-
அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு
Author: MOULANA ABU SALIM ABDUL HAI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அபூபக்கர் (ரலி)
தமிழ் கூறும் நல் உலகில் முதன்முறையாக ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அபூபக்கர் (ரலி) குறித்த முழுமையான நூல்.
இப்படி ஒரு மனிதரா..? படிக்கப் படிக்க உற்சாகம்! பக்கத்துக்கு பக்கம் உத்வேகம்!
அபூபக்கர் (ரலி) குறித்து இனியொரு நூல் தமிழில் தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு முழுமையான நூல்.
இந்த புத்தகத்தை ஒருமுறை வாசித்து பாருங்கள்.
நம் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய பக்கங்கள் இதில் இருக்கின்றன.Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அலங்கரிப்போம் ரமளானை
மறுமையில் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல காரணமாக இருப்பவை எவை? இறை நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் இறையில்லத்தில் தங்கும் இஃதிகாஃபின் நன்மைகள் என்ன? பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் மாதமாக ரமளான் திகழ்வதால் கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்வது எப்படி? என்பவைகளை சிறப்பாக நூலாசிரியர் மௌலவி நூஹ் மஹ்ழரி எடுத்து வைத்துள்ளார்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அலீ (ரலி)
இந்நூல் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களுடைய பிறப்பு முதல் உயிர்த் தியாகம் வரை முழுமையாகப் பேசுகிறது.
அவருடைய முன்னோர்கள் தொடங்கி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமை, நபிகளாருடன் நெருக்கம், கல்வியில் சிறப்புத் தகுதி பெற்றமை, கற்றுக்கொடுப்பதில் ஏற்பட்ட ஆர்வம், குடும்பம், ஆட்சிக் காலம், ஆட்சியில் ஏற்பட்ட சோதனைகள் என்று ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அலீ (ரலி) அவர்களைக் குறித்த உண்மைகளை மட்டுமே இந்த வரலாற்று நூல் பேசுகிறது.
Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அல்குர்ஆன் கூறும் அழகிய சரிதைகள்
வாழும் தேசத்திற்கு என்ன பங்களிப்பைச் செய்திருக்கிறாய்? என்று ஒரு சரிதை உங்களிடம் கேட்கும். நாட்டில் நீதி தேவையா, வீட்டிலிருந்து துவங்கு என்று மற்றொரு சரிதை கூறும். மூன்றாவது சரிதையோ ஒழுக்க விழுமங்களைக் கடைப்பிடிக்கின்றாயா? என்று நம்மை உலுக்கிக் கேட்கும். நான்காவது நிகழ்வோ சூழல்களுக்கு அடிபணிந்து வீழ்ச்சியடையாதே என்று வீரவரலாறு கூறும்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அன்புத் தலைவர் அழுத பொழுதுகள்
தம் பசிக்காக, தம் காயங்களுக்காகக் கண்ணீர் சிந்தாமல், தம் அன்புத் தோழர் களின் வலிகளைக் கண்டு பொங்கியெழுந்த பொழுதுகளை, அற்ப உலகின் தேவைகளுக் காகக் கலங்காமல் மறுமையில் மாபெரும் இறைவனின் திருமுன் நிற்கும் நேரத்தை நினைத்துக் குலுங்கியழுத கண்ணீர் கணங்களை கண் முன் கொண்டு வருகிறது இந்நூல்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இமாம் ஹுஸைன் உயிரைக் கொடுத்தது எதற்காக?
இமாம் ஹுஸைன் அவர்களின் மீது பேரன்பும் மாசற்ற பற்றும் கொண்டிருக்கின்ற பெரும்பாலோருக்கு அவர் எந்த நோக்கத்திற்காக தன்னுடைய இன்னுயிரைத் துறப்பதற்கும் தயாரானார்? தன்னுடைய அன்பு மகனார்களையும் இழந்து விடுவதற்கு ஏன் துணிந்தார் என்பது பற்றிய உண்மைநிலை தெரிந்திருப்பதில்லை.
Author: Moulana Syed Abul A’la Moududi (Rah)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைத்தூதர்கள் பற்றி இறைமறை
இறைத்தூதர்கள் யார், அவர்களின் இயல்புகள், தகுதிகள், பணிகள் என்ன? இறுதிவேதமான திருக்குர்ஆனே 25 இறைத்தூதர்கள் பற்றிய விளக்கத்தை அளிக்கிறது. இந்நூல் இத்துறையில் ஒரு முன்னோடியாக விளங்குகிறது.
Author: DR. QURSHID AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய வரலாறு (அபீசினியா ஹிஜ்ரத் முதல் உஹத் வரை)
அபீசினியா ஹிஜ்ரத், விண்ணுலகப் பயணம், யத்ரிப்பை நோக்கி, மதீனாவில் இஸ்லாம், நபிகளாரின் ஹிஜ்ரத், மாநபியின் மதீனா வருகை, மதீனாவில் இஸ்லாமிய அரசு, உயர்ந்தெழுந்த மஸ்ஜிதுந் நபவி, சகோதரத்துவ உறவு ஒப்பந்தம், போர்களும் காரணங்களும், போர்களின் நோக்கமும் நபிகளாரின் வியூகமும், கிப்லா மாற்றம், வணிகக் குழு, பத்ரு களம், பத்ரு போரும் கைதிகளும், போருக்குப் பின், தடைகளைத் தாண்டிய பயணம், உஹத் போர், யுத்தம் தந்த படிப்பினைகள் என இஸ்லாமிய வரலாறு கடந்து வந்த பாதையை பல வழிகளில் நம் கண் முன்னால் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.
Author: Afzalul Ulama, Moulavi M.I. Muhammed Siddiq Umari, Madani M.A., M.Com.,
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உமர் (ரலி)
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“யாருமே கஷ்டப்பட்டு உழைக்காமல், யா அல்லாஹ்! எனக்கு வாழ்வாதாரத்தைக் கொடு என்று கேட்காதீர்கள். ஏனென்றால் தங்கமும் வெள்ளியும் விண்ணில் இருந்து
கொட்டாது. ஏதாவது உழைப்பில் ஈடுபடுபவருக்குத்தான் அல்லாஹ் வாழ்வாதாரம் வழங்குகிறான்.” இவ்வாறு கூறிவிட்டுப் பின்வரும் வசனத்தை ஓதுவார்: “பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்” (திருக்குர்ஆன் 62:10)
(நிளாமுல் ஹுகூமதுல் இஸ்லாமிய்யா)Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)
அண்ணலார் (ஸல்) அவர்களுக்குப் பின் வந்த கலீஃபாக்களில் பனூஉமய்யா குலத்தின் கலீஃபாவுடைய நேர்மையான – அழகிய வரலாற்று நூல்.
Author: MAAYIL KHAIRABADHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உஸ்மான் (ரலி)
உஸ்மான் (ரலி) அவர்களுடைய சிறப்புப் பெயர்கள், குடும்பம், வம்சம், இஸ்லாத்திற்கு முந்தைய காலம், இஸ்லாத்தை ஏற்ற பிறகு, திருமணம், சோதனை, அபிசீனியா ஹிஜ்ரத், குர்ஆனுடன் தொடர்பு, நபிகளாருடன் நெருக்கம், நற்பண்புகள், மதீனா வாழ்வு, சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள், நாட்டு நலனில் அவரின் பொருளாதாரப் பங்களிப்பு, இரண்டு கலீஃபாக்களுடன் அவருடைய நெருக்கம், அவருடைய ஆட்சியில் அடைந்த வெற்றிகள், கொலையில் முடிந்த பெரும் சோதனை போன்றவை குறித்து ஏராளமான வரலாற்றுச் செய்திகளை இந்நூல் பேசுகிறது.
Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஃபலஸ்தீன வரலாறு போர்க்களத்தின் செய்திகள்
ஃபலஸ்தீன் குறித்து தமிழில் வெளியான பல புத்தகங்களுடன் இந்த நூலை ஒப்பிடுகையில் கருப்பு வெள்ளையாக நேர் எதிராக இந்த நூல் இருப்பதைப் பார்க்கலாம். ஃபலஸ்தீன் வரலாறு குறித்த மிகச் சிறந்த புத்தகமாக இதைப் பார்க்கிறேன்.– மனுஷ்யபுத்திரன்Author: V.S. Mohammed Ameen
Publisher: Islamic Foundation Trust -
-
-
காலடிச் சுவடுகள்
காலடிச் சுவடுகள் வரலாறு படைத்த மனிதர்களின் வரலாற்றிலிருந்து பளிச்சென மின்னுகின்ற காட்சிகளை விவரிக்கின்ற நூல் இது. சின்னச்சின்ன நிகழ்வுகள்தான். ஆனால் எல்லாமே வாழ்க்கைக்கு ஒளியூட்டுகின்ற உதய தாரகைகள். அன்பு, பண்பு, துணிவு, கனிவு, பணிவு, வாய்மை, நேர்மை, தூய்மை, வாக்குத் தவறாமை, எளிமை என அனைத்து நற்குணங்களின் நறுமணத்தை பக்கங்கள் தோறும் நுகர முடியும்.Author: T. AZEEZ LUTHFULLAH
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சிறுபான்மை முஸ்லிம்களுக்கான சட்டம்
ஷரீஅத்தின் – இஸ்லாமிய சட்டங்கள் அடிப்படைகள், கோட்பாடுகள் எக்காலத்திற்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை, மாற்றத்திற்கு உள்ளாக்க முடியாதவை. அதே வேளை ஷரீஅத் ஒவ்வொரு மனிதனுடைய சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளும். மார்க்கத்தைப் பின்பற்றுவதில் அவனுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்காது. தாங்க இயலாத சுமையை அவன்மீது சுமத்தாது.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
சேர சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள்
தமிழகத்தில் இஸ்லாம் பரவிய வரலாறு குறித்தும் அது தொடர்பான சில செய்திகளையும் முன்னிலைப்படுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்கள் குறித்து எழுதப்பட்டுவரும் செய்திகள் ஆசிரியரின் முனைப்பில் சில கூடுதல் தகவல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
Author: P. Sirajudeen
Publisher: ISLAMIC FOUNDATION TRUST