும் அழைப்பையும் இதயங்கள் சிலிர்க்கும் வகையிலும், தேக்க நிலையை உடைத்தெறியும் விதத்திலும் உணர்வுபூர்வமாக எடுத்துரைப்பதால் உயிர்த்துடிப்புமிக்க இதயமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

    3575
  • திருக்குர்ஆனியக் கலைகள்

    திருக்குர்ஆனின் இலக்குகள் என்ன? வசனங்களுக்கிடையேயான தொடர்புகள் என்ன? அத்தியாயங்களின் ஆய்வுப் பொருள் என்ன? என பல முக்கிய விதிகளை எளிய முறையில் இந்நூல் விளக்குவது இந்நூலின் சிறப்பம்சம்.

    திருக்குர்ஆனை கற்க விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல் இது.

    Author: DR. J. MOHIDEEN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    110