-
இதுதான் இறைநெறி போராட்டம்
அண்ணலார் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழரான அபூபக்கர் (ரலி) அவர்களின் தியாக வாழ்வை விளக் கும் நூல்.
Author: ABDUL WAHIDKHAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இந்திய சூழலும் முஸ்லிம்களும்
Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இந்தியாவில் இஸ்லாமிய இயக்கம்
இஸ்லாமிய இயக்கத்தைப்பற்றி அறிந்துகொள்ள தமிழில் போதிய நூல்கள் இல்லை. அக்குறையை நிறைவு செய்ய வந்திருக்கும் நூல் இது.நவீனகால இஸ்லாமிய இயக்கங்கள் தோன்றிய பின்னணியோடு தொடங்கும் நூல் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் துவக்கம் வரை பேசுகிறது.Author: SHAIKH MUHAMMAD KARAKUNNU
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
-
இயக்கம் வெற்றி பெற
இயக்கப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு ஊழியரும் இயக்கத்தின் வெற்றிக்காகத் தம்மை தயார் படுத்துவது குறித்து விளக்கும் நூல்! இயக்க ஊழியர்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இஸ்லாத்தின் அரசியல் கொள்கை
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய இயக்கம்
சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நூலில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் என்ன, நாம் எத்தகைய வாழ்வு வாழவேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது. முஸ்லிம்களின் முக்கியப் பொறுப்புகள் யாவை, தீனை – மார்க்கத்தை நிலைநாட்டுவதன் கருத்து என்ன, தேவை என்ன போன்ற அடிப்படை செய்திகள் தக்க ஆதாரங்களுடன் அழுகுற எடுத்துரைக்கிறது.
Author: MOULAVI R. ABDUR RAWOOF BAQAVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இஸ்லாமிய மறுமலர்ச்சி
இஸ்லாமிய மறுலர்ச்சி என்றால் என்ன?இஸ்லாமிய மறுமலர்ச்சியைத் தோற்றுவிப்பவர்களின் – அதாவது முஜத்தித்களின் வரைவிலக்கணம் என்ன?ஒருவரை ‘முழுமையான மறுமலர்ச்சியாளர்’ என்று எப்படி மதிப்பிடுவது?இஸ்லாமிய வரலாற்றில் இதுவரை தோன்றிய முஜத்தித்கள் யார் யார்? அவர்களுடைய சாதனைகள் என்ன?இமாம் மஹ்தி அவர்களின் தகுதிநிலையும் முன்னறிவிப்புகளும் வருகையும் எத்தன்மை வாய்ந்தவை?– இன்னும் இது போன்ற பல வினாக்களுக்கும் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் இந்த நூலின் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய வாழ்வு – குத்பாப் பேருரைகள்
மௌலானா மௌதூதி அவர்களின் குத்பாப் பேருரை நூல் சாதாரணப் புத்தகம் அல்ல!கல்வியறிவற்ற பாமர மக்களுக்குப் புரியும் வகையில் அவர்களின் அன்றாட வாழ்வில் பழக்கப்பட்ட விஷயங்-களைக் கொண்டே – அடிப்படையான உண்மைகளை எடுத்துரைக்கிறது.மௌலானா மௌதூதி அவர்களின் இதர நூல்களைவிட இந்தப் பேருரை மக்களிடம் இறையருளால் அதிக தாக்கங்களை ஏற்படுத்தி யிருக்கிறது. இது நிறைய இதயங்களைத் தட்டியெழுப்பி, பலருடைய வாழ்க்கைக்குப் புதிய வடிவம் கொடுத்தது. தம் விருப்பப்படி வாழாமல் வல்ல இறைவனுக்கே அடிபணிந்து வாழும் மனோநிலையை மக்களிடம் ஏற்படுத்தியது.
அன்று தாருல் இஸ்லாத்தின் சின்னசிஞ்சிறு மஸ்ஜிதில் மௌலானா அவர்களுக்கு எதிரில் சாதாரண கிராம மக்கள்தாம் இருந்தார்கள். அம்மக்கள் அரசியலோ, வரலாறோ, தத்துவமோ அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குத் தெரிந்திருந்த விஷயங்கள்1. இறைநம்பிக்கை,2. இஸ்லாத்தின் அடிப்படைகளான 5 கடமைகள் மட்டும்தான். எனவேதான், இவ்விரு விஷயங்களை வைத்துக்கொண்டு எளிய மொழியில் அந்தக் கிராம மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் இந்த உரைகளை அமைத்தார் மௌலானா.பல ஆண்டுகள் உருண்டோடி விட்டபோதிலும் அவ்வுரை ஏற்படுத்திய புத்துணர்ச்சியை இன்னும் நம்மால் உணர முடிகிறது.Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமும் கூட்டமைப்பும்
ஒற்றுமையின்மை மற்றும் உட் சிதைவுக்கு உதாரணமாக மாறிப்போன நவீன முஸ்லிம் சமுதாயத்தை ஒருங்கிணைத்து அவர்களை இஸ்லாமிய அடிப்படைகளில் மறுகட்டமைப்பு செய்வதுதான் இன்றைய மிக முக்கிய தேவையாகும்.
Author: Moulana Sadruddin Islahi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உறுதிமிக்க போராட்டத்தின் எழுபத்தைந்து ஆண்டுகள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு ஆக்ககரமான, அமைதியான வழிமுறைகளின் மூலமாக, மக்களின் சிந்தனையில், கருத்துப்பரவலின் வாயிலாக மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மனங்களை வென்றெடுப்பதன் மூலமாக தன்னுடைய நோக்கத்தை அடைவதற்கு கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
கடந்த 75 ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்கள், மற்றும் முஸ்லிம் அல்லாத சமூகங்களில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆற்றிவரும் அரும் பணிகள், அதனால் ஏற்பட்ட நல்ல தாக்கங்கள் ஆகியவற்றை மிக அழகாக விவரிப்பதுடன், இன்றைய காலச் சூழலில் இனி செய்ய வேண்டியதையும் மிகத் தெளிவாக இப்புத்தகம் உணர்த்தியுள்ளது.
Author: SYED SADATHULLAH HUSSEINI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
குர்ஆனாக வாழ்வோம்
“என் இறைவனிடமிருந்து எனக்கு அனுப்பப்படுகின்ற வஹியை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். இது உங்கள் இறைவனால் வழங்கப்பட்ட தெளிவான சான்றாகும். மேலும், (இதனை) நம்புகின்ற சமுதாயத்தாருக்கு இது நேர்வழி காட்டக்கூடியதாகவும், ஓர் அருளாகவும் இருக்கின்றது.” (திருக்குர்ஆன் 7:203)
Author: Moulana Sadruddin Islahi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சத்தியப் பேரொளி
‘இறைவன் ஒருவனே’ எனத் தொடங்கி அண்ணலாரின் வாழ்க்கை, இஸ்லாமியப் பண்பாடுகள் பற்றிக் கூறும் எளிமையான நூல். பர்தா, தலாக், பலதாரமணம் என பல்வேறு வகையான பொருள்களைப் பற்றியும் பேசி சத்தியப் பேரொளி எழுப்புகிறது.
Author: IBRAHIM SAYEED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சமூகப் பாதுகாப்பு இந்தியச் சூழலில்…
பெரும்பான்மை சமூகத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களின் கடமை என்ன? பன்மைச் சமூகத்துடன் இணைந்து வாழும் இந்திய முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பு என்ன? பிற சமூகங்களுடனான ஒத்துழைப்பில் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள் யாவை? முஸ்லிம்களின் கலாச்சாரம், தனித்தன்மை, பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? போன்ற கேள்விகளுக்கு இஸ்லாமிய கொள்கைகளின் வெளிச்சத்தில், ஆய்வுக் கண்ணோட்டத்துடன் இந்நூல் பதிலளிக்கிறது.
Authors: Dr. Abdus Salam Ahmed, Sheikh Muhammad Karakunnu
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சுதந்திரச் சிந்தனைகள்
சுதந்திரம் குறித்து மட்டுமல்ல – அடிமைத்தனம், பெண், போர் முறைகள், தமிழர் மரபு, இஸ்லாமிய மார்க்கம் என விரிவான – சுவையான தளங்களில் இயங்கி பல நல்ல கருத்துகள் பதிவுகளாக்கப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ள ஏழு கட்டுரைகளும் வானவில்லின் நிறங்களைப் போல தனித் தனி வண்ணமும், வனப்பும் கொண்டவைதாம்; எனினும், அந்த ஏழு படைப்புகளையும் ஒருங்கிணைப்பது பிரபஞ்சனின் இஸ்லாமிய அணுகுமுறை…!பிரபஞ்சன்Author: PRABANJAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சென்னைப் பேருரை
சென்னை பேருரை சுதந்திர இந்தியாவில் – இந்து, முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர், தலித், பவுத்தர் என இணைந்துவாழும் ஒரு பன்மைச் சமூகத்தில், முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும்? எதற்கு முன்னுரிமை தர வேண்டும்? எந்தெந்த பணிகளைச் செய்ய வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதே ‘சென்னைப் பேருரை’ எனும் இந்நூல். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இஸ்லாமிய அறிஞர் உலகெங்கும் போற்றப்படும் மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் […]
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தஸ்கியா வழிகாட்டி – Tazkiya Guide
குர்ஆனின் முதன்மைச் சொல்லே (Key Word) தஸ்கியா-தான். தம்முடைய தஸ்கியா பற்றிய கவலையில்லாத எந்தவொரு மனிதராலும் குர்ஆனிய அடிப்படையில் வாழ்க்கையைக் கட்டமைக்கின்ற பணியை மேற்கொள்ளவே முடியாது. இன்னும் சொல்லப் போனால் வாழ்வின் முதன்மை நோக்கமே தஸ்கியாதான்.
‘மனத்தைத் தூய்மைப்படுத்திக் கொண்டவன் (தஸ்கியா செய்துகொண்டவன்) வெற்றி பெற்றுவிட்டான்’ என்றே குர்ஆன் உரத்து முழங்குகின்றது. தஸ்கியா என்பது கருத்துச் செறிவுமிக்க சொல். இதயத்தைத் தூய்மைப்படுத்துகின்ற தொடர் முயற்சியை உணர்த்துகின்ற அதே வேளையில் மனித ஆளுமையை மேம்படுத்துகின்ற இடைவிடாத போராட்டத்தை உணர்த்துகின்ற புரட்சிகரச் சொல்லாகவும் அது இருக்கின்றது.
‘அந்நாளில் செயல்கள் எடைபோடப்படுவது சத்தியம் ஆகும். எவர்களுடைய நன்மைகளின் எடை கனமாக இருக்குமோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்’ (அத்தியாயம் 7 அல்அஃராஃப் 8) என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது. நம்மை நாமே தஸ்கியா செய்துகொள்வதில், நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வதில் தொடர் கவனம் செலுத்தினாலே-யொழிய நம்மால் நம்முடைய நன்மைகளின் எடையைக் கூட்டிக்கொள்ள முடியாது என்பது வெளிப்படை.
இயக்கத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் மட்டுமின்றி, தஸ்கியாவை மேம்படுத்திக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற விரும்புகின்ற ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நன்னூல்தான் இது.
Author: Moulana Waliullah Sayeedi Falahi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தீனை நிலைநாட்டுங்கள்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
நாட்டு நடப்பும் நமது பொறுப்புகளும்
Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மக்கள் சேவை
பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், ஆலிம் பெருமக்கள், அரபிக் கல்லூரிகள், மார்க்கக் கல்விக் கூடங்கள் என எல்லாரிடமும், எல்லா இடங்களிலும் இந்தச் சீரிய நூல் சென்று சேர வேண்டும்; அதன் மூலம் சமுதாய மாற்றங்கள் சாத்தியமாக வேண்டும் என்பது எங்கள் பேரவா.
Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: ISLAMIC RESEARCH INSTITUTE -
முஸ்லிமின் அடிப்படைக் கடமை
சிந்தையைக் கிளறும் இந்நூலில் இஸ்லாமிய சமுதாயத்தின் பிரச்னைகள், பொறுப்புகள், கடமைகள் ஆகிய அனைத்தும் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இன்று முஸ்லிம்கள் பல்வேறுபட்ட ஆபத்துகள், துன்பங்கள் ஆகியவற்றால் சூழப்பட்டிருப்பதற்கான ஒரே காரணம், அவர்கள் தங்களின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும் விஷயத்தில் அலட்சியம் காண்பித்ததுதான் என்றும், தங்களின் இந்த நிலையை மாற்றிக் கொள்ளாத வரையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழிநிலை ஒருபோதும் மாறாது என்றும் மனதில் பதியும்படி நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
ஜ.இ.ஹி. அமைப்புச் சட்டம்
அமைப்புச் சட்டம்
இஸ்லாமியச் சமுதாயம் ஒன்றுபட்டு இறைவன் வழங்கிய வாழ்க்கை நெறியைப் பின்பற்ற வேண்டும்; அதன்பால் உலக மக்களை அழைக்க வேண்டும்; அதனை மேலோங்கச் செய்வதற்காகத் தன்னிடமுள்ள வாய்ப்பு வசதிகள், திறமைகள் அனைத்தையும் ஈடுபடுத்தி முழு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே இறைவனின் விருப்பமாகும். இதுவே இஸ்லாமிய சமுதாயம் உருவாக்கப்பட்டதன் நோக்கமுமாகும்.
மனிதர்களிடம் பரந்து கிடக்கும் பலதரப்பட்ட ஆற்றல்களும், திறமைகளும் ஒன்று குவிக்கப்பட்டு கூட்டு முயற்சியின் அடிப்படையில் – கட்டுக்கோப்பான முறையில் பலமுனைத் திட்டங்களுடன் அவர்கள் ஒரே தலைமையின் கீழ் செயலாற்றுகின்ற போது ‘‘ஜமாஅத் அமைப்பின்” பலன்கள் அவர்கள் முன் குவிவதைக் காணலாம்.
Author: T. AZEEZ LUTHFULLAH
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஜமாஅத் கடந்து வந்த பாதை – ஐந்தாம் தொகுதி
நம் நாடு விடுதலை பெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு நாட்டின் வெவ்வேறு இடங்களில் ஜமாஅத்தே இஸ்லாமி நடத்திய மாநாடுகளின் நிகழ்ச்சிப் பதிவுகளை விவரிக்கின்ற நூல்தான் இந்நூல்.விடுதலை வேட்கையும் மக்கள் போராட்டங்களும் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டிருக்க, அவற்றோடு அரசியல் ஆதாயங்களுக்காக இந்துக்கள் என்றும், முஸ்லிம்கள் என்றும் மக்களை பிளவுபடுத்தி அரங்கேற்றப்பட்டு வந்த வெறுப்பரசியலின் தீய நாக்குகள் ஒட்டுமொத்த தேசத்தையும் பொசுக்கிக் கொண்டிருந்த, தினம் தினம் கலவரம், நித்தம் நித்தம் கொலை, கொள்ளை, சூறையாடல் என மதவாத வெறுப்பும் நெருப்பும் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்த கொந்தளிப்பான நாள்களில் இராஜஸ்தான், மதராஸ், பீகார் என வெவ்வேறு பகுதிகளில் நடந்த மாநாடுகள்தாம் அவை.இயக்கத் தலைவர்களின் எழுச்சியுரைகள், இயக்க ஊழியர்களின் பரிந்துரைகள், அன்றையக் காலத்துச் சூழலைப் படம்பிடித்துக் காட்டுகின்ற தகவல்கள், செயல் அறிக்கைகள் மீதான கருத்-துரைகள் என இந்த மாநாடுகள் பற்றிய விவரங்களை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றது இந்த நூல். -
ஜமாஅத் கடந்து வந்த பாதை – நான்காம் தொகுதி
எழுபத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் மாதத்தில் நடந்த ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டின் நிகழ்ச்சித் தொகுப்பை விவரிக்கின்ற நூல்தான் இந்த நூல்.
விடுதலை வேட்கையும் மக்கள் போராட்டங்களும் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டிருக்க, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கான நாள்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த கொந்தளிப்பான நாள்களில் அலஹாபாதில் நடந்த மாநாடு.
இயக்கத்தின் அழைப்பும் செய்தியும் தொடக்கத்திலிருந்தே பெண்களையும் பெரும் அளவில் ஈர்த்தும் இயக்கியும் வந்துள்ளன என்பதற்கு இயக்கச் சகோதரி ஒருவரின் ஒரு மாத செயல் அறிக்கையே சான்று. எட்டு பக்கங்களில் நீள்கின்ற இந்த அறிக்கை தருகின்ற செய்திகள் ஏராளம், ஏராளம். மதச் சார்பற்றக் கல்வி கற்றவர்கள் இயக்கத்தை எப்படிப் பார்த்தார்கள், அவர்கள் மத்தியில் இருந்த ஐயங்களை இயக்கத் தலைவர்கள் எவ்வாறு தீர்த்தார்கள் என்பது பற்றிய விவரங்களை அப்படிப்பட்ட சகோதரர் ஒருவர் எழுதிய கடிதமும் அதற்கு ஜமாஅத் தலைவர் அளித்த பதில் கடிதமும் சுவையாக விவரிக்கின்றன.
ஜமாஅத்துடன் தம்மைப் பிணைத்துக்கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவரையும் இயக்கப் பணியில் ஈடுபடுத்திக்-கொள்கின்ற நோக்கத்துடன் ஒவ்வொருவரிடமும் இருக்கின்ற தனிப்பட்ட திறமைகள், ஆற்றல்கள், ஆர்வங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு துறைகளில் களம் இறக்குவதற்காக இலக்கியம், இதழியல், மொழிபெயர்ப்பியல், சட்டம், வரலாறு, தத்துவம், பொருளியல், அரசியல் என இருபத்தைந்து துறைகளுக்காகத் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டன என்கிற செய்தி சிந்திக்க வைக்கின்றது.
மொத்தத்தில் இந்த நூல் அனைவரிடமும் இருக்க வேண்டிய வரலாற்று ஆவணமாக, வழிகாட்டுதல்களையும் அறவுரைகளையும் அள்ளித் தருகின்ற கருத்துப் பெட்டகமாக, ஊக்கமும் உற்சாகமும் அளிக்கின்ற சரித்திரக் குறிப்புகளைக் கொண்ட பதிவேடாக மிளிர்கின்றது.Author: T. AZEEZ LUTHFULLAH
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஜமாஅத் கடந்து வந்த பாதை 1
ஜமாஅத்தே இஸ்லாமி எப்பொழுது தொடங்கப்பட்டது?இயக்கத்தின் துவக்கக் கட்டத்தில் எத்தகையப் பிரச்னைகள் ஏற்பட்டன?அவை எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன?துவக்கக் கால கூட்டங்களில் கலந்து கொண்ட புகழ் பெற்ற மார்க்க அறிஞர்கள் யார்? யார்?இந்தியத் துணைக் கண்டத்தின் மாபெரும் இஸ்லாமிய இயக்கமான ஜமாஅத்தே இஸ்லாமியின் வரலாறு கூறும் முதல் தொகுதி…!Author: G. ABDUR RAHIM
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஜமாஅத் கடந்து வந்த பாதை 2
ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை, அனைத்து மக்களும் ஒரே தாய் தந்தையின் வழித்தோன்றல்கள் எனும் உண்மைகளை மனிதன் மனமார ஏற்றுக் கொள்ள வேண்டும்.இந்தக் கொள்கைகளை ஏற்றுச் செயல்படுத்தும்படி மக்கள் அனைவரையும் அழைக்கவே ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கம் ஏற்படுத்தப்பட்டது.அதன் வரலாற்றின் இரண்டாம் தொகுதியே இந்நூல்Author: G. ABDUR RAHIM
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – ஒரு பார்வை
இந்தச் சிற்றேடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் குறித்த விவரங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது.ஜமாஅத்தின் நோக்கம் – குறிக்கோள், செயல் திட்டங்கள், பணிகள் ஆகியவற்றைக் கூறி இச்சிறு நூல் நம்மை வியப்படையச் செய்கிறது.Author: K. JALALUDEEN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – நோக்கமும் வழிமுறையும்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – நோக்கமும் வழிமுறையும்’ எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த சிறிய நூல், இஸ்லாமிய மார்க்கத்தின் முன்னேற்றத்துக்காக இந்தியத் துணைக் கண்டத்தில் முறையாக இயங்கி வருகின்ற ‘ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்’-ன் இலக்குகள் செயல்பாடுகள், வழிமுறைகள் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கும் இதில் முயற்சி செய்யப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து இகாமத்துத் தீனின் வழியில் ஜமாஅத்தே இஸ்லாமியுடன் ஒத்துழைப்பு வழங்குமாறு முஸ்லிம்களிடம் வேண்டுகோள் வைப்பதுடன் ஜமாஅத்தே இஸ்லாமியின் செயல்முறை பண்புகளையும் உண்மையிலேயே புரிந்துகொள்ள முயற்சிக்கக் கூடியவர்களுக்கு இந்த சிறு நூல் பயனளிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சர்வ வல்லமை கொண்ட அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவாறு இந்நூலை பெரும்பான்மை சமுதாயத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்.Author: Moulana Abullais Islahi Nadvi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST