-
ISIS இஸ்லாம் இல்லை
ISIS இஸ்லாம் இல்லை*******************ஐ.எஸ். தொடர்பாக சாதாரணமாக விவாதிக்கப்படாது, தவறான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திகள் தான் இப்புத்தகத்தின் பேசுபொருளாக உள்ளது. இவ்விஷயம் தொடர்பாக இருபதிற்கும் அதிகமான புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலான புத்தகங்களும், ஐ.எஸ்ஸின் உருவாக்கத்திலும் அதனை வளர்த்து வதிலும் அமெரிக்காவின் ஈராக், ஆஃப்கான் ஆக்கிரமிப்பு களுக்கு உள்ள பங்கினைக் குறித்து மறைத்தும், குறைத்தும்தான் பேசுகின்றன. ‘சலஃபி ஜிஹாது’ ‘குளோபல் ஜிஹாது’ போன்ற வார்த்தைகளைப் போட்டு நிரப்பி ஒருவகையான திரையிட்டு உண்மைகளை மறைக்கிறார்கள்.அதனால், இப்புத்தகத்தின் உருவாக்கத்திற்கு அரபுலக மூலங்களைத்தான் முக்கியப்படுத்தியிருக்கின்றோம். ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள பக்கச்சார்பற்ற ஆய்வு களையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.#ISIS பற்றி சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்புத்தகம் வெளியாவது பெரும் மகிழ்வாகும்Author: K.M. Ashraf Keezhuparambu
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அகிம்சை இஸ்லாமியக் கண்ணோட்டம்
“அகிம்சை, அகிம்சை” என்று சொல்வதால் மட்டும் வன்முறை ஒழிந்துவிடாது. அன்பு பற்றி உரத்துப் பேசுவதாலும் அநீதிகள் அகன்று விடா. கொஞ்சம் விழிகளை அகலத் திறந்து பார்க்க வேண்டும். தம்மைச் சுற்றி என்னென்ன கொடுமைகள் நிகழ்கின்றன எனப் பார்த்து அவற்றைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அதிகாலை வருவதற்கு வெகுநேரமா இருக்கிறது?
அதிகாலை வருவதற்கு வெகுநேரமா இருக்கிறது? (ஒருபால் உறவின் விபரீதங்களை விவரித்து அது குறித்து எழும் வாதங்களை உடைத்தெறியும் நூல்)
ஒருபால் உறவில் ஈடுபட்ட ஊரை இறைவன் தலைகீழாகப் புரட்டினான். அவர்களை அழிப்பதற்காக இறைவன் நேரம் குறித்தான். அதிகாலை நேரம். அந்த அதிகாலை நேரம் வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது? என்ற அந்தக் கேள்வி நம்மை உலுக்குகிறது. ஒருபால் உறவில் ஈடுபட்டு வருபவர்கள் திருந்தி மீள்வ-தற்கு இறைவன் எழுப்பும் இந்த வினா ஒன்றே போதுமானது.
இது நமக்குத் தொடர்பில்லாத நூல். இதைப்படித்து என்னாவது? என்று கடந்துவிடாமல் நம் காலத்தில் நிலவும் பெரும் தீமையின் கோரத்தை உணர்வதற்காக நாம் ஒவ்வொரு-வரும் இந்த நூலை வாசிக்க வேண்டும். சமுதாயத்தைச் சீரழிக்கக் கிளம்பியுள்ள இந்த புற்று நோய்க் கட்டிகளை நாம் அகற்றுவதற்கான மருந்துதான் இந்த நூல். மனித இனத்தையே நாசப்படுத்தும் இந்தக் கொடும் அரக்கனுக்கு எதிராக நாம் ஏந்தும் ஆயுதம்தான் இந்த நூல். அந்த வகையில் ஒவ்வொரு-வரும் இந்த நூலை வாசிப்ப-துடன், மக்களுக்கு இத்தீமை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் வேண்டும்.Author: V.S. MOHAMMED AMEEN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அர்த்தமுள்ள நீதி
சமூக நீதி என்றால் என்ன?நவீன மேற்கத்திய அறிவியல் உலகம் கூட சமூக நீதியைப் பெறவில்லையே ஏன்?சமூக நீதி நிலைபெறாததற்குக் காரணங்கள் என்ன?வியக்கத்தக்க வகையில், இஸ்லாம் மட்டும் சமூக நீதி எனும் சிகரத்தை எட்டிப் பிடிப்பதில் மாபெரும் வெற்றி அடைந்துள்ளதே, எப்படி? எல்லாக் கேள்விகளுக்கும் விடை தருகிறது அர்த்தமுள்ள நீதி!Author: MOULANA WAHIDUDEEN KHAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழகிய அண்டை வீடு (மனித உறவுகள் – 1)
அண்டைவீட்டார் என்றால் யார்? அவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன? அவர்களோடு நாம் எப்படி யெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது? என பல்வேறு கேள்வி களுக்கு விடைகளையும் பன்மை சமூகமாக வாழும் நாம் நம் தேசத்தில் ஜாதி மதம் மொழிகளை எல்லாம் தாண்டி தன் அண்டை வீட்டார்களோடு ஒற்றுமையோடும் மனிதநேயத்துடன் எப்படி வாழ்வது என்பதையும் இந்நூல் பேசுகிறது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழிக்கும் ஆணவம் (உளத்தூய்மை- 2)
குடும்பத்தின் அமைதி குலைந்திருக்கிறதா? அங்கு ஆணவம் புகுந்து விட்டது என்று தெரிந்து கொள்ள முடியும். குடும்பம் மட்டுமல்ல சமூகத்திலும் குழப்பங்களும் சிக்கல்களும் உருவாகியிருக்கிறது என்றால் ஆணவம் தனது வேலையைச் செய்யத் தொடங்கி விட்டது என்றே அர்த்தம்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அறிவோம் ஹிஜாப்
ஹிஜாப் தனிப்பட்ட மனிதர்களின் நிலைப்பாட்டை தாண்டி ஒரு தேசப் பிரச்சினையாக உருவாவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ஹிஜாப் பற்றிய விளக்கங்களையும் தெளிவுகளையும் நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தவறான கருத்துக்களை அழித்து ஹிஜாப் பற்றிய உண்மை நிலையை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதத்தில் “அறிவோம் ஹிஜாப்” என்ற இச்சிறு நூலை டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இந்திய முஸ்லிம்கள் – சவால்கள் | சாத்தியங்கள் | செயல்திட்டங்கள்
மதவாதத்தை முறியடிப்பதற்காக நூலாசிரியர் முன்வைக்கின்ற யோசனைகள் உடனடியாக நடைமுறைப் -படுத்தப்பட வேண்டிய சத்தான யோசனைகள். மதச் சண்டைகளுக்குப் பெயர் பெற்ற அலீகர், மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாய் இருக்கின்ற கோழிக்கோடு ஆகிய இரண்டு நகரங்களின் சமூகச் சூழல்களை ஒப்பாய்வு செய்த சமூகவியல் வல்லுநரின் ஆய்வு முடிவுகளும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு நூலாசிரியர் முன்வைக்கின்ற வழிமுறைகளும் கவனத்தை ஈர்க்கின்றன.
முஸ்லிம்களையும் முஸ்லிம் தலைவர்களையும் விளித்து பத்து அம்சத் திட்டம் ஒன்றை நூலின் இறுதியில் தனி அத்தியாயமாகவே வழங்கியிருக்கின்றார் நூலாசிரியர். முத்து முத்தாகத் தரப்பட்டுள்ள இந்தப் பத்தும் செம்மையாகக் கடைப்பிடிக்கப்படுமேயானால் முஸ்லிம்களையும் நாட்டையும் பீடித்துள்ள நெருக்கடிகள் அனைத்தும் பஞ்சாய்ப் பறந்து போகும் என அறுதியிட்டுச் சொல்லலாம்.நூலாசிரியரான சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி நாடறிந்த அறிஞர். பன்னூல் ஆசிரியர். மாணவப் பருவத்திலிருந்தே இந்தியாவையும் இந்திய முஸ்லிம் சமூகத்தையும் நல்ல முறையில் அறிந்து தெளிந்தவர். பொறியியலில் படித்துத் தேர்ந்தாலும் மார்க்கத்திலும் தேர்ச்சியும் புலமையும் பெற்றவர். தொலைநோக்கும் விஷயஞானமும் மிக்கவர். உலகமயமாக்கலின் கோர விளைவுகளைத் துல்லியமாகக் கணித்து எச்சரித்த சிந்தனையாளர். இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் அகில இந்தியத் தலைவராகப் பணியாற்றியவர். தற்சமயம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவராக இருக்கின்றார்.
Author: SYED SADATHULLAH HUSSEINI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இந்திய முஸ்லிம்கள் இனி செய்ய வேண்டியது என்ன?
இன்று முஸ்லிம் உலகம் நெருக்கடியான, சோதனையான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கின்றது. உலக அளவில் அமெரிக்க, சியோனிச, ஏகாதிபத்தியவாதிகள், நமது நாட்டளவில் வலதுசாரிகள், வகுப்புவாதிகள், முஸ்லிம் வெறுப்பாளர்கள் ஆகியோரின் பன்முகத் தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் ஆளாகின்றனர்.இத்தகைய சூழலில் உணர்ச்சிவசப்படாமலும், அச்சப்படாமலும், நம்பிக்கை இழக்காமலும், தோல்வி மனப்பான்மையில் துவளாமலும், இறைவனின் மீதும் இறை மார்க்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு விவேகத்தின் அடிப்படையில் ஷரீஅத்திற்கு உட்பட்ட முடிவுகளை எடுத்து முஸ்லிம் சமுதாயம் செயல்பட்டால் நிலைமைகள் மாறும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இமாம் ஹுஸைன் உயிரைக் கொடுத்தது எதற்காக?
இமாம் ஹுஸைன் அவர்களின் மீது பேரன்பும் மாசற்ற பற்றும் கொண்டிருக்கின்ற பெரும்பாலோருக்கு அவர் எந்த நோக்கத்திற்காக தன்னுடைய இன்னுயிரைத் துறப்பதற்கும் தயாரானார்? தன்னுடைய அன்பு மகனார்களையும் இழந்து விடுவதற்கு ஏன் துணிந்தார் என்பது பற்றிய உண்மைநிலை தெரிந்திருப்பதில்லை.
Author: Moulana Syed Abul A’la Moududi (Rah)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமும் அரசியலும்
சமுதாய வாழ்க்கையில் அமைதி நிலவ வேண்டும் என்றால் அங்கு அரசியல் இருக்க வேண்டும்.
அரசியல் ஒரு சாக்கடை என்று நினைத்து அதை விட்டு விலகுவது மிகப் பெரிய தவறாகும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமும் கூட்டமைப்பும்
ஒற்றுமையின்மை மற்றும் உட் சிதைவுக்கு உதாரணமாக மாறிப்போன நவீன முஸ்லிம் சமுதாயத்தை ஒருங்கிணைத்து அவர்களை இஸ்லாமிய அடிப்படைகளில் மறுகட்டமைப்பு செய்வதுதான் இன்றைய மிக முக்கிய தேவையாகும்.
Author: Moulana Sadruddin Islahi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் வெற்றிபெற
* இஸ்லாம் வெற்றிபெற வேண்டும்.
* இஸ்லாம் வெற்றி பெற்றால் முஸ்லிம்கள் வெற்றி பெறுவர்.
* எது உண்மையான வெற்றி?
* வெற்றியை அடையும் வழிமுறைகள் என்ன என்பதை அலசும் நூல்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உறுதிமிக்க போராட்டத்தின் எழுபத்தைந்து ஆண்டுகள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு ஆக்ககரமான, அமைதியான வழிமுறைகளின் மூலமாக, மக்களின் சிந்தனையில், கருத்துப்பரவலின் வாயிலாக மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மனங்களை வென்றெடுப்பதன் மூலமாக தன்னுடைய நோக்கத்தை அடைவதற்கு கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
கடந்த 75 ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்கள், மற்றும் முஸ்லிம் அல்லாத சமூகங்களில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆற்றிவரும் அரும் பணிகள், அதனால் ஏற்பட்ட நல்ல தாக்கங்கள் ஆகியவற்றை மிக அழகாக விவரிப்பதுடன், இன்றைய காலச் சூழலில் இனி செய்ய வேண்டியதையும் மிகத் தெளிவாக இப்புத்தகம் உணர்த்தியுள்ளது.
Author: SYED SADATHULLAH HUSSEINI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
கருத்துவேறுபாடுகள் அழிவா? அருளா?
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUS -
குடும்ப உறவுகளை குலைக்கலாமா? (மனித உறவுகள் – 2)
உறவைப் பேணுவதின் அவசியத்தையும், என்ன காரணங்களால் குடும்ப உறவு சீர்குலைகிறது என்பதையும், குடும்ப உறவுகள் குலையாமல் பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதையும், குர்ஆன் மற்றும் சுன்னா ஒளியில் மிக அற்புதமாகத் தொகுத்து தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
குர்ஆனாக வாழ்வோம்
“என் இறைவனிடமிருந்து எனக்கு அனுப்பப்படுகின்ற வஹியை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். இது உங்கள் இறைவனால் வழங்கப்பட்ட தெளிவான சான்றாகும். மேலும், (இதனை) நம்புகின்ற சமுதாயத்தாருக்கு இது நேர்வழி காட்டக்கூடியதாகவும், ஓர் அருளாகவும் இருக்கின்றது.” (திருக்குர்ஆன் 7:203)
Author: Moulana Sadruddin Islahi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
கொரோனா துயரமும் நாமும்
இந்த நூல் மாறுபட்ட நூல். பிரச்னைகளைப் பேசுகின்ற, அலசுகின்ற அதே வேளையில் தீர்வையும் செயல்திட்டத்தையும் தருகின்ற நூல்.
எந்த நோக்கங்களுடன் இறைவன் இந்தப் பேரிடரை ஏற்படுத்தியிருக்கின்றான் என்பது நமக்குத் தெரியாது. அவனுடைய நாட்டங்கள் என்ன? எந்த மனிதர்களை அவன் தண்டிக்க விரும்புகின்றான்? எந்த மனிதர்களை எச்சரிக்க நாடுகின்றான்? எந்த மனிதர்களை சோதிக்க விரும்புகின்றான் எதுவுமே நமக்குத் தெரியாது. ஆனாலும் ஒன்று. நாம் அனைவரும் இறைவனின் பக்கம் மீள வேண்டும். அவனிடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும். பிழைகளைப் பொறுத்து அருளும்படி அவனிடம் மன்றாட வேண்டும். அத்தோடு நம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஆராயவேண்டும். தனிப்பட்ட வாழ்வையும் நடப்பையும் அன்றாட அலுவல்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கூட்டு நடத்தையையும் ஆய்வு செய்ய வேண்டிய நேரமிது.
இன்றைய சோதனைக்குரிய நாள்களில் சாமான்யர்கள் முதல் தலைவர்கள் வரை, பாமரர்கள் முதல் அறிஞர்கள் வரை, மாணவர்கள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
Author: SYED SADATHULLAH HUSSEINI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சமுதாயத்தின் எதிர்காலமும் பள்ளிவாசல் இமாம்களும்
இந்த இனிய நூல் சமுதாயத்தின் மையமாக இருக்கின்ற பள்ளிவாசலின் முக்கியத்துவத்தையும் தனிச்சிறப்பையும் சொல்லும் நூல். பள்ளிவாசல் இமாம்களின் அந்தஸ்தையும் பொறுப்புகளையும் விவரிக்கும் நன்னூல்.
Author: KHURRAM MURAD
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சமூகப் பாதுகாப்பு இந்தியச் சூழலில்…
பெரும்பான்மை சமூகத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களின் கடமை என்ன? பன்மைச் சமூகத்துடன் இணைந்து வாழும் இந்திய முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பு என்ன? பிற சமூகங்களுடனான ஒத்துழைப்பில் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள் யாவை? முஸ்லிம்களின் கலாச்சாரம், தனித்தன்மை, பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? போன்ற கேள்விகளுக்கு இஸ்லாமிய கொள்கைகளின் வெளிச்சத்தில், ஆய்வுக் கண்ணோட்டத்துடன் இந்நூல் பதிலளிக்கிறது.
Authors: Dr. Abdus Salam Ahmed, Sheikh Muhammad Karakunnu
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
தவக்குல் இறைவனைச் சார்ந்திருத்தல் (உளத்தூய்மை- 6)
இந்த நூலை படிக்கின்ற எவருக்கும் தவக்குல் என்கிற கோட்பாட்டின் சரியான புரிதலை தந்து இனம் புரியாத மனவலிமையை ஏற்படுத்தி சாதிக்கத் துடிக்கும் சாமானியர்களையும், வெற்றியின் விளிம்பிற்கே இந்த நூல் அழைத்துச் செல்லும் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
திக்ர் – இறைதியாகம் (உளத்தூய்மை- 7)
பொதுவாக, இஸ்லாத்தில் பல அம்சங்களை ஒரு குறுகிய வட்டத்தில் சுருக்கிப் பார்த்தே பழகிய முஸ்லிம் உம்மத், இறைதியானம் (திக்ர்) என்பதையும், சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் போன்ற ஒரு சில வார்த்தைகளோடு சுருக்கி வைத்து விட்டது. இந்த கண்ணோட்டம் சரிசெய்யப்பட வேண்டும்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தீண்டாமை
தீண்டாமை எனும் கொடிய நோயைக்களைவதற்கான வழிகளை திருமறைவசனங்களைக் கொண்டு எளிய நடையில்விளக்கும் நூல்!Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தீமைகள் புயலாய் வீசும் போது
சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் தீமைகள் புயலாய் வீசும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் நூல்!
Author: MOUAHAMMED YUSUF ISLAHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தொழிலாளி – முதலாளி உரிமைகள் – கடமைகள் – உறவுகள்
சமூக நீதி என்பது இட ஒதுக்கீட்டைத் தாண்டி பல பரிமாணங்களைக் கொண்டது. சமூகத்தில் வாழும் அனைவருக்கும் சமமான சமூக, அரசியல், பொருளாதார உரிமை கிட்டுவதே சமூக நீதியாகும். கணவன் – மனைவி, பெற்றோர் – பிள்ளைகள், உறவினர்கள், அண்டை வீட்டினர், நலிவுற்ற பிரிவினர் ஆகிய அனைவருக்கும் உரிமைகள் கிட்ட வேண்டும். ஏழைக்கும் உரிமை உண்டு, பணக்காரனுக்கும் உரிமை உண்டு. தொழிலாளி – முதலாளி இருவருக்கும் உரிமை உண்டு. ஆள்வோர் – ஆளப்படுவோர் இருவருக்கும் உரிமைகள் உண்டு. உரிமைகள் ஒரு வழிப் பாதையாய் இருக்கக்கூடாது. ஒருவரின் உரிமை மற்றவருக்குக் கடமையாகி-விடுகிறது. உரிமையும் கடமையும் இணைந்தே வர வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே சமூகத்தில் அமைதி நிலவும்.இந்த நூலில் தொழிலாளி – முதலாளி உரிமைகள் கடமைகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் உரிமை குறித்து 19ஆம் நூற்றாண்டிலிருந்துதான் பேசப்பட்டு வருகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொழிலாளி – முதலாளி உரிமைகள், கடமைகள், உறவுகள் பற்றிய அடிப்படைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. இஸ்லாத்தின் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டால் போராட்டங்களுக்கோ ஆர்ப்பாட்டங்களுக்கோ அவசியம் எழாது. இந்தச் செய்தியை மிகவும் ஆழமாகப் பதிவு செய்கிறது இந்நூல்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நயவஞ்சகம் அன்றும் இன்றும் (உளத்தூய்மை- 3)
நயவஞ்சகத்தனத்தின் ஆபத்தை உணர்த்தி, இது மற்ற என்னென்ன தீய குணங்களையெல்லாம் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது என்பதையும் பட்டியலிட்டு, இறுதியாக அம்மனிதனை ஒரு கோழையாகவும் பலவீனமானவனாகவும் ஆக்கி ஒழுக்க வீழ்ச்சியின் இறுதி எல்லைக்கே அவனைக் கொண்டு போய் சேர்த்து விடுகிறது என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நல்ல தீர்ப்பு
உலகில் பிரச்னைகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனங்களுக்கு இறைவனின் உண்மை நிலையை உணர்த்தி, உன்னத வழிகாட்டுதலை வழங்குகிறது இந்நூல்.
Author: MATHEEN THARIQUE
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நன்றி செலுத்தினால் நமக்கே நன்மை (உளத்தூய்மை- 9)
இறைவன் மனிதனுக்கு செய்த அருட்கொடைகளை பட்டிய லிட்டு மனிதன் இறைவனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நன்றி செலுத்த வேண்டும் என்பதையும் இறைத்தூதர்களின் முன்மாதிரிகளை எடுத்துக்காட்டி நமக்கு புரிய வைக்கிறது இந்நூல்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
நாணமும் மானமும் (உளத்தூய்மை- 8)
நாணம் ஆண் பெண் இருவருமே பேணவேண்டிய பண்பாகும், ஏனோ இதை பெண்களுக்கு மட்டுமே உரியதாக சமூகம் ஆக்கிவிட்டிருக்கிறது.
நாணமும் மானமும் உள்ள சமூகத்தை உருவாக்குவதில் பெற்றோர்களுக்கும், கல்வியாளர்களும், ஆசிரியர்
களுக்கும் எவ்வளவு தூரம் பொறுப்புகள் உண்டு என்பதை விவரித்து இருக்கிறார் இந்நூலாசிரியர்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பகட்டு – ரியா படைத்தவனுக்காகவா? பகட்டிற்காகவா? (உளத்தூய்மை- 4)
எந்தச் செயலானாலும் அச்செயலின் தாக்கத்தை விட அச்செயலின் நோக்கம் முதன்மை பெறுகிறது. செயல் நற்செயலாக இருந்தால் அதன் தாக்கமும் நன்மையாகவே அமையலாம், ஆனால், அச்செயலுக்கு பின்னால் மறைந்திருக்கும் நோக்கம், தீயதாக இருந்தால் அது நயவஞ்சகத்தனமாகிவிடும்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பன்முக சமூகத்தில் முஸ்லிம்களின் பொறுப்புகள்
பன்மைச் சமூகங்கள் பற்றிய விவாதம் இன்று நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மும்முரமாக நடந்துவருகின்ற நிலையில் பன்மைச் சமூகத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியதென்னவென்பது குறித்து நூலாசிரியர் பதிவு செய்துள்ள பரிந்துரைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
குறிப்பாக சமூகச் செயல்பாடுகளில் மும்முரமாகப் பங்கேற்பதன் (Social Engagement) மூலமாகத்தான் சிறப்பான முறையில் அழைப்புப் பணியாற்ற முடியும் என்கிற ஆணித்தர
மான கருத்தும் ‘சமகால சமூக அவலங்களைக் களைவதற்காக யாதொரு முன்னெடுப்பும் செய்யாமல் அன்றாட வாழ்விலிருந்து தம்மைத் துண்டித்துக்கொண்டு வெறுமனே போதகராக தேங்கி நின்றுவிடக் கூடாது’ என்கிற அழகிய அறிவுறுத்தலும் அழைப்பாளர்கள் ஒவ்வொருவரும் எந்நேரமும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டிய முத்தான கருத்துகளாகும்.
முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப்படாத வரையில் பன்மைச் சமூகத்தில் இஸ்லாமிய தாக்கங்களை ஏற்படுத்துகின்ற எந்தவொரு செயல் உத்தியும் முழுமையடை-யாது என்கிற நூலாசிரியரின் கருத்து இன்றையக் காலத்தில் அதிகமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.மொத்தத்தில் கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது என்பதற்கேற்ப பன்மைச் சமூகம் தொடர்பான அனைத்துப் பரிமாணங்களையும் அழகாக, நிறைவாக, நேர்த்தியாக சிந்தனையைத் தூண்டுகின்ற விதத்தில் தொகுத்துத் தந்திருக்கின்றார் நூலாசிரியர்.
களத்தில் இருக்கின்ற அழைப்பாளர்கள் மட்டுமின்றி சமுதாயத் தலைவர்கள், ஆலிம்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், குடும்பத் தலைவிகள் என எல்லாத் தரப்பினரும் வாசிக்க வேண்டிய அழகிய நூல்தான் இந்நூல்.Author: SYED SADATHULLAH HUSSEINI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பன்மை சமூகத்தில் வாழும் முஸ்லிம்கள்
Author: DR. FAZLUR RAHMAN FAREETH
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பாவமன்னிப்பு எப்போது? எப்படி? (உளத்தூய்மை- 5)
பாவமன்னிப்புக்கான வழிமுறைகளையும் அதற்கான நிபந்தனைகளையும் தொகுத்துத் தந்துள்ளார். பாவ மன்னிப்பால் மானுடம் அடையும் நன்மைகளையும் பதிவு செய்யத் தவறவில்லை.
பாவம் செய்தவனை எந்தெந்த அம்சங்கள் அவனை அதிலிருந்து மீள விடாமல் தடுக்கிறது என்பதையும் விவரித்திருக்கிறார்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
புரட்சி தூது
வாழ்வின் எல்லாத் துறைகளிலும் அண்ணலார் (ஸல்) கொண்டு வந்த ஈடிணையற்ற தனிப்பெரும் புரட்சியின் தன்மையை இரு வேறு கோணங்களில் தருகிறார்கள் இந்நூலின் ஆசிரியர்கள்.
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பெருமானார் எடுத்துரைத்த தீய குணங்கள் நற்குணங்கள்
மனிதகுலம் களைய வேண்டிய தீயகுணங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய நற்குணங்களையும் பட்டியலிடும் சிறு தொகுப்பு.
Author: MOULANA JALEEL AHSAN NADVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பொறாமைத் தீ (உளத்தூய்மை- 1)
பொறாமையால் ஏற்படுகின்ற பாதிப்பு ஏழை – பணக்காரன், படித்தவன் – பாமரன் என எந்த வித்தியாசமும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தி அவன் சம்பாதித்து வைத்த நன்மைகள் அனைத்தையும் அழித்துவிடுகிறது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பொறுமை (உறுதி – நிலைகுலையாமை) (உளத்தூய்மை- 10)
இத்தலைப்பில் எண்ணற்ற நூல்கள் வந்திருந்தாலும் இந்நூலில் ‘காரணங்கள் யாவை? அதற்கான தீர்வுகள் என்ன?’ என்கிற அடிப்படையில் தனக்குரிய தனி பாணியில் அலசியிருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மத்ஹபுகள் சர்ச்சைகள் தேவையா?
விவாதத்திற்குரிய பிரச்னையின் பல்வேறு அம்சங்கள் குறித்து அறிவார்ந்த ரீதியிலும் கொள்கைப் பூர்வமாகவும்மௌலானா அவர்கள் நன்கு விளக்கிக் கூறியுள்ளார்கள். பிரச்னையோடு தொடர்புள்ள அனைத்துப் பிரிவினரும் அமைதியுடன் ஆற அமர அதைப் பற்றிச் சிந்திப்பார்கள் என்று நம்புகின்றோம்.
Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மனித இனத்தின் ஆக்கமும், அழிவும்
மனித இனத்தின் ஆக்கமும் அழிவும்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மனித குலத்தை ஒருங்கிணைக்க
அனைத்து மதப் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட, சர்வதேச கருத்தரங்கில் ஆற்றப்பட்ட அருமையான உரையின் தொகுப்பு!
Author: MOULANA MOHAMED YUSUF
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முஸ்லிம் தனியார் சட்டமும் முஸ்லிம்களின் பொறுப்புகளும் – டாக்டர் ரஜீயுல் இஸ்லாம் நத்வி
முஸ்லிம் தனியார் சட்டத்தின்மீது கவனத்தைச் செலுத்துவதும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதும் முஸ்லிம்கள் இஸ்லாமியச் சட்டங்-களின்படி செயல்படுகின்ற உணர்வை, தெளிவை ஏற்படுத்துவதும், முஸ்லிம்களின் குடும்பச் சட்டங்கள் குர்ஆனியக் கட்டளைகளின் ஒரு பகுதி, நீதியும் நேர்மையும் செறிந்தவை என்பதை நாட்டின் இதர சகோதர சமுதாயங்-களைச் சேர்ந்த மக்களுக்குப் புரிய வைப்பதும் இந்நூலின் நோக்கமாகும்.
– டாக்டர் ரஜீயுல் இஸ்லாம் நத்வி
Author: DR. RAZIUL ISLAM NADWI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முஸ்லிம் தனியார் சட்டம்
முஸ்லிம் தனியார் சட்டத்தின் நன்மை, அதன் முக்கியத் துவம், அதில் திருத்தங்கள் கொண்டு வருவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கும் நூல்!
Author: SHAMS PEERZADA
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மெளலானா மெளதூதி பதில்கள் (பாகம் – 2)
இறைவேதம், இறைத்தூதர்கள், நபி முஹம்மத் (ஸல்), காதியானிகள், நபிமொழிகள், நபித்தோழர்கள், இறைநம்பிக்கை தொடர்பான 40 கேள்விகளுக்குரிய பதிலை இந்நூலில் மௌலானா அவர்கள் அழகாக கொடுத்துள்ளார்கள்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மெளலானா மெளதூதி பதில்கள் (பாகம் – 3)
மார்க்கச் சட்டங்கள், இஸ்லாமும் பெண்களும், மருத்துவமும் இஸ்லாமும், இறை வணக்கம், பொருளாதாரம், இஸ்லாமிய இயக்கம் மற்றும் பொதுவான அதே சமயம் முக்கியமான 46 கேள்விகளுக்குரிய பதிலை இந்நூலில் மௌலானா அவர்கள் அழகாக கொடுத்துள்ளார்கள்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வட்டி ஒரு கொடுமை
வட்டி பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வகையிலும் பொருந்தாது என்பதனை நிரூபிக்கும் இந்நூல் அறிவுத் தொடர்பானது! ஆற்றல் மிக்க விளக்கங்கள் தருவது!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வட்டியை ஒழிப்போம்
வட்டி என்பது நீதிக்கும் மானுட உணர்வுக்கும் எதிரானது என்பதையும், வாழ்வின் நிம்மதியை அழிக்கக் கூடியது என்பதையும் குறைவான சொற்களில் நிறைவாக விளக்குகிறார் நூலாசிரியர். பொருளாதார நீதி நிலைகுலைந்து போனதற்குக் காரணமே வட்டி அடிப்படையிலான தற்கால வங்கிகள்தாம் என்று மேற்கத்திய பொருளியல் மேதைகள் கூறுவதையும் நூலாசிரியர் தக்க ஆதரங்களுடன் எடுத்துரைக்கிறார். வட்டியை ஒழிப்பதற்கான மாற்று ஏற்பாடாக லாப, நஷ்டத்தில் பங்கு வகிக்கும் வட்டியில்லா வங்கிமுறை பற்றிச் சுருக்கமாக இந்நூல் விளங்குகிறது நூலாசிரியர் டாக்டர் உமர் சாப்ரா பன்னாட்டளவில் புகழ்பெற்ற பொருளியல் அறிஞர் ஆவார். சர்வதேச அளவில் நடைபெற்ற இஸ்லாமியப் பொருளியல் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தவர்.
Author: DR. M. UMER CHAPRA
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஷாஹீன்பாக் – குறுநாவல்
“வெளிப்படையான மதப் பாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கூடிய குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகநாடெங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடிய ஒரு போராட்ட வரலாற்றின் கதையை எதிர்காலத்திலிருந்து பின்னோக்கிப் பார்த்து விவரிக்கிற இந்நாவலை இஸ்லாமிய இலக்கியப் பரப்பில்வெளிவந்த ஒரு முக்கிய பங்களிப்பாகப் பார்க்கிறேன்.எதிர்வரும் தலைமுறை ஷாஹீன் போராட்டம் குறித்தும்அதன் வலிகள், தியாகங்கள் குறித்தும் அறிந்து கொள்ளும்படியானஓர் ஆவணமாக வெளிப்பட்டிருக்கிறது.”– இயக்குநர் மீரா கதிரவன்Author: V.S. MOHAMMED AMEEN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஹலால் ஹராம் – அனுமதிக்கப்பட்டவை விலக்கப்பட்டவை
டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி அவர்களுடைய தலை சிறந்த படைப்புகளில் ஒன்றுதான் ஹலால் ஹராம் எனும் இந்நூல். எது ஹலால் எது ஹராம் என்பது குறித்து இந்த நூற்றாண்டில் வெளிவந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்றாகும் இது.
தனிமனிதன், குடும்பம், சமூகம் போன்ற நிலைகளில் நாம் சந்திக்கும் ஒட்டுமொத்த பிரச்சினைகளில் எவையெல்லாம் அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) எவையெல்லாம் தடை செய்யப்பட்டவை (ஹராம்) என்பது குறித்து அல்குர்ஆன், ஹதீஸ் ஒளியில் இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் மற்றொரு நூல் வெளிவந்துள்ளதா என்று தெரியவில்லை.
1994 ஆம் ஆண்டு வெளிவந்த அல்ஹலால் வல் ஹராம் என்ற அரபு நூலின் பதினைந்தாவது பதிப்பையே தமிழ் மொழிபெயர்ப்புக்கு நாம் உபயோகப்படுத்தியுள்ளோம்.
ஆங்கிலம், உர்து, டர்கிஷ் போன்ற மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘பெஸ்ட் செல்லர்’ என்று அழைக்கப்படும் எப்போதும் அதிகமாக விற்பனையாகும் அரபி நூல்களில் இதுவும் ஒன்று.
Author: DR. YUSUF AL QARDHAWI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST