-
கடவுள் உண்டு! கடவுள் ஒன்று!
நாத்திகர்களின் மனம் புண்படாமல், அதே சமயம் நாத்திகத்திற்கு ஓர் ‘அறுவை சிகிச்சை’ நடத்தியிருக்கிறார் நாடறிந்த நல்லிணக்கப் பேச்சாளர்- எழுத்தாளர் டாக்டர் கேவிஎஸ் ஹபீப் முஹம்மத் அவர்கள்.
நீங்கள் எந்த ஊர் நாத்திகர்? தமிழ்நாட்டு நாத்திகரா? இந்திய நாத்திகரா? சர்வதேச நாத்திகரா? நீங்கள் யாராக இருந்தாலும் சரி- உங்களுக்காகவே தன் அறிவுவாசல்களை அகலத் திறந்துவைத்து இரு கைகளையும் நீட்டி அழைக்கிறது இந்த நூல்.
நாத்திக நண்பர்கள் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் அறிவார்ந்த முறையில் விடை அளிக்கிறது இந்த நூல்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பதவி மோகம் படுத்தும் பாடு
இன்று பதவி என்பது அதிகாரத்தின் அடையாளமாக, புகழாசையாக, பெருமைக்குரியதாக விளங்கி வருகிறது. உலகியல் இன்பங்களில் ஒன்றாக பதவி மோகம் மாறி விட்டது. இதனால் மனிதர்களுக்கிடையில் போட்டி மனப்பான்மை உருவாகி, பொறாமை எண்ணத்தை வளர்க்கிறது. இது மேலும் வெறுப்பு, சண்டை சச்சரவுகள் என்ற பின் விளைவுகளை அதிகரிக்கச் செய்கிறது. இன்று சமூகத்தில் தோன்றியுள்ள பல்வேறு குழப்பங்கள், நெருக்கடிகளுக்கு பதவி மோகம், பேராசை, பெருமை போன்ற தீய பண்புகளே காரணமாகத் திகழ்ந்து வருகின்றது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST