Showing 1–20 of 64 results

  • Living as a Muslim in a Plural Society_EPUB

    Living as a Muslim in a Plural Society deals with the burning topic of pluralism. Plural societies have become order of the day. Modern plural societies confer equal political rights to all, irrespective of difference of creed or caste. Most of them have opted for political democracy, which ensures general participation in the conduct of State. In this context how should a Muslim behave in such a society? Whether he should get assimilated with those sections who are far more stronger in strength and greater in numbers; or he should adopt a course of conflict and collision; or he should interact in a healthy manner delivering the values of Islam by his words and deeds to his fellow contrymen? This thought provoking book gives clear answer to these burning questions. The book is highly educative for Muslims and enlightening to non-Muslim scholars about the directions of Islam for living in a plural society. The book certainly makes a positive contribution to the ongoing debate about pluralism.

    Author: Dr. Fazlur Rahman Faridi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    For physical book:
    4090
  • அண்ணல் நபிகளார் வாழ்வினிலே (மின்னூல் – E-Book)

    E-Book

    அண்ணலார் (ஸல்) அவர்களின் நானூறுக்கும் மேற்பட்ட அருள்மொழிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளில் விளக்கத்துடன்!

    125250
  • அண்ணல் நபிகளார் வாழ்வினிலே_EPUB

    அண்ணலார் (ஸல்) அவர்களின் நானூறுக்கும் மேற்பட்ட அருள்மொழிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளில் விளக்கத்துடன்!

    Author: MOULANA JALEEL AHSAN NADVI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    For physical book:
    100250
  • அலீ (ரலி)

    இந்நூல் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களுடைய பிறப்பு முதல் உயிர்த் தியாகம் வரை முழுமையாகப் பேசுகிறது.

    அவருடைய முன்னோர்கள் தொடங்கி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமை, நபிகளாருடன் நெருக்கம், கல்வியில் சிறப்புத் தகுதி பெற்றமை, கற்றுக்கொடுப்பதில் ஏற்பட்ட ஆர்வம், குடும்பம், ஆட்சிக் காலம், ஆட்சியில் ஏற்பட்ட சோதனைகள் என்று ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அலீ (ரலி) அவர்களைக் குறித்த உண்மைகளை மட்டுமே இந்த வரலாற்று நூல் பேசுகிறது.

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    700
  • அழகிய அண்டை வீடு_EPUB

    அண்டைவீட்டார் என்றால் யார்? அவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன? அவர்களோடு நாம் எப்படி யெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது? என பல்வேறு கேள்வி களுக்கு விடைகளையும் பன்மை சமூகமாக வாழும் நாம் நம் தேசத்தில் ஜாதி மதம் மொழிகளை எல்லாம் தாண்டி தன் அண்டை வீட்டார்களோடு ஒற்றுமையோடும் மனிதநேயத்துடன் எப்படி வாழ்வது என்பதையும் இந்நூல் பேசுகிறது.

    Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    For physical book:
    2040
  • அன்புத் தலைவர் அழுத பொழுதுகள்

    தம் பசிக்காக, தம் காயங்களுக்காகக் கண்ணீர் சிந்தாமல், தம் அன்புத் தோழர் களின் வலிகளைக் கண்டு பொங்கியெழுந்த பொழுதுகளை, அற்ப உலகின் தேவைகளுக் காகக் கலங்காமல் மறுமையில் மாபெரும் இறைவனின் திருமுன் நிற்கும் நேரத்தை நினைத்துக் குலுங்கியழுத கண்ணீர் கணங்களை கண் முன் கொண்டு வருகிறது இந்நூல்.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    160
  • இறை நினைவு (திக்ர்) – أذكار

    இந்நூலில், அன்றாடம் காலை, மாலை வேளைகளில் நாம் செய்ய வேண்டிய திக்ர்கள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் திருக்குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்தி உள்ள துஆக்களும் தொகுக்கப்பட்டுள்ளது.

    இதனை நாம் தினசரி ஓதி வருவோம். இறை நினைவுடன் வாழ்வோம்.

    Author: DR. J. MOHIDEEN (Ibnu Jamal)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    50
  • இறைவழியில் செலவு அருள்வழியில் வரவு

    நாம் இந்த உலகில் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை; போகும்போதும் எடுத்துச் செல்லப் போவதில்லை. எடுத்துப் போகவும் முடியாது. இடையில் நாம் ஈட்டிய அனைத்தையும் முழுமையாக அனுபவிக்கவும் முடியாது. எனவே நம்மிடம் இருப்பதைப் பிறருக்கு வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். அவர்கள் அடையும் மகிழ்ச்சியில்தான் நம் மகிழ்ச்சியும் அடங்கி உள்ளது. மகிழ்ச்சி பெறுவதில் இல்லை, கொடுப்பதில்தான் உள்ளது என்பதை அப்போது உணர்வோம். இத்தனை காலம் அதனைச் செய்யாதிருந்துவிட்டோம் என்று கவலைப்படுவோம்.

    கஞ்சத்தனத்தைக் கசக்கி எறியுங்கள், தாராளத் தன்மையைத் தனதாக்கிக் கொள்ளுங்கள்.

    வறுமையைக் கொண்டு பயமுறுத்தும் ஷைத்தானை ஓடஓட விரட்டுங்கள். செல்வத்தை மேலும் வளரச் செய்யும் தான தர்மங்களை ஓடி ஓடிச் செய்யுங்கள்.

    ஊரான் பிள்ளைகளுக்கு வாரி வழங்கினால் நம் பிள்ளைகளை இறைவன் ஊட்டி வளர்ப்பான் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.

    வாரி வழங்கினால் இம்மையிலும் வெற்றி! மறுமையிலும் வெற்றி.

    Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    75
  • இஸ்லாத்தில் உரிமைகள், கடமைகள்_EPUB

    மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இறைநெறி இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் – மனிதர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கும் நூல்!

    Author: MOULANA ABDUL HAFEEZ RAHMANI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    For physical book:
    2040
  • இஸ்லாத்தின் தனித்தன்மைகள்

    இஸ்லாம்….
    · இது, முஸ்லிம்கள் பின்பற்றும் மதம்.
    · அல்லாஹ் என்ற உருவமற்ற இறைவனை வணங்கும் மக்களின் மதம்.
    · ஐவேளை இறைவனைத் தொழச் சொல்லும் மதம்..
    · வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருக்கக் கட்டளையிடும் மதம்..
    · மக்காவை நோக்கி, ஹஜ் என்ற புனிதப் பயணம் மேற்கொள்ளச் சொல்லும் மதம்.
    இதைத் தாண்டி பொது மக்கள் மத்தியில் இஸ்லாத்தைப் பற்றிய புரிதலும் தெளிவும் குறைவாகவே உள்ளன. இறைவழிபாடும், விரதமும், புனிதப் பயணங்களும் அனைத்து சமயங்களுக்கும் பொதுவானவை. இந்நிலையில் இஸ்லாம் எவ்வகையில் தனித்துவமிக்கது என்பதை விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும். இதன் மூலம், இஸ்லாம் குறித்த விரிவான பார்வையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

    Author: Dr. J. Mohideen
    Publisher: Islamic Foundation Trust

    130
  • இஸ்லாமிய இயக்கத்தின் முன்னுரிமைகள்..!

    இன்றையக் காலத்தில் இஸ்லாமிய இயக்கத்தைப் பற்றிய சரியான புரிதலை விவரிப்பதுதான் இந்நூல்.

    பொலிட்டிகல் இஸ்லாம், சூஃபி இஸ்லாம் போன்ற கூப்பாடுகளின் பின்னால் இயங்குகின்ற நுண்ணரசியலை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.

    அழைப்புப் பணியில் அலட்சியத்தை முற்றாகத் துறந்தாக வேண்டிய அவசியத்தை அறிவுறுத்துகிறது இந்நூல்.

    புதிய காலகட்டத்துடன் இயைந்து போகின்ற திட்டமிடலின் குறிப்புகள் ஒவ்வொரு கோடி வைரங்களுக்குச் சமம்.

    Author: Dr. Qurshid Ahmed
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    40
  • இஸ்லாமிய இயக்கம் (மின்னூல் – E-Book)

    E-Book

    சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நூலில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் என்ன, நாம் எத்தகைய வாழ்வு வாழவேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது. முஸ்லிம்களின் முக்கியப் பொறுப்புகள் யாவை, தீனை – மார்க்கத்தை நிலைநாட்டுவதன் கருத்து என்ன, தேவை என்ன போன்ற அடிப்படை செய்திகள் தக்க ஆதாரங்களுடன் அழுகுற எடுத்துரைக்கிறது.

    3060
  • இஸ்லாமிய இயக்கம்_EPUB

    சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நூலில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் என்ன, நாம் எத்தகைய வாழ்வு வாழவேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது. முஸ்லிம்களின் முக்கியப் பொறுப்புகள் யாவை, தீனை – மார்க்கத்தை நிலைநாட்டுவதன் கருத்து என்ன, தேவை என்ன போன்ற அடிப்படை செய்திகள் தக்க ஆதாரங்களுடன் அழுகுற எடுத்துரைக்கிறது.

    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    For physical book:
    3060
  • இஸ்லாமிய சட்ட விளக்கம்_EPUB

    தூய்மை, தொழுகை, ஜகாத், நோன்பு ஆகிய தலைப்புகளில் மஸாயில்கள் எனும் சட்ட விதிகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. செய்முறைப் பயிற்சி தரப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு.

    Author: MOULANA ABDUL HAFEEZ RAHMANI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    For physical book:
    3065
  • இஸ்லாமிய வாழ்வு – குத்பாப் பேருரைகள் (மின்னூல் – E-Book)

    E-Book

    மௌலானா மௌதூதி அவர்களின் குத்பாப் பேருரை நூல் சாதாரணப் புத்தகம் அல்ல!

    கல்வியறிவற்ற பாமர மக்களுக்குப் புரியும் வகையில் அவர்களின் அன்றாட வாழ்வில் பழக்கப்பட்ட விஷயங்களைக் கொண்டே – அடிப்படையான உண்மைகளை எடுத்துரைக்கிறது.

    145290
  • இஸ்லாமியக் குடும்பம்

    குடும்ப அமைப்புகள் மீது சிந்தனை ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் போர் தொடுக்கப்படுகிறது.

    ஊடகம், தொலைக்காட்சி, வலைத்தளம், பத்திரிகை போன்றவை வாயிலாக தொடுக்கப்படும் இத்தகைய போர்களால் குடும்ப அமைப்பு கேள்விக்குறியாகிறது. சிலபோது முஸ்லிம்களும் இதற்குப் பலியாகின்றார்கள்.

    ஓர் இஸ்லாமியக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து டாக்டர் யூஸுஃப் அல்கர்ளாவி எழுதியுள்ள இந்த நூல் இக்காலச் சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    Author: DR. YUSUF AL QARDHAWI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    110
  • இஸ்லாமும் சமூக நீதியும்

    19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியின் முடிவில், மேற்கத்திய நாடுகள் ஏற்கெனவே மதத்திலிருந்து விடைபெற்றுவிட்டன. அவர்களின் கருத்துப்படி, தெய்வீக வழிகாட்டுதலுக்கான தேவையிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்வதற்காக இம்மத நீக்கத்தைச் செய்துகொண்டனர். இப்போது அவர்களுக்கு அறிவின் முக்கிய ஆதாரம் “இயந்திர பொருள்முதல்வாதம்” மட்டுமே ஆகும்.

    இது டார்வின், மார்க்ஸ், ஃபிரைடு போன்றோரின் தத்துவங்களின் வெற்றியின் சகாப்தம். மனிதன் அஷ்ரஃப் உல் மக்லூகத் (படைப்புகளில் சிறந்தவன்) ஆக்கப் பட்டுள்ளான் என்பதையும், அவனது இருப்புக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்பதையும் மக்கள் மனங்களில் இல்லாமல் ஆக்குவதையே இம்மூவரும் நோக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பின்னணியில்தான், மௌலானா மௌதூதி இத்தகைய மேற்கத்திய தத்துவவாதிகளுக்கு தர்க்கரீதியாகத் தமது ஆய்வுகளின் வழியே அறைகூவல் விடுத்ததோடு, அவர்களின் கருத்துகளிலுள்ள ஆழமற்ற தன்மையையும் நிரூபித்துள்ளார்.

    Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
    Publisher: Islamic Foundation Trust

    65
  • இஸ்லாம் மனிதகுலத்திற்கு வழங்கியது என்ன?

    இஸ்லாம் வருவதற்கு முன்பு இந்த உலகம் எப்படி இருந்தது, மனித குலம் எந்த மாதிரியான வாழ்வியல் கட்டமைப்பின் கீழ் வாழ்ந்தார்கள், அன்றைய மக்களிடம் எந்த மாதிரியான தீமைகள் புரையோடி போய் கிடந்தன, அன்றைய ஆட்சியாளர்கள், மன்னர்கள் மக்களை எந்த அளவு சுரண்டி அடக்கி ஒடுக்கி அடிமைத்தனமாக வைத்திருந்தார்கள், கடவுள் என்று எதையெல்லாம் மக்கள் வணங்கினார்கள்? மதத்தின் பெயரால், மன்னரின் பெயரால் எவ்வளவு பெரிய அடக்குமுறைகளும் தீண்டாமைகளும் தலைவிரித்து ஆடின. சாதியப் பெருமைகளும், பெண்களை மதிக்காத குணமும் எவ்வளவு வேரூன்றி இருந்தன என்று நீங்கள் பார்க்க வேண்டும்.

    பிறகு இஸ்லாம் இந்த உலகிற்கு வந்தவுடன் மனித குலம் அடைந்த நன்மைகள், அருட்கொடைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே இஸ்லாம் மகத்தான அருட்கொடை களை இந்த உலகிற்கு வழங்கி மாபெரும் புரட்சியையே ஏற்படுத்தி இருக்கிறது என்ற உண்மை புரிய வரும்.

    Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    175
  • உத்தம ஸஹாபாக்கள் – மௌலானா மௌதூதி

    உத்தம ஸஹாபாக்கள் அனைவரும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) வழியில் வாழ்ந்த புனிதர்கள் ஆவார்கள். அவர்கள் மீது அவதூறு பரப்புவது பெரும்பாவமாகும் எனவும், ஸஹாபாக்களை குறைகூறுவது பெருங்குற்றமாகும் என்றும் மௌலானா மௌதூதி அவர்கள் பல இடங்களில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளதை இந்நூல் சுட்டிக்காட்டுகின்றது.

    Author: Asim Nomani
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    30
  • உமர் (ரலி)

    உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
    “யாருமே கஷ்டப்பட்டு உழைக்காமல், யா அல்லாஹ்! எனக்கு வாழ்வாதாரத்தைக் கொடு என்று கேட்காதீர்கள். ஏனென்றால் தங்கமும் வெள்ளியும் விண்ணில் இருந்து
    கொட்டாது. ஏதாவது உழைப்பில் ஈடுபடுபவருக்குத்தான் அல்லாஹ் வாழ்வாதாரம் வழங்குகிறான்.” இவ்வாறு கூறிவிட்டுப் பின்வரும் வசனத்தை ஓதுவார்: “பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்” (திருக்குர்ஆன் 62:10)
    (நிளாமுல் ஹுகூமதுல் இஸ்லாமிய்யா)

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    1100