-
அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு
Author: MOULANA ABU SALIM ABDUL HAI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அல்குர்ஆன் கூறும் அழகிய சரிதைகள்
வாழும் தேசத்திற்கு என்ன பங்களிப்பைச் செய்திருக்கிறாய்? என்று ஒரு சரிதை உங்களிடம் கேட்கும். நாட்டில் நீதி தேவையா, வீட்டிலிருந்து துவங்கு என்று மற்றொரு சரிதை கூறும். மூன்றாவது சரிதையோ ஒழுக்க விழுமங்களைக் கடைப்பிடிக்கின்றாயா? என்று நம்மை உலுக்கிக் கேட்கும். நான்காவது நிகழ்வோ சூழல்களுக்கு அடிபணிந்து வீழ்ச்சியடையாதே என்று வீரவரலாறு கூறும்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இறைத்தூதர்கள் பற்றி இறைமறை
இறைத்தூதர்கள் யார், அவர்களின் இயல்புகள், தகுதிகள், பணிகள் என்ன? இறுதிவேதமான திருக்குர்ஆனே 25 இறைத்தூதர்கள் பற்றிய விளக்கத்தை அளிக்கிறது. இந்நூல் இத்துறையில் ஒரு முன்னோடியாக விளங்குகிறது.
Author: DR. QURSHID AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய வரலாறு (அபீசினியா ஹிஜ்ரத் முதல் உஹத் வரை)
அபீசினியா ஹிஜ்ரத், விண்ணுலகப் பயணம், யத்ரிப்பை நோக்கி, மதீனாவில் இஸ்லாம், நபிகளாரின் ஹிஜ்ரத், மாநபியின் மதீனா வருகை, மதீனாவில் இஸ்லாமிய அரசு, உயர்ந்தெழுந்த மஸ்ஜிதுந் நபவி, சகோதரத்துவ உறவு ஒப்பந்தம், போர்களும் காரணங்களும், போர்களின் நோக்கமும் நபிகளாரின் வியூகமும், கிப்லா மாற்றம், வணிகக் குழு, பத்ரு களம், பத்ரு போரும் கைதிகளும், போருக்குப் பின், தடைகளைத் தாண்டிய பயணம், உஹத் போர், யுத்தம் தந்த படிப்பினைகள் என இஸ்லாமிய வரலாறு கடந்து வந்த பாதையை பல வழிகளில் நம் கண் முன்னால் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.
Author: Afzalul Ulama, Moulavi M.I. Muhammed Siddiq Umari, Madani M.A., M.Com.,
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)
அண்ணலார் (ஸல்) அவர்களுக்குப் பின் வந்த கலீஃபாக்களில் பனூஉமய்யா குலத்தின் கலீஃபாவுடைய நேர்மையான – அழகிய வரலாற்று நூல்.
Author: MAAYIL KHAIRABADHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
-
காலடிச் சுவடுகள்
காலடிச் சுவடுகள் வரலாறு படைத்த மனிதர்களின் வரலாற்றிலிருந்து பளிச்சென மின்னுகின்ற காட்சிகளை விவரிக்கின்ற நூல் இது. சின்னச்சின்ன நிகழ்வுகள்தான். ஆனால் எல்லாமே வாழ்க்கைக்கு ஒளியூட்டுகின்ற உதய தாரகைகள். அன்பு, பண்பு, துணிவு, கனிவு, பணிவு, வாய்மை, நேர்மை, தூய்மை, வாக்குத் தவறாமை, எளிமை என அனைத்து நற்குணங்களின் நறுமணத்தை பக்கங்கள் தோறும் நுகர முடியும்.Author: T. AZEEZ LUTHFULLAH
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
நபித்தோழர்கள் சீரிய வரலாறு
அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த தோழர்களில் பன்னிருவரின் தியாக வரலாற்றை இரத்தினச் சுருக்கமாக விளக்கும் நூல்!
Author: M.S. SYED MOAHMED ANWARI FAZIL BAQAVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நாகரிகத்தின் தந்தை உமர் (ரலி)
உமரே! நீர் சத்தியத்தை ஏற்றபோது
சர்தார் நபியின் வதனம் மலர்ந்தது.உமரே! எத்தனையோ முறை
உமது வாக்கே வஹியாக இறங்கின!உமரே! எத்தனையோ முறை
உமது கூற்றே உண்மையாக இருந்தது!உமரே! உமது வரலாறு எங்கள்முன் பிரகாசமாக இருக்கிறது.
இல்லையேல், கற்பனை கதாபாத்திரம் என்றே
உம்மை நாங்கள் கருதியிருப்போம்.Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்
Author: KARAIKANDAM K. NEDUNCHEZHIAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மூஸா நபி வரலாறு
பிறந்த போதே திடுக்கிடும் சூழலைக் கடந்த மூஸா நபி அவர்கள் கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் இல்லத்தில் வளரும் சூழல், திருமணம், அவர்களுக்கு வழங்கப்பெற்ற தூதுத்துவம், அற்புதங்கள், மீண்டும் எகிப்து திரும்புதல், தூதுத்துவத்தை நாடாளும் மன்னரிடமும் மக்களிடமும் சேர்ப்பித்தல் ஆகியவற்றை வரிசையாக இந்த நூல் முன்வைக்கிறது. கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் அழிவைப் பற்றியும் இறுதியில் சத்தியம் வென்றதையும் தெளிவுபடுத்துகிறது. அநீதியை எதிர்த்து மூஸா நபி போராடி வென்றதை இந்த நூல் அருமையாக விவரிக்கிறது. மூஸா நபியின் துணிவு, வீரம், வேகம், விவேகம், சமூக நீதிக்கான போராட்டம், ஒடுக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டுவது உள்ளிட்ட சிறப்புப்பண்புகளை இதில் காணலாம்.
Author: E.A. Fazlur Rahman Umari
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மௌலவி நூஹ் மஹ்ழரி 3 + டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி 1 (4 Books Package)
- செசெல்வந்தர் நபிகள் நாயகம் (ஸல்)
2. நாகரிகத்தின் தந்தை உமர் (ரலி)
3. அல்குர்ஆன் கூறும் அழகிய சரிதைகள்
4. அல்குர்ஆனை அணுகும் முறை
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹1150 - செசெல்வந்தர் நபிகள் நாயகம் (ஸல்)
-
ரஜப் தய்யிப் எர்டோகன்
நவீன உலகின் ஆற்றல்மிகு ஆட்சியாளர்களில் ஒருவர்தான் துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் எர்டோகன். முஸ்லிம் உலகில் அவரைப் போல் மனவலிமையும் ராஜதந்திரமும் செயலாற்றல் உணர்வும் நிறைந்த மற்றொரு ஆட்சியாளரைக் காண்பது அரிது. தமது பண்பாட்டைக் கைவிடாமலேயே பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சொந்தக் காலில் நிற்கும் வகையில் நவீன துருக்கியைச் செதுக்கியவர் என்பதுதான் எர்டோகனின் பெரும் சாதனை ஆகும். மதச்சார்பற்றத் தன்மை என்னும் பெயரில் அடக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, துருக்கி மண்ணில் அதனுடைய பண்பாட்டையும் பாரம்பர்யத்தையும் அத்தாதுர்க் குழிதோண்டிப் புதைத்த இடத்திலிருந்து மிகவும் சாதுர்ய மாகவும் அறிவுபூர்வமாகவும் செயல்பட்ட எர்டோகன், துருக்கியின் உஸ்மானிய, இஸ்லாமியப் பாரம்பர்யப் பெருமையை மீட்டெடுத்தார். ஆகவே துருக்கியின், எர்டோகனின் வரலாறும் செய்திகளும் அரசியல் மாணவர்களைப் பொறுத்தவரை பெரும் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் என்பதில் ஐயமில்லை.
-
வரலாறும் வகுப்புவாதமும்
‘ஒரு சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்க வேண்டுமெனில், அந்தச் சமூகம் குறித்த வரலாற்றை இல்லாமல் செய்துவிடவேண்டும்’ என்பதில் வகுப்புவாதிகள் குறியாய் இருக்கின்றார்கள். அவர்களின் குயுக்தியை வெளிச்சமிட்டுக் காட்டி உண்மையை உலகறியச் செய்கிறது இந்த நூல். பாடப்புத்தகத்தில் தொடங்கி எங்கெல்லாம், எப்படியெல்லாம் அவர்கள் வரலாற்றை மாற்றியமைத்தார்கள் என்பதை இந்த நூல் விசாரணை செய்கிறது.
சுல்தான்கள், முகலாய மன்னர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அலசி, வரலாற்றின் வெளிச்சத்திலேயே உண்மைகளைப் போட்டுடைப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு.
பாபர்மசூதியின் வரலாறு, பிரிவினைக்குப் பின்னால் உள்ள மெய்யான வரலாற்றுத் தகவல்கள், அம்பேத்கரின் நிலைப்பாடு, இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆகியவற்றை பேராசிரியர் அருணன், பேராசிரியர் தஸ்தகீர், டாக்டர் K. V. S. ஹபீப் முஹம்மத் ஆகியோர் மிக நேர்த்தியாகப் பதிவுசெய்துள்ளனர்.
மருத நாயகம் கான் சாஹிபின் வீரவரலாறும், திப்பு சுல்தானின் கம்பீரமும் நம் கண்முன்னே அற்புதமாகச் செதுக்கப்பட்டு வாசகரின் உள்ளத்தில் பெரும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் விதைக்கும்.
இந்துத்துவம் ஆட்சியில் அமர்ந்துள்ள இன்றைய சூழலில் வரலாறு குறித்து எழும் அத்தனை வினாக்களையும் எதிர்கொண்டு ஆதாரங்களின் ஒளியில் புள்ளிவிவரங்களுடன்
பதில்தரும் இந்த நூல் நம் காலத்தின் மகத்தான ஆவணம்.Author: PROF.ARUNAN / PROF. DASTAGEER / DR. K.V.S HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வரலாற்றில் ஒரு திருப்பம்
ஒவ்வொரு இயக்கத்தையும் நடத்துவதற்கு ஒரு வழிமுறை அவசியமாகிறது. இஸ்லாமிய இயக்கத்தை வழிநடத்து வதும், இதனை நிலைநாட்டுவதும் எவ்வாறு எனும் கேள்விக்கு ஓர் அருமையான பதிலாக இந்நூல் அமைந் துள்ளது.
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்
தெற்கே தரங்கம்பாடி – நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என அகண்டு விரிந்த பேரரசை ஆட்சிசெய்தவர் மாமன்னர் ஔரங்கஜேப்.ஐம்பது ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்த ஔரங்கஜேப்பை ஒரு கொடுங்கோலன் என்று சரித்திரச் சான்றுகள் சொல்லி வருகின்றன. தன் தந்தை ஷாஜகானை சிறைக்குத் தள்ளி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் ஔரங்கஜேப் என்று பாடப்புத்தகங்கள் நமக்குப் பாடம் நடத்தியிருக்கின்றன.தன் சொந்த அண்ணன், தம்பியை அப்பட்டமாகப் படுகொலை செய்தவர்; தன்னை எதிர்த்த மகனையும், மகளையும் விரட்டிக் கொன்றவர் என்றெல்லாம் வழிவழியாக ஔரங்கஜேப் பற்றி சொல்லிவரப்படும் தகவல்கள் உண்மைதானா? ஔரங்கஜேப் இந்துக்களை இம்சித்தவரா? பெண்களை அவமதித்தவரா? காதலிப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் தந்தவரா? இல்லை.. இல்லை… இல்லவே இல்லை என்று ஆதாரங் களுடன் மறுக்கிறார் நூலாசிரியர் *செ.திவான்*.Author: S DIVAN செ திவான்
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வாழ்வும் வரலாறும்
வரலாற்றில் இருந்து பாடம் படித்த ஒரு சமூகத்தால் மட்டுமே தங்களது பண்பையும் உயர்வையும் பேணிப்பாதுகாக்க முடியும். துன்ப துயரங்களை எதிர்கொள்ள முடியும். வீழ்ச்சி காணும் சமூகத்தை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும்.வரலாறு ஒன்று மட்டுமே மனிதர்களை இழிவுகளிலிருந்து மீட்டு, முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் சக்திவாய்ந்த அம்சமாக இருக்கின்றது. முன்னேற்றத்தின் சி-கரங்களைத் தொட்ட சமூகங்கள் அனைத்தும் வரலாற்றின் பக்கங்களில் இருந்துதான் அதற்கான தூண்டுகோல்களைப் பெற்றன.இதோ இந்த நூலில் வரலாற்றின் பக்கங்களில் இருந்து ஒருசில நிகழ்வுகளை மட்டுமே தொட்டுக்காட்டுகின்றோம்Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஷேக் அப்துல் காதிர் ஜீலானி
மாமேதை ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் வாழ்வையும் பணிகளையும் ஆதாரப்பூர்வமாக விளக்கும் நூல்!
Author: MOULANA ABUL HASAN ALI NADVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST