-
80 நபிமொழிகள் (மாணவர்களுக்கான பாடத்திட்டம்)
இன்றைய நவீன யுகத்தில் இளம் பருவத்தினர் பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். மிக முக்கியமாக ஒழுக்க ரீதியான தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அடிப்படை அம்சங்களைப் போதிப்பதன்மூலம் தான் அடுத்த தலைமுறையினரான அவர்களை நல்ல பிரதிநிதிகளாக, ஒழுக்கம் உள்ளவர்களாக விட்டுச் செல்ல முடியும்.இதன் மூலமே முஸ்லிம் சமுதாயம் சீரும் சிறப்புமாக விளங்குவதற்கு, நடைபோடுவதற்கு இயலும். இளம்சிறார்கள் திருக்குர்ஆனையும் நபிமொழிகளையும் தங்களின் வாழ்வில் கடைப்பிடிக்கும்படியான சூழலை உருவாக்கித் தரவேண்டும்.அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, நல்லொழுக்கப் பயிற்சி அளிக்கும் பொறுப்புடன் 80 நபிமொழிகள் கொண்ட இச்சிறு நூல் தொகுக்கப்பட்டுள்ளது.Author: Ashsheikh M.M.M. Asam
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
Allah Tests Three Men (Islamic Moral Stories for Children)
This book titled Allah Tests Three Men is a Children’s book, and is a Translation of a Hadith reported by al-Bukhari and Muslim.
This Book also with Beautiful colour illustrated. Hope that children will immensely benefit from this Book.
Author: Dr. V. Abdur Rahim
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
Arabic Words for Children
“Arabic Words for Children” is beautifully illustrated and creatively designed to attract the little hearts. We took all the efforts and care to ensure that the little hearts Enjoy while Learning Arabic Words from this Book,
in sha Allah.Author: Maulavi Fazil M.A. Mohamed Haneefa Manbayee
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ISIS இஸ்லாம் இல்லை
ISIS இஸ்லாம் இல்லை*******************ஐ.எஸ். தொடர்பாக சாதாரணமாக விவாதிக்கப்படாது, தவறான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திகள் தான் இப்புத்தகத்தின் பேசுபொருளாக உள்ளது. இவ்விஷயம் தொடர்பாக இருபதிற்கும் அதிகமான புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலான புத்தகங்களும், ஐ.எஸ்ஸின் உருவாக்கத்திலும் அதனை வளர்த்து வதிலும் அமெரிக்காவின் ஈராக், ஆஃப்கான் ஆக்கிரமிப்பு களுக்கு உள்ள பங்கினைக் குறித்து மறைத்தும், குறைத்தும்தான் பேசுகின்றன. ‘சலஃபி ஜிஹாது’ ‘குளோபல் ஜிஹாது’ போன்ற வார்த்தைகளைப் போட்டு நிரப்பி ஒருவகையான திரையிட்டு உண்மைகளை மறைக்கிறார்கள்.அதனால், இப்புத்தகத்தின் உருவாக்கத்திற்கு அரபுலக மூலங்களைத்தான் முக்கியப்படுத்தியிருக்கின்றோம். ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள பக்கச்சார்பற்ற ஆய்வு களையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.#ISIS பற்றி சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்புத்தகம் வெளியாவது பெரும் மகிழ்வாகும்Author: K.M. Ashraf Keezhuparambu
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
Let us Know Hijab
Hijab is now hotly debated all over India. Different people have diverse views about it.
What is the reason? Is it because of sheer ignorance? Or is it because of malice and ulterior motives of degrading Islam and Muslims?
The list of doubts and questions is endless.
This prompted the IFT to release a booklet on this issue. And this booklet in your hands is the outcome of that prompt endeavour.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
Modesty A Gift to Humanity – For Peace, Happiness and more…
The author further elaborates that modesty is not only limited to the method of a person to choose to dress, but also mirrors one’s behaviour, way of living, and in fact, overall conduct. Moreover, it is to be understood that being modest applies to both the genders.
Author: Safiya Syed
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அகிம்சை இஸ்லாமியக் கண்ணோட்டம்
“அகிம்சை, அகிம்சை” என்று சொல்வதால் மட்டும் வன்முறை ஒழிந்துவிடாது. அன்பு பற்றி உரத்துப் பேசுவதாலும் அநீதிகள் அகன்று விடா. கொஞ்சம் விழிகளை அகலத் திறந்து பார்க்க வேண்டும். தம்மைச் சுற்றி என்னென்ன கொடுமைகள் நிகழ்கின்றன எனப் பார்த்து அவற்றைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் (ஸல்) (PB)
நபி வரலாற்று நூல்களில் தனித்துவம் மிக்க நூல்!இப்படியும் ஒரு தியாக வாழ்வு இருக்குமா? என்று படிப்போரைச் சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு…!படிப்பவர் தம் நெஞ்சங்களில் இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் அன்பைப் பெருக்கும் அரிய நூல்உருது மொழியில் பல பதிப்புகள் கண்ட இந்நூல் இப்போது இனிய தமிழில்…! எளிய நடையில்…!Author: DR. INAYATHULLAH SUBHANI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணலாரின் ஆளுமைகள் – அழகிய குணநலன்கள் | தலைமைத்துவப் பண்புகள் | மனிதநேய மாண்புகள்
தலைமைத்துவப் பண்புகள், ஆளுமைப் பண்புகள், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள விரும்புவோருக்கு இது ஓர் அரிய வழிகாட்டி நூல்.மனித உறவுகள் எப்படி இருக்கவேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? நேரத்தை எப்படி திட்டமிட வேண்டும்? என்பதற்கு நபிகளாரின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.நபிகளாரின் வாழ்க்கை வரலாறு பல நுாறு ஆண்டுகளாக உலகின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. தமிழிலும் நபிகளாரின் பல வரலாற்று நூல்கள் உண்டு. ஆனால், நபிகளாரின் ஆளுமைப் பற்றிய நூல்கள் மிகக் குறைவே. அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணலாரின் பலதார திருமணங்கள் – ஓர் அலசல்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தார். எந்த வயதில் அப்பெண்களை மணந்தார்? எதற்காக மணந்தார்? அவற்றிற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? அந்தப் பெண்கள் கண்ணியரா? வயது முதிர்ந்தவர்களா? விதவைகளா? என்பதை அறிய வேண்டும். அவர்கள் எந்தப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த கேள்விகளுக்கு இந்த நூல் விடை தரும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணலார் (ஸல்) நபித்துவம் பகுப்பாய்வு
அண்ணலார் (ஸல்) அவர்களின் நபித்துவம் குறித்து எழுப்பப்படும் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கிறது இந்நூல்!
Author: DR. JAMAL A. BADAWI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணல் நபி
நபிகளாரின் வரலாற்றைச் சின்னச் சின்ன பாடங்களாக விவரிக்கும் நூல்! ஓவ்வொரு பாடத்தின் முடிவிலும் கேள்விகளும்உண்டு. குழந்தைகளுக்காக குழந்தை மனம் கொண்டவர் எழுதியது!
Author: MOULANA AFZAL HUSSAIN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு
Author: MOULANA ABU SALIM ABDUL HAI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணல் நபிகளாரின் அருமைத் தோழர்கள்
ஜுலைபிப் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி), தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஹுஸாஃபா (ரலி), அபூதர்தா (ரலி), அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரலி), ஸயீத் பின் ஜைத் (ரலி) ஆகிய நபித்தோழர்களைக் குறித்து இந்நூல்.Author: ABDUR RAHMAN RAFAT PASHA
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணல் நபிகளார் வாழ்வினிலே
அண்ணலார் (ஸல்) அவர்களின் நானூறுக்கும் மேற்பட்ட அருள்மொழிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளில் விளக்கத்துடன்!
Author: MOULANA JALEEL AHSAN NADVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அதிகாலை வருவதற்கு வெகுநேரமா இருக்கிறது?
அதிகாலை வருவதற்கு வெகுநேரமா இருக்கிறது? (ஒருபால் உறவின் விபரீதங்களை விவரித்து அது குறித்து எழும் வாதங்களை உடைத்தெறியும் நூல்)
ஒருபால் உறவில் ஈடுபட்ட ஊரை இறைவன் தலைகீழாகப் புரட்டினான். அவர்களை அழிப்பதற்காக இறைவன் நேரம் குறித்தான். அதிகாலை நேரம். அந்த அதிகாலை நேரம் வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது? என்ற அந்தக் கேள்வி நம்மை உலுக்குகிறது. ஒருபால் உறவில் ஈடுபட்டு வருபவர்கள் திருந்தி மீள்வ-தற்கு இறைவன் எழுப்பும் இந்த வினா ஒன்றே போதுமானது.
இது நமக்குத் தொடர்பில்லாத நூல். இதைப்படித்து என்னாவது? என்று கடந்துவிடாமல் நம் காலத்தில் நிலவும் பெரும் தீமையின் கோரத்தை உணர்வதற்காக நாம் ஒவ்வொரு-வரும் இந்த நூலை வாசிக்க வேண்டும். சமுதாயத்தைச் சீரழிக்கக் கிளம்பியுள்ள இந்த புற்று நோய்க் கட்டிகளை நாம் அகற்றுவதற்கான மருந்துதான் இந்த நூல். மனித இனத்தையே நாசப்படுத்தும் இந்தக் கொடும் அரக்கனுக்கு எதிராக நாம் ஏந்தும் ஆயுதம்தான் இந்த நூல். அந்த வகையில் ஒவ்வொரு-வரும் இந்த நூலை வாசிப்ப-துடன், மக்களுக்கு இத்தீமை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் வேண்டும்.Author: V.S. MOHAMMED AMEEN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
அத்தியாயம் 3 : ஆலு இம்ரான் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அநாதைகள் விதவைகள் ? ஆதரவற்றவர்களை அரவணைப்போம்! (மனித உறவுகள் – 3)
இன்றைய நவநாகரீமான உலகில் இவர்களின் உரிமைகளும் நீதியும் மறுக்கப்பட்டு தெருவோரங்களில் சுற்றித் திரிபவர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த சூழலில் நமது கடமை என்ன? நமது செயற்பாடுகள் எப்படியிருக்க வேண்டுமென்பதை மனதில் உரைக்கும் வண்ணம் நூலாசிரியர் டாக்டர். கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் ‘அநாதைகள் – விதவைகள், ஆதரவற்றவர்களை அரவணைப்போம்’ என்ற இந்த நூலை எழுதியுள்ளார்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அபூபக்கர் (ரலி)
தமிழ் கூறும் நல் உலகில் முதன்முறையாக ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அபூபக்கர் (ரலி) குறித்த முழுமையான நூல்.
இப்படி ஒரு மனிதரா..? படிக்கப் படிக்க உற்சாகம்! பக்கத்துக்கு பக்கம் உத்வேகம்!
அபூபக்கர் (ரலி) குறித்து இனியொரு நூல் தமிழில் தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு முழுமையான நூல்.
இந்த புத்தகத்தை ஒருமுறை வாசித்து பாருங்கள்.
நம் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய பக்கங்கள் இதில் இருக்கின்றன.Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அமைதி அடைந்த ஆன்மா… (உளத்தூய்மை வழிகாட்டி)
நண்பனைப் போல் நடித்து ஏமாற்றுவது, குடும்பச் சூழ்நிலை, வளாகச் சூழ்நிலை, தீய நண்பர்களின் பழக்கம், சமூகச் சூழ்நிலைகள் என்பவை மூலம் ஷைத்தான் தனது காரியத்தில் வெற்றிபெற முயற்சிக்கின்றான். அதிலிருந்து நாம் விடுபடுவது எப்படி என்பதையும் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் இந்நூலில் எடுத்துரைத்துள்ளார்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள்
இந்த நான்கு அடிப்படைச் சொற்களையும்குர்ஆன் எந்தப் பொருளில் கையாளுகிறது?குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள்இவற்றை எப்படிப் புரிந்து கொண்டார்கள்?இந்தச் சொற்களின் இன்றைய நிலை என்ன?இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளரான மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் தமக்கே உரிய பாணியில் விரிவாக அலசுகிறார்…!ஓரிறைக் கொள்கைக்கு வலு சேர்த்து இணைவைப்பைத் தகர்த்தெறியும் இடிமுழக்க நூல்…!Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அர்த்தமுள்ள நீதி
சமூக நீதி என்றால் என்ன?நவீன மேற்கத்திய அறிவியல் உலகம் கூட சமூக நீதியைப் பெறவில்லையே ஏன்?சமூக நீதி நிலைபெறாததற்குக் காரணங்கள் என்ன?வியக்கத்தக்க வகையில், இஸ்லாம் மட்டும் சமூக நீதி எனும் சிகரத்தை எட்டிப் பிடிப்பதில் மாபெரும் வெற்றி அடைந்துள்ளதே, எப்படி? எல்லாக் கேள்விகளுக்கும் விடை தருகிறது அர்த்தமுள்ள நீதி!Author: MOULANA WAHIDUDEEN KHAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அலங்கரிப்போம் ரமளானை
மறுமையில் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல காரணமாக இருப்பவை எவை? இறை நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் இறையில்லத்தில் தங்கும் இஃதிகாஃபின் நன்மைகள் என்ன? பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் மாதமாக ரமளான் திகழ்வதால் கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்வது எப்படி? என்பவைகளை சிறப்பாக நூலாசிரியர் மௌலவி நூஹ் மஹ்ழரி எடுத்து வைத்துள்ளார்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அல்குர்ஆனை அணுகும் முறை
அல்குர்ஆனை அணுகும் முறை எனும் இந்நூல் நான்கு முக்கியப் பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒன்று: குர்ஆனின் தனிப்பெரும் சிறப்புகளும் அதன் இலக்குகளும்.
இரண்டு: மனப்பாடம், ஓதுதல், செவியுறுதல் ஆகியவை மூலம் அல்குர்ஆனை அணுகும் முறை.
மூன்று: புரிதல், விளக்கவுரை ஆகியவை மூலம் அல்குர்ஆனை அணுகும் முறை. விளக்கவுரையில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய வழிமுறைகள், ஆபத்தான சறுக்கல்கள் மற்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்த வழிகாட்டல்கள், அறிவியல் விளக்கவுரையை ஆமோதிப்பவர்கள், மறுப்பவர்கள் ஆகியோருக்கு இடையே இருக்க வேண்டிய நிலைப்பாடு.
நான்கு: பின்பற்றுதல், செயல்படுத்துதல், தீர்ப்பளித்தல், அழைத்தல் ஆகியவை மூலம் அல்குர்ஆனை அணுகும் முறை.
Author: DR. YUSUF AL QARDHAWI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அல்குர்ஆன் கூறும் அழகிய சரிதைகள்
வாழும் தேசத்திற்கு என்ன பங்களிப்பைச் செய்திருக்கிறாய்? என்று ஒரு சரிதை உங்களிடம் கேட்கும். நாட்டில் நீதி தேவையா, வீட்டிலிருந்து துவங்கு என்று மற்றொரு சரிதை கூறும். மூன்றாவது சரிதையோ ஒழுக்க விழுமங்களைக் கடைப்பிடிக்கின்றாயா? என்று நம்மை உலுக்கிக் கேட்கும். நான்காவது நிகழ்வோ சூழல்களுக்கு அடிபணிந்து வீழ்ச்சியடையாதே என்று வீரவரலாறு கூறும்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அல்லாஹ் சோதித்த மூன்று மனிதர்கள்
அல்லாஹ் சோதித்த மூன்று மனிதர்கள் எனும் இந்நூல் சிறார் இலக்கிய வகையைச் சார்ந்தது. புகாரி, முஸ்லிம் ஹதீஸ் நூல்களில் பதிவாகியிருக்கின்ற ஒரு நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு வண்ணப் பக்கங்களின் சிறார்களின் இதயங்களில் பதியும் வகையில் வண்ண ஓவியங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
Author: Dr. V. Abdur Rahim
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அல்லாஹ்வின் அற்புதங்கள்_Miracles of Allah_14 Books Series
1. கடல் விலங்கு 2. நிலத்தில் வாழும் விலங்குகள் 3. பறவைகள் 4. பாலைவனங்களும் மலைகளும் 5. பழங்கள் – காய்கறிகள் 6. மனித உடல் 7. ஏரிகள், ஆறுகள், கடல்கள் 8. புவிக்கோளம் 9. தாவரங்கள் 10. மனிதர்கள் 11. சூரியனும் சந்திரனும் 12. பிரபஞ்சம், நட்சத்திரங்கள், கோள்கள் 13. தண்ணீர் 14. இயற்கைAuthor: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹1078 -
அவள் (பெண்ணியப் பார்வையில்)
பெண்ணியம், உண்மையில் பெண்களுக்கு முழுமையான விடுதலையைத் தரவில்லை என்பதை இன்றைக்குப் பெண்ணியவாதிகளே உணர்ந்து கொண்டார்கள். தாம் உருவாக்கிய கோட்பாட்டைத் தாமே விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது வேறொரு திசையில் பெண்ணியத்துக்கு விளக்கம் தேடும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் இஸ்லாம் கூறும் பெண்ணியம் தகத்தகாயப் பேரொளியுடன் வருகிறது. அமெரிக்காவில் முதல் பெண்ணியக் குரல் எழுந்தது 1848 இல்தான்! ஆனால் ஏழாம் நூற்றாண்டிலேயே பெண்ணியக் குரல் மண்ணில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அந்த முழக்கத்தை எழுப்பியவர் பெண்ணோ ஆணோ அல்ல. மாறாக, அந்த மகத்தான முழக்கத்தை முன்வைத்தவன் இறைவன்! ஆம் பெண்ணியல் நோக்கில், பெண்ணியல்பு நோக்கில் அவளுக்குத் தேவையான அத்தனை உரிமைகளையும் இறைவன் வழங்கினான். அந்த உரிமைகளின் பட்டியல் மிக நீளமானது. போராடாமலே பெண் இனத்துக்குக் கிடைத்த பெரும் புதையல் அது!
நாடறிந்த நல்லிணக்கச் சிந்தனையாளர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் காலம் கருதி இந்த நூலை இயற்றித் தந்துள்ளார்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழகிய அண்டை வீடு (மனித உறவுகள் – 1)
அண்டைவீட்டார் என்றால் யார்? அவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன? அவர்களோடு நாம் எப்படி யெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது? என பல்வேறு கேள்வி களுக்கு விடைகளையும் பன்மை சமூகமாக வாழும் நாம் நம் தேசத்தில் ஜாதி மதம் மொழிகளை எல்லாம் தாண்டி தன் அண்டை வீட்டார்களோடு ஒற்றுமையோடும் மனிதநேயத்துடன் எப்படி வாழ்வது என்பதையும் இந்நூல் பேசுகிறது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழிக்கும் ஆணவம் (உளத்தூய்மை- 2)
குடும்பத்தின் அமைதி குலைந்திருக்கிறதா? அங்கு ஆணவம் புகுந்து விட்டது என்று தெரிந்து கொள்ள முடியும். குடும்பம் மட்டுமல்ல சமூகத்திலும் குழப்பங்களும் சிக்கல்களும் உருவாகியிருக்கிறது என்றால் ஆணவம் தனது வேலையைச் செய்யத் தொடங்கி விட்டது என்றே அர்த்தம்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழைப்பாளர் கையேடு
அழைப்பின் வழியில் அலைக்கழியாத பயணம், இலங்கை நூலின் தமிழ் பதிப்பு
அழைப்பாளர் கையேடு
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்இஸ்லாமிய மக்கள் இன்று எவ்வளவு தூரம் பிறரால் அலைக்கழிக்கப்பட முடியுமோ அவ்வளவு தூரம் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். காரணம், புரிந்து செயல்படுவதில் ஏற்பட்டுள்ள பாதிப்பே. இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கம்,
அல்லாஹ்வினால் பாதுகாக்கப்படும் மார்க்கம். அதனால், எவ்வளவுதான் அலைக்கழிக்கப்பட்டாலும் பயணம் பாதுகாப்பாகவே முடியும். என்றாலும் நம்மீதும் கடமைகள் இருக்கின்றன, அலைக்கழிக்கப்படுவதில் இருந்து தாக்குப் பிடிப்பதற்கு நாமும் முயற்சி செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.
அந்த முயற்சியை எடுத்துச் செல்பவர்களாக அழைப்பாளர்கள் விளங்குகிறார்கள். அவர்கள் சரியான முறையில் புரிந்து மக்களை அமைதியான பயணத்திற்கு இட்டுச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதற்கு உதவும் விதத்தில் இந்த ‘அழைப்பின் வழியில் அலைக்கழியாத பயணம்’ என்ற நூலை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த நூலை தமிழ் வாசகர்கள் மொழிநடைக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து ‘அழைப்பாளர் கையேடு’ எனும் தலைப்பில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.Author: USTHAZ RASHEED HAJJUL AKBAR
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழைப்பாளனுக்கு விடுமுறை இல்லை…!
பட்டம், பதவி, பணம், அரசு, அதிகாரம் என அற்பமான ஆதாயங்களை மையப்படுத்தியே கட்சிகளும் கழகங்களும் மன்றங்களும் அமைப்புகளும் இயங்கிக் கொண்டிருந்த சூழலில், சாதி, மதம், குடும்பம், கோத்திரம் போன்றவற்றின் குறுகிய நலன்களுக்காகவே அரசியல், சமூகச் செயல்பாடுகள் சூடுபிடித்திருந்த விறுவிறுப்பான நாள்களில், அவை அனைத்தையும் முற்றாக ஒதுக்கித் தள்ளிவிட்டு இறைவனின் உவப்பையும் மறுமையில் மகத்தான வெற்றியையும் பெறுவதை மட்டுமே ஒற்றை உந்துசக்தியாகக் கொண்டு இயங்க வாருங்கள் என்கிற வித்தியாசமான, புரட்சிகரமான, அதிரடியான அழைப்புடன் களமிறங்கிய போராளிகளைப் படம் பிடித்துக் காட்டுகின்ற நூல்தான் “அழைப்பாளனுக்கு விடுமுறை இல்லை…!”
Author: Moulana Naeem Siddiqui
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழைப்பியல் சிந்தனைகள்
இந்நூல் புரட்சிகரமான நூல்! வாசகர்களின் உள்ளங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற திறன் படைத்த நூல்!.அழைப்புப்பணியின் முக்கியத்துவத்தையும் அழைப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகளையும் எடுத்துரைக்கின்ற நூல்!…எல்லாமே அன்றாட வாழ்வோடு தொடர்புடையவை! அண்ணல் நபிகளாரின் அழகிய முன்மாதிரியை நூல் முழுக்க இழைத்துக் கொடுத்திருக்கின்றார் ஆசிரியர்.Author: H. ABDUR RAQEEB
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
அழைப்புப் பணி ஏன்? எதற்கு?
அழைப்புப் பணி என்றால் ஏதோ மதப்பிரச்சாரம் செய்வது எனப் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். இது தவறு. மதப்பிரச்சாரம் என்பது வேறு; அழைப்புப் பணி என்பது வேறு என்பதைத் தெளிவுபடுத்தும் நூல் இது!
Author: MOULANA M.A. JAMEEL AHMED & ABDULLAH ADIYAR
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அறப்போர்
அறப்போர்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அறிவோம் ஹிஜாப்
ஹிஜாப் தனிப்பட்ட மனிதர்களின் நிலைப்பாட்டை தாண்டி ஒரு தேசப் பிரச்சினையாக உருவாவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ஹிஜாப் பற்றிய விளக்கங்களையும் தெளிவுகளையும் நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தவறான கருத்துக்களை அழித்து ஹிஜாப் பற்றிய உண்மை நிலையை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதத்தில் “அறிவோம் ஹிஜாப்” என்ற இச்சிறு நூலை டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அன்பு நபியின் அமுத வாக்குகள்
அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள்: அண்ணல் நபிகளா-ரின் அமுத வாக்குகளில் பளிச்சென மின்னுகின்ற ஒழுக்கவியல் போத-னைகள் மட்டும் தனியாகத் தொகுத்துத் தரப்பட்டிருப்பது-தான் இந்த நூலின் தனிச் சிறப்பு.
Author: MOULANA MUHAMMAD FAROOQ KHAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அன்புள்ள அக்காவுக்கு
மனப்போராட்டங்களை, வாழ்வியலை, சுற்றுப்புறத்தை, அதிகாரத்தை, அந்தஸ்தை, அறஇயலை, உலகியலை கடிதங்கள் – பதில் கடிதங்களாக உலவ வைத்து அதன் விளைவாக ஓர் ஆக்கப்பூர்வ மாற்றத்தை நம் நெஞ்சிலும் – நடைமுறையிலும் நிலவச் செய்யும் கடித நூல்!
Author: MAAYIL KHAIRABADHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அன்புள்ள அன்னைக்கு
தன்னைப் பெற்றெடுத்த அன்னைக்கு சத்தியத்தை அறிமுகப்படுத்தி ஒரு மகன் எழுதிய காவியம். இஸ்லாமியக் கொள்கை விளக்கம், பெற்றோர்களைப் பற்றிய இஸ்லாமியப் பார்வை இரண்டையும் ஒரே சமயத்தில் இந்நூல் விளக்குகிறது.
Author: NASEEM QAZI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
அன்னை கதீஜா (ரலி)
அன்னை கதீஜா (ரலி)
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவிஒருநாள் நபிகளார் (ஸல்) அவர்கள், அன்னை கதீஜா அவர்களின் சிறப்பைப் பற்றி குறிப்பிடும்போது, அவர் தம் விரலால் வானத்தையும் பூமியையும் சுட்டிக்காட்டி விட்டு கூறினார்கள்: “இறைத்தூதர் ஈஸா அவர்களின் தாய் மர்யம், வானங்களின் மிகச் சிறந்த பெண்மணி ஆவார். கதீஜா, பூமியில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் மிகச் சிறந்த பெண்மணி ஆவார்.
கதீஜாவின் வாழ்க்கை இறைநம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் குறிப்பாக, பெண்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் ஊற்றுக்கண் ஆகும். இஸ்லாத்தின் மேன்மைக்காக ஒருவரால் எப்படி நேரத்தை, ஆற்றலை, செல்வத்தை, வாழ்வை அர்ப்பணிக்க முடியும் என்பதற்கு கதீஜா முன்மாதிரி எடுத்துக்காட்டு ஆவார். பொருள் செறிந்த, கொள்கைக்காக வாழ ஆர்வம் கொண்டுள்ள இறைநம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் கதீஜாவின் வாழ்வு எப்போதும் ஒரு நினைவூட்டலாக இருந்துகொண்டே இருக்கும்.
அன்னை கதீஜா (ரலி) அவர்களின் வாழ்வை குழந்தைகளின் மனதில் பதியும் வண்ணம் படங்களுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் ஆங்கிலப் பதிப்பு ஷார்ஜா வழங்கும் “சிறுவர்கள் புத்தக விருது” பெற்ற நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
Author: Saniyasnain Khan
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஆசிரியர் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 14)
ஓர் புகழ்பெற்ற அறிஞர் ஒரு வயதான பெண்ணைத் தம்முடைய ஆசிரியராகத் தேர்ந்தெடுத்தார் என்பதைக் கேள்வியுள்ள ஊர் மக்கள் வியந்தனர். அப்போது ஊர் மக்களிடம் அந்த வயதான பெண்மணிக்கும் தனக்கும் இடையே நடைபெற்ற நிகழ்வைப் பற்றி விளக்கினார். அப்படி அந்த மூதாட்டி கற்பித்த பாடம்தான் என்ன என்பதுதான் இந்நூலில்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
-
இதயங்களை வெல்வோம்
நபிகளார் கொண்டு வந்த செய்தியை அவரது தோழர்களும், அதற்குப் பின்னர் வந்தவர்களும் தொடர்ந்து பல சிரமங்களைத் தாங்கியும், தடைகளைத் தாண்டியும் செய்து வந்தனர். இதன் காரணமாக இஸ்லாம் உலகெங்கும் பரவி உலக மக்களில் நான்கில் ஒரு பகுதியினரைத் தன் பால் கவர்ந்துகொண்டது.
நாள்கள் செல்லச் செல்ல அழைப்புப் பணி மீது முஸ்லிம்-களுக்கு இருந்த ஆர்வம் குறைந்து அழைப்புப் பணியின் அவசியத்தை மறந்தனர். சிலர், முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்ந்தால் போதும்; முதலில் அவர்களைத் திருத்துவதற்கே முன்னுரிமை தரவேண்டும் என்று சொல்லி அழைப்புப் பணியைப் புறந்தள்ளினர். இதன் விளைவாக இஸ்லாத்தின் வளர்ச்சி தடைபட்டது. இஸ்லாத்தைப் பற்றி தவறான செய்திகள் பரவி முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் மீதான வெறுப்பும் பகையும் வளர்ந்து மேலும் அவர்களுக்கு ஹிதாயத் & நேர்வழி கிடைக்காமலேயே போய்விட்டது.
இந்த நிலையில் அழைப்புப் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மீண்டும் முஸ்லிம்களில் சில தனிமனிதர்களிடமும், சில அமைப்பு களிடமும் உருவாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ள அழைப்பாளர் களுக்கு அழைப்புப் பணியின் தேவையை மட்டுமல்ல, அதன் முறைகளையும் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இத்தேவையை உணர்ந்தே இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஆர்வமில்லாதவர்களுக்கும் ஆர்வமூட்டும் வகையிலும், அழைப்புப் பணி தேவையில்லை என்று வாதிடுவோர்க்கு உரிய விளக்கம் அளிக்கும் வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
-
இதுதான் இறைநெறி போராட்டம்
அண்ணலார் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழரான அபூபக்கர் (ரலி) அவர்களின் தியாக வாழ்வை விளக் கும் நூல்.
Author: ABDUL WAHIDKHAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இதுதான் இஸ்லாம் பாகம் 1
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இதுதான் இஸ்லாம் பாகம் 1, 2
இஸ்லாத்தைக் குறித்து தெளிவான, முழுமையான கருத்துகளை எடுத்துக் கூறுகிறது.
இளைஞர்களுக்காக எழுதப்பட்டது. இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை பலரின் உள்ளங்களிலிருந்து களைந்தது; களைந்து வருகிறது.
ஒவ்வொருவரும் – படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய, பிறருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய, சிந்தனைக்குரிய -சிந்தைக்கினிய நூல் இது!
பிரெஞ்சு, ஆங்கிலம், அரபி உள்ளிட்ட நாற்பத்தைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இந்திய சூழலும் முஸ்லிம்களும்
Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இந்திய முஸ்லிம்கள் – சவால்கள் | சாத்தியங்கள் | செயல்திட்டங்கள்
மதவாதத்தை முறியடிப்பதற்காக நூலாசிரியர் முன்வைக்கின்ற யோசனைகள் உடனடியாக நடைமுறைப் -படுத்தப்பட வேண்டிய சத்தான யோசனைகள். மதச் சண்டைகளுக்குப் பெயர் பெற்ற அலீகர், மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாய் இருக்கின்ற கோழிக்கோடு ஆகிய இரண்டு நகரங்களின் சமூகச் சூழல்களை ஒப்பாய்வு செய்த சமூகவியல் வல்லுநரின் ஆய்வு முடிவுகளும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு நூலாசிரியர் முன்வைக்கின்ற வழிமுறைகளும் கவனத்தை ஈர்க்கின்றன.
முஸ்லிம்களையும் முஸ்லிம் தலைவர்களையும் விளித்து பத்து அம்சத் திட்டம் ஒன்றை நூலின் இறுதியில் தனி அத்தியாயமாகவே வழங்கியிருக்கின்றார் நூலாசிரியர். முத்து முத்தாகத் தரப்பட்டுள்ள இந்தப் பத்தும் செம்மையாகக் கடைப்பிடிக்கப்படுமேயானால் முஸ்லிம்களையும் நாட்டையும் பீடித்துள்ள நெருக்கடிகள் அனைத்தும் பஞ்சாய்ப் பறந்து போகும் என அறுதியிட்டுச் சொல்லலாம்.நூலாசிரியரான சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி நாடறிந்த அறிஞர். பன்னூல் ஆசிரியர். மாணவப் பருவத்திலிருந்தே இந்தியாவையும் இந்திய முஸ்லிம் சமூகத்தையும் நல்ல முறையில் அறிந்து தெளிந்தவர். பொறியியலில் படித்துத் தேர்ந்தாலும் மார்க்கத்திலும் தேர்ச்சியும் புலமையும் பெற்றவர். தொலைநோக்கும் விஷயஞானமும் மிக்கவர். உலகமயமாக்கலின் கோர விளைவுகளைத் துல்லியமாகக் கணித்து எச்சரித்த சிந்தனையாளர். இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் அகில இந்தியத் தலைவராகப் பணியாற்றியவர். தற்சமயம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவராக இருக்கின்றார்.
Author: SYED SADATHULLAH HUSSEINI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இந்திய முஸ்லிம்கள் இனி செய்ய வேண்டியது என்ன?
இன்று முஸ்லிம் உலகம் நெருக்கடியான, சோதனையான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கின்றது. உலக அளவில் அமெரிக்க, சியோனிச, ஏகாதிபத்தியவாதிகள், நமது நாட்டளவில் வலதுசாரிகள், வகுப்புவாதிகள், முஸ்லிம் வெறுப்பாளர்கள் ஆகியோரின் பன்முகத் தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் ஆளாகின்றனர்.இத்தகைய சூழலில் உணர்ச்சிவசப்படாமலும், அச்சப்படாமலும், நம்பிக்கை இழக்காமலும், தோல்வி மனப்பான்மையில் துவளாமலும், இறைவனின் மீதும் இறை மார்க்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு விவேகத்தின் அடிப்படையில் ஷரீஅத்திற்கு உட்பட்ட முடிவுகளை எடுத்து முஸ்லிம் சமுதாயம் செயல்பட்டால் நிலைமைகள் மாறும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இந்தியாவில் இஸ்லாமிய இயக்கம்
இஸ்லாமிய இயக்கத்தைப்பற்றி அறிந்துகொள்ள தமிழில் போதிய நூல்கள் இல்லை. அக்குறையை நிறைவு செய்ய வந்திருக்கும் நூல் இது.நவீனகால இஸ்லாமிய இயக்கங்கள் தோன்றிய பின்னணியோடு தொடங்கும் நூல் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் துவக்கம் வரை பேசுகிறது.Author: SHAIKH MUHAMMAD KARAKUNNU
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இமாம் ஹுஸைன் உயிரைக் கொடுத்தது எதற்காக?
இமாம் ஹுஸைன் அவர்களின் மீது பேரன்பும் மாசற்ற பற்றும் கொண்டிருக்கின்ற பெரும்பாலோருக்கு அவர் எந்த நோக்கத்திற்காக தன்னுடைய இன்னுயிரைத் துறப்பதற்கும் தயாரானார்? தன்னுடைய அன்பு மகனார்களையும் இழந்து விடுவதற்கு ஏன் துணிந்தார் என்பது பற்றிய உண்மைநிலை தெரிந்திருப்பதில்லை.
Author: Moulana Syed Abul A’la Moududi (Rah)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
-
-
இயக்கம் வெற்றி பெற
இயக்கப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு ஊழியரும் இயக்கத்தின் வெற்றிக்காகத் தம்மை தயார் படுத்துவது குறித்து விளக்கும் நூல்! இயக்க ஊழியர்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இயற்கை (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 14)
அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானங்களைப் படைக்கக் கருதி அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும் அவன், ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 2:29)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
இருளும் ஒளியும்
அஞ்ஞான சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்வதால் உருவாகும் நடைமுறைகளுக்கும் இறைநெறியான சத்திய இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதால் உருவாகும் நடைமுறைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை தர்க்கரீதியாக விளக்கும் நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இவர்கள் பார்வையில் நபிகள் நாயகம் (ஸல்)
தொல் திருமாவளவன், பேராசிரியர் அ.மார்க்ஸ்,
கவிஞர் ஈரோடு தமிழன்பன், தமிழருவி மணியன்,
பீட்டர் அல்போன்ஸ், லேனா தமிழ்வாணன், திருச்சி சிவா, சிலம்பொலி செல்லப்பன், கம்பம் செல்வேந்திரன் ஆகிய ஒன்பது ஆளுமைகள் நபி(ஸல்) அவர்களைக் குறித்து விரிவாகப் பேசியிருக்கின்றார்கள். ஒருவரின் கருத்தை ஒருவர் சொல்லவில்லை. ஒரேசெய்தி எங்குமே மீண்டும் மீண்டும் வரவில்லை. நபி(ஸல்) என்ற ஞானப் பெருங்கடலிலிருந்து எவ்வளவு செய்திகளையும் அள்ளிக்கொணரலாம் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. அள்ள அள்ள புதிதாய் சுரந்துபொங்கும் ஊற்றுப்போல செய்திகள் பெருகுகின்றன.இந்த ஆளுமைகள் அண்ணலாரைப் பார்த்த பார்வை பெருமானாரின் மீதான பெருமதிப்பை நம்முள் பெருக்கெடுக்கச் செய்கிறது. அண்ணல் நபி(ஸல்) அவர்களைச் சொல்லச் சொல்லச் சொல் இனிக்கும். கேட்கும் செவி குளிரும். இதயம் நனைய கண்கள் பனிக்கும்.
இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரின் மனதிலும் நபி(ஸல்) அவர்களைக் குறித்த மதிப்பீடு கோடி மடங்கு உயரும். பேரன்பு பெருக்கெடுக்கும். எண்ணி எண்ணி வியக்கத் தோன்றும்.
ஏராளமான வாழ்வியல் உதாரணங்கள் அண்ணலாரின் வாழ்வு முழுவதும் கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் இது வாசிப்பதற்கான நூல் மட்டுமல்ல; வாழ்க்கைக்கான நூலும்கூட.
Author: V.S. MOHAMMED AMEEN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இவர்தான் முஸ்லிம்
முஸ்லிம் என்றால் யார் என்பது குறித்து நம்முடைய மனதுக்குள் ஒரு வரைவிலக்கணத்தைப் பதித்து வைத்திருக்கின்றோம். அது இரட்டைப் பரிமாணங்கள் கொண்டது. மௌலானா அவர்கள் மூன்றாவது பரிமாணத்தை முன்வைக்கிறார். மனதை ஒரு முகப்படுத்தும் அந்த மூன்றாவது பரிமாணத்தைப் படிக்க தெளிவு பிறக்கும்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இளைஞனே விழித்தெழு
இளைய சமுதாயத்தின் இதயத்தினை தட்டியெழுப்பி உறங்கிக் கிடக்கும் அவர்களது உணர்வுகளை விழித்தெழச் செய்யும் வண்ணம் மௌலானா மௌதூதி ஆற்றிய சொற்பொழிவுதான் இந்நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இறுதி நபித்துவம்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைத்தூதர்கள் பற்றி இறைமறை
இறைத்தூதர்கள் யார், அவர்களின் இயல்புகள், தகுதிகள், பணிகள் என்ன? இறுதிவேதமான திருக்குர்ஆனே 25 இறைத்தூதர்கள் பற்றிய விளக்கத்தை அளிக்கிறது. இந்நூல் இத்துறையில் ஒரு முன்னோடியாக விளங்குகிறது.
Author: DR. QURSHID AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைநம்பிக்கை வாழ்வின் அடிப்படை
இறைநம்பிக்கை எனும் நல்ல வித்து ஊன்றப்படுவதற்கான பூமியை (உள்ளத்தை) பண்படுத்தும் பணியைப் பக்குவமாய்ச் செய்கிறது, இந்நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்
அன்னையரின் வாழ்வு குறித்து இத்தனைச் சுருக்கமான – ஆனால் நிறைவான விவரங்கள் கொண்ட நூல் இதற்கு முன்பு இது போல் வந்ததில்லை
Author: MOULANA ABDUL HAFEEZ RAHMANI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைமறை பற்றி இறைமறை
திருக்குர்ஆனைப் பற்றி திருக்குர்ஆனே கூறும் சுயஅறிமுக நூல். குர்ஆன் பற்றிக் கூறும் வசனங்களின் தொகுப்பு.
Author: DR. QURSHID AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இறைவனைப் பற்றி இறைமறை
இறைவன் இருக்கின்றானா? அவன் எத்தகையவன்? அவனது பண்பு நலன்கள் என்ன? அவனுக்கும் மனிதனுக்கும்இடையே உள்ள உறவு எத்தகையது? அத் தனைக் கேள்விகளுக்கும் இறைவனே விடையளிக்கிறான்.
Author: DR. QURSHID AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைவன் அழைக்கின்றான்
அழைப்புப் பணியின் போது கடைப்பிடிக்க வேண்டிய அவசிய குறிப்புகளை வழங்குவது இந்நூல்.
Author: MOULANA MUHAMMAD YUSUF ISLAHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைவா உன் வாசலில்
இறைஞ்சுதல் தலைவிதியையும் மாற்றும் எனும் நபிமொழி துஆவின் வலிமைக்குச் சான்று. இதயம் உருக கண்களில்நீர்பெருக நாத்தழுதழுக்க இருகைகளையும் ஏந்தி இறைவனிடம் கேட்கும் பிரார்த்தனை இறைவனின் அரியணையைச் சென்றடைகிறது.
Author: MOULANA MUHAMMED FAROOK KHAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இனிக்கும் இஸ்லாம்
இஸ்லாம் என்பது ஓர் வாழ்வியல் கோட்பாடு. மிகப்பெரும் சித்தாந்தம். உலகை வழி நடத்தும் கொள்கை. அந்த அடிப்படையில் இஸ்லாத்தை அனைவரும் அணுக வேண்டும் என்பதற்காகத்தான் இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறைகள் இந்த நூலில் எளிய கட்டுரைகளாக 50 தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
Author: V.S. MOHAMMED AMEEN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாத்தில் இல்லறம்
மௌனங்கள் உடைபடும் காலம் இது. ஒரு காலம் இருந்தது. செக்ஸ் பற்றிப் பேசினாலே பாவம்; பாலியல் குறித்து விவாதிப்பதே வரம்பு மீறிய செயல் என்றெல்லாம் கருதப்பட்டு வந்தது. அதன் காரணமாக புதுமணத் தம்பதிகளுக்குக்கூட இஸ்லாம் கூறும் பாலியல் வழிகாட்டுதலை வழங்காமல், ‘கட்டுப்பாடு’ எனும் போர்வையில் பாலியல் அறியாமையைத்தான் வளர்த்து வந்தோம். இதனால் இளம் தலைமுறையினர் வழிமாறிச் செல்லத் தொடங்கினர். பாலியல் பற்றி முஸ்லிம் அறிஞர்களிடமோ பெரியவர்களிடமோ பேசினால் தப்பாக நினைப்பார்கள் என்பதால் அதுபற்றிய தங்களின் ஐயங்களுக்கு மார்க்கத்துக்கு வெளியே தீர்வுகளைத் தேடத் தொடங்கினார்கள். அதனால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
ஆனால் இப்போது காலம் மாறுகிறது. இது தகவல் தொழில்நுட்ப யுகம். ஒரு பொத்தானின் தட்டலில் பிரபஞ்சமே விரியும் காலம். பாலியல் எம்மாத்திரம்? ஆகவே இனியும் மௌனம் அழகன்று. இளைஞர்களுக்கும் புதுமண இணைய-ருக்கும் கணவன்-மனைவியர்க்கும் இல்லற உறவு குறித்தும் பாலியல் விவகாரங்கள் குறித்தும் குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் வழிகாட்டுதலை வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகி விட்டது. இந்தத் தேவையை நிறைவு செய்யும் விதத்தில்தான் ‘இஸ்லாத்தில் இல்லறம்’ எனும் இந்த இனிய நூலை வெளியிட்டுள்ளோம்.
சமூகத்தின் மிகச் சிறிய, ஆனால் முக்கியமான உறுப்பு குடும்பம் ஆகும். திருமண உறவின் மூலமாகவே அது வடிவம் கொள்கிறது. பொருத்தமான இல்லறம்தான் பக்குவமான தலைமுறைக்குத் தொட்டில் இடுகிறது. குடும்ப உறவுகள் சிதையுமேயானால் சமுதாய அமைப்பே நிலைதடுமாறிப் போய்விடும். ஆக்கபூர்வமான சமுதாய அமைப்புக்கு உறுதியான குடும்ப உறவுகள் தவிர்க்க முடியாதவை ஆகும்.
சிறிய செயலைக்கூட அழகாகச் செய்ய வேண்டும் எனில் சில நியமங்களையும் வழிகளையும் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. இல்வாழ்க்கை என்பது ஓர் அறம்; ஒரு கலை; பார்த்துப் பார்த்துச் செதுக்க வேண்டிய அழகியலின் வெளிப்பாடு; பண்புகள் மிளிர வேண்டிய பாசமலர்த் தோட்டம்; இல்லறத்தின் நோக்கம் வெறும் பாலியல் வேட்கை மட்டுமன்று; குறுகிய காலத்திற்கான ஏற்பாடுமன்று. மாறுபட்ட சூழ்நிலைகளில் வளர்ந்து வந்த இரண்டு இதயங்கள் ஆயுள் காலம் வரை கருத்தொருமித்து வாழ்வதற்குப் பெயர்தான் இல்லறம். வரும் தலைமுறைக்கு அடித்தளமாக இருப்பதுதான் இல்லறம். அறிவும் பயிற்சியும் அதற்கு மிகமிக இன்றியமையாதவை ஆகும். அதனால்தான் இத்துறை குறித்து இஸ்லாம் மிக ஆழமான, அழகான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இந்த நூலை மலையாளத்தில் எழுதியவர் புகழ்பெற்ற மார்க்க அறிஞரும் பன்னூலாசிரியருமான ஷேக் முஹம்மத் காரக்குன்னு ஆவார். கேரள இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான அவர் பன்முக ஆற்றல் கொண்டவர்.இஸ்லாமிய ஒளியில் இல்லறம் குறித்த இதுபோல் ஒரு நூல் அதற்கு முன்பு மலையாளத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய அந்த அரிய நூலை ஆர்வத்துடன் தமிழாக்கம் செய்திருப்பவர் கவிஞர் கே.எம்.முஹம்மத் அவர்கள். மூல நூலாசிரியர் அறிஞர் முஹம்மத் அவர்களுக்கும், மொழியாக்கம் செய்த கவிஞர் முஹம்மத் அவர்களுக்கும் எங்களின் நன்றிகள் உரித்தாகுக.
இஸ்லாத்தில் இல்லறம் குறித்து இத்தனைத் தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு நூல் தமிழில் வெளிவருவது இதுதான் முதல்முறை. இல்லற வாழ்வின் எல்லாக் கிளைகளையும் இணைத்துத் தொகுத்து வகுத்து இதுபோல் ஒரே நூலில் சொல்லியிருப்பது அரிதினும் அரிதே. பாலியல் உறவு குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதுடன் இதர மதங்களின் கண்ணோட்டம் என்ன என்பதையும் ஆதார நூல்களின் அடிப்படையில் விளக்கிச் சொல்வது இந்த நூலின் தனிச் சிறப்பாகும். இல்லற வாழ்வில் இணைந்து இருப்பவர்களும் இணைய இருப்பவர்களும் கட்டாயம் இந்த நூலைப் படிக்க வேண்டும். இஸ்லாம் கூறும் இல்லற நெறி எத்துணை அழகானது என்பதை எண்ணி எண்ணி உணர்ந்து, அதற்கேற்ப தங்கள் இல்லற வாழ்வை அமைத்துக்கொண்டு இம்மை நலன்களையும் மறுமை வெற்றிகளையும் பெறுவோமாக!
Author: SHAIKH MUHAMMAD KARAKUNNU
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாத்தில் இறைவழிபாடு
இறைவன் ஒருவனுக்கே மனிதன் வழிபட வேண்டும் எனும் கருத்தோட்டத்தை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும்வகையில் எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST