-
உத்தம ஸஹாபாக்கள் – மௌலானா மௌதூதி
உத்தம ஸஹாபாக்கள் அனைவரும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) வழியில் வாழ்ந்த புனிதர்கள் ஆவார்கள். அவர்கள் மீது அவதூறு பரப்புவது பெரும்பாவமாகும் எனவும், ஸஹாபாக்களை குறைகூறுவது பெருங்குற்றமாகும் என்றும் மௌலானா மௌதூதி அவர்கள் பல இடங்களில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளதை இந்நூல் சுட்டிக்காட்டுகின்றது.
Author: Asim Nomani
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சூஃபித்துவம் – ஓர் அறிமுகம்
இந்நூலில் சூஃபித்துவத்தின் விளக்கத்தையும், வரலாற்றையும் மட்டுமின்றி இஸ்லாத்தில் அதன் உண்மையான படித்தரம் பற்றியும் மிகுந்த சிரத்தையுடன் வழங்கியிருக்கிறார்கள். புகழ்பெற்ற சூஃபி ஹஸ்ரத் அலீ பின் உஸ்மான் ஹுஜ்வெரி அவர்களின் வரலாற்றில் என்றும் அழியாத எழுத்துகளின் சில தொகுதிகளையும் சேர்த்து நமக்கு அளித்திருக்கும் முடிவுரை, சூஃபித் துவத்தின் பல்வேறு பரிமாணங்களையும் ஒளிரச் செய்கின்றது.
Author: Dr. Wakkar Anwar
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்
நாம் மறுமை நம்பிக்கை கொண்டவர்களாக, முஸ்லிம்களாக, அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம்.
நரகத்தைப்பற்றி அதிகம் எச்சரிக்கப்படுகிறது. எந்த அளவிற்கு நரகம் பற்றி மக்களிடம் எச்சரிக்கப்படுகிறதோ அதுபோல சொர்க்கம் பற்றியும் மக்கள் மத்தியில் அதிகம் நினைவுகூரப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக எழுதப்பட்டதே இந்நூல்.
Author: Jarina Jamal
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முன்மாதிரி நபித்தோழியர்கள்
குழந்தைகளுக்கு இஸ்லாமியப் பயிற்சி அளிப்பதிலாகட்டும் மார்க்கத்தைப் பரப்புவதிலாகட்டும் நபித்தோழியர்கள் தங்களுக்குத் தாங்களே ஈடு இணையற்றவர்களாகத் திகழ்ந்தார்கள். அதேபோல் அல்லாஹ்வின் மீதும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்மீதும் நேசம் கொள்வதன் வாயிலாக நாளை மறுமையில் நல்ல பலன் கிடைக்குமென்பதை உணர்ந்து அதன்படி வாழ்ந்து காட்டினார்கள்.
அன்று இஸ்லாத்திற்கு உயிரூட்டிய நபித்தோழியர்களின் வரலாறுகளை இன்று நாம் படிக்கும் பொழுது அவர்களைப் போன்று நாமும் நம் வாழ்வை மாற்ற வேண்டும் என்ற உணர்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்துகிறது.
Author: Maayil Kairabathi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST