-
இஸ்லாமிய மறுமலர்ச்சி
இஸ்லாமிய மறுலர்ச்சி என்றால் என்ன?இஸ்லாமிய மறுமலர்ச்சியைத் தோற்றுவிப்பவர்களின் – அதாவது முஜத்தித்களின் வரைவிலக்கணம் என்ன?ஒருவரை ‘முழுமையான மறுமலர்ச்சியாளர்’ என்று எப்படி மதிப்பிடுவது?இஸ்லாமிய வரலாற்றில் இதுவரை தோன்றிய முஜத்தித்கள் யார் யார்? அவர்களுடைய சாதனைகள் என்ன?இமாம் மஹ்தி அவர்களின் தகுதிநிலையும் முன்னறிவிப்புகளும் வருகையும் எத்தன்மை வாய்ந்தவை?– இன்னும் இது போன்ற பல வினாக்களுக்கும் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் இந்த நூலின் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய வாழ்க்கை முறை
வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இஸ்லாம் மனித சமுதாயத்திற்கு எவ்விதம் வழிகாட்டுகிறதுஎன்பதனை பல்வேறு தலைப்புகளில் விளக்கும் அற்புத நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய வாழ்வு – குத்பாப் பேருரைகள்
மௌலானா மௌதூதி அவர்களின் குத்பாப் பேருரை நூல் சாதாரணப் புத்தகம் அல்ல!கல்வியறிவற்ற பாமர மக்களுக்குப் புரியும் வகையில் அவர்களின் அன்றாட வாழ்வில் பழக்கப்பட்ட விஷயங்-களைக் கொண்டே – அடிப்படையான உண்மைகளை எடுத்துரைக்கிறது.மௌலானா மௌதூதி அவர்களின் இதர நூல்களைவிட இந்தப் பேருரை மக்களிடம் இறையருளால் அதிக தாக்கங்களை ஏற்படுத்தி யிருக்கிறது. இது நிறைய இதயங்களைத் தட்டியெழுப்பி, பலருடைய வாழ்க்கைக்குப் புதிய வடிவம் கொடுத்தது. தம் விருப்பப்படி வாழாமல் வல்ல இறைவனுக்கே அடிபணிந்து வாழும் மனோநிலையை மக்களிடம் ஏற்படுத்தியது.
அன்று தாருல் இஸ்லாத்தின் சின்னசிஞ்சிறு மஸ்ஜிதில் மௌலானா அவர்களுக்கு எதிரில் சாதாரண கிராம மக்கள்தாம் இருந்தார்கள். அம்மக்கள் அரசியலோ, வரலாறோ, தத்துவமோ அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குத் தெரிந்திருந்த விஷயங்கள்1. இறைநம்பிக்கை,2. இஸ்லாத்தின் அடிப்படைகளான 5 கடமைகள் மட்டும்தான். எனவேதான், இவ்விரு விஷயங்களை வைத்துக்கொண்டு எளிய மொழியில் அந்தக் கிராம மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் இந்த உரைகளை அமைத்தார் மௌலானா.பல ஆண்டுகள் உருண்டோடி விட்டபோதிலும் அவ்வுரை ஏற்படுத்திய புத்துணர்ச்சியை இன்னும் நம்மால் உணர முடிகிறது.Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் வகுக்கும் வாழ்க்கை வழி
இறைவனுக்கு வழிபடுவதும் அவனது கட்டளைகளுக்குப் பணிவதும்தான் மனிதனின் கடமை என்ற இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கோட்பாட்டையும் இன்னபிற விஷயங்களையும் திருமறைச் சான்றுகளுடன் தமக்கே உரிய பாணியில் விளக்குகிறார் ஆசிரியர்.
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் வழங்கும் தூது
இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், அவற்றிற்கிணங்க உருவாகும் வாழ்க்கை நெறியையும் தெளிவாக, சுருக்கமாக விளக்கும் நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஒழுக்க மாளிகை
படைப்பாளனின் அதிகாரத்தை ஏற்று அவனது ஆணை களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதால் மட்டுமே ஒழுக்கரீதியான சமுதாயத்தை அமைக்க முடியும் என்பதை விளக்கும் நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஒழுக்கம் பேண ஒரே வழி
திருக்குர்ஆன் எனும் இறைவேதத்தை எப்படி அணுக வேண்டும் என்பதைக் கூறும் இந்நூல் குர்ஆனை விளங்குவதற்கு ஒரு முன்னோடி நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
குர்ஆனை அணுகும் முறை
திருக்குர்ஆன் எனும் இறைவேதத்தை எப்படி அணுக வேண்டும் என்பதைக் கூறும் இந்நூல் குர்ஆனை விளங்குவதற்கு ஒரு முன்னோடி நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சத்தியப் பாதையில் லட்சியப் பயணம்
இஸ்லாம் எனும் சத்திய நெறியின் ஆழத்தையும் அகலத்தையும் நுணுகி ஆராய்ந்து, அதன் நுட்பத்தையும் – திட்பத்தையும் விஞ்ஞான ரீதியாக விளக்கும் நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சமுதாய வாழ்வின் உயிர் ஜகாத்
இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை எங்ஙனம் அமைதியும் செழிப்பும் தழைத்தோங்கும் சமுதாயத்தை அமைக்கிறது என்பதை பாமரர்களும் எளிதாய்ப் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆனின் மேற்கோள்களுடன் அருமையாக விளக்குகிறார் ஆசிரியர்.
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சாந்திக்கு வழி
ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாத ஆழிய கருத்துகளுடன், சாந்திமயமான வாழ்வை நோக்கி அழைக்கும் உன்னத படைப்பு!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சென்னைப் பேருரை
சென்னை பேருரை சுதந்திர இந்தியாவில் – இந்து, முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர், தலித், பவுத்தர் என இணைந்துவாழும் ஒரு பன்மைச் சமூகத்தில், முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும்? எதற்கு முன்னுரிமை தர வேண்டும்? எந்தெந்த பணிகளைச் செய்ய வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதே ‘சென்னைப் பேருரை’ எனும் இந்நூல். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இஸ்லாமிய அறிஞர் உலகெங்கும் போற்றப்படும் மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் […]
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 17 (பனூஇஸ்ராயீல்)
இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய மாபெரும் இஸ்லாமிய ஆளுமை மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்). 20ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகக் களம் கண்ட புரட்சிகர சிந்தனையாளரான அவர், இஸ்லாத்தை இம்மண்ணில் மேலோங்கிடச் செய்யும் உயரிய லட்சியத்துக்காக அல்லும் பகலும் உழைத்தவர். பல இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆதர்ச நாயகராக விளங்கிய மௌதூதியைக் கற்பதற்கான ஆர்வமும் தேடலும் உலகம் முழுக்க இன்றும் உயிர்ப்புடன் இருந்துவருகிறது.
மௌலானா மௌதூதி (ரஹ்) 1903ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் ஔரங்காபாதில் சூஃபிப் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார். அரபு, பாரசீகம், சட்டம், ஹதீஸ் ஆகியன அவருக்கு சிறுபிராயம் முதலே கற்பிக்கப்பட்டன. வீட்டிலேயே இவற்றைப் பயின்று வந்த அவர் தனது பதினோராம் வயதில் வீட்டுக்கு அருகிலிருந்த ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டார். அங்குதான் நவீனக் கல்வி அவருக்கு வாய்த்தது. இயற்கை அறிவியல், ஆங்கிலம், கணிதம் போன்றவற்றை அங்குதான் பயின்றார். பிறகு 1916ல் ஹைதராபாதில் பேரறிஞர் ஹமீதுத்தீன் ஃபராஹி தலைமையாசிரியராக இருந்த தாருல் உலூம் அரபிக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அவரது தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவருக்குக் கல்வி தடைப்பட்டது. தந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு போபாலுக்குக் குடிபெயரும் நிலை ஏற்பட்டது. அங்கே சர்ச்சைக்குரிய உர்து இலக்கியவாதியாக அறியப்பட்ட நியாஸ் ஃபதெஹ்பூரிக்கு அறிமுகமானார் மௌதூதி. அவர்தான் மௌதூதியை எழுத்துப் பணியை மேற்கொள்ளுமாறு ஊக்கம் தந்தார். இளம் வயது தொட்டே தான் வாழ்ந்த காலத்தின் முக்கியச் சிந்தனையாளர்களாகக் கருதப்பட்ட பலருடனும் மௌலானா மௌதூதிக்குத் தொடர்பிருந்தது. பல்வேறு சிந்தனைப் போக்குகளை அவர் கடந்து வந்திருப்பதற்கு இது ஒரு காரணமாக விளங்குகிறது.
இளம் மௌதூதியின் அன்றாட வாழ்வே ஒரு போராட்டமாகிப் போனது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் உழன்றதால் முறையாகக் கல்வி கற்கும் சூழலை மௌதூதி இழந்தார். ஆரம்பத்திலிருந்தே உர்து மொழிவளமும், ஆய்வுநோக்கும் கொண்டவராக மௌதூதி திகழ்ந்ததால் பத்திரிகைத் துறை அவரை உள்ளீர்த்துக் கொண்டது. தனது 17ஆம் வயதில் ஜபல்பூர் காங்கிரஸ் கட்சியின் உர்து வாரப் பத்திரிகையான ‘தாஜ்’-ல் பணியாற்றத் தொடங்கினார். அங்கு வேலைப் பார்த்ததன் மூலம் அவரின் பொருளாதார நிலை சற்று முன்னகர்ந்தது. தடைப்பட்ட தன்னுடைய கல்வியை சுயமாகத் தொடர நினைத்தார்.
ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளைப் பயில்வது, சர் சையித் அஹ்மத் கான் போன்றோரின் படைப்புகளை வாசிப்பது போன்றவற்றில் நேரம் செலவிட்டார். இது தவிர, இந்தக் காலகட்டத்தில் மௌலானா மேற்கொண்ட முயற்சிகள் பற்றி இந்திய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னோடியான அப்துல் ஹக் அன்சாரி கூறும்போது, அவர் “மேலைத் தத்துவச் சிந்தனைகளின் பக்கம் திரும்பி, முழுமையாக ஐந்து ஆண்டுகள் அர்ப்பணித்து, மேற்கத்திய தத்துவம் தொடர்பான முக்கிய ஆக்கங்கள், அரசியல் அறிவியல், வரலாறு, சமூகவியல் முதலானவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டார்” எனக் குறிப்பிடுகிறார். உலகின் மிகப் பெரும் சக்தியாக ஐரோப்பா எழுச்சிபெற்றதில் அங்கே உருவான அறிவுஜீவிகளான ஹெகல், ஆடம்ஸ்மித், ரூசோ, மால்தூஸ், வால்டேர், டார்வின், கோதே போன்றோரின் அறிவுசார் பங்களிப்பை மௌதூதி சுட்டிக்காட்டினார்.
ஜம்மியத் உலமா யே ஹிந்துடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு அவரது வாழ்வில் மற்றொரு திருப்பத்தை உண்டாக்கியது. அந்த அமைப்பின் ஏடான ‘முஸ்லிம்’ல் (பின்னர் அது ‘ஜம்மியத்’ என பெயர் மாற்றம் பெற்றது) பொறுப்பாசிரியரானார். சற்றேறக்குறைய மூன்றாண்டுகள் அதில் பணியாற்றிய அவருக்கு முக்கியமான அனுபவங்களெல்லாம் அங்கே கிடைத்தன. அந்த சமயத்தில் காந்தியால் வழிநடத்தப்பட்ட கிலாஃபத் இயக்கத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்குபெற்றார். இந்திய தேசிய காங்கிரஸுடன் முஸ்லிம்களை ஒன்றிணைப்பதற்காக வேலை செய்தார். அப்போது, காங்கிரஸின் தேசியவாதம் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவதற்கு இட்டுச்செல்வதை அவதானித்தார். மதக் கலவரங்கள் அதிகரிக்கத் தொடங்கிய அந்த நேரத்தில் காங்கிரஸின் முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கண்டு அதிருப்தியடைந்தார். இஸ்லாம் வன்முறை சமயமாகத் தூற்றப்பட்டுக் கொண்டிருந்த இந்தக் காலப்பிரிவில்தான் அதற்குப் பதிலளிக்கும் நோக்கில் மௌதூதியின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான ‘அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்’ நூல் வெளியானது. தேசியவாதம் இந்திய அரசியலில் தாக்கம் செலுத்தியது மட்டுமின்றி உஸ்மானிய பேரரசைக் கவிழ்ப்பதற்கு முதன்மைக் காரணியாக விளங்கியதையும் மௌதூதி கண்ணுற்றார். ஜம்மியத் உலமா – காங்கிரஸ் ஆதரவுநிலையைத் துறந்து முற்றிலுமாக அவர் விலகுவதற்கு மேற்சொன்ன விஷயங்களெல்லாம் வழிவகுத்தன.
பிறகு, டெல்லியிலிருந்து ஹைதராபாதுக்கு இடம்பெயர்ந்த அவர், இஸ்லாத்தை ஆய்ந்தறிவதில் தீவிரமாக ஈடுபட்டார். நிஜாமின் ஆட்சியில் ஏற்பட்ட சரிவும், மௌதூதியின் ஆழ்ந்த வாசிப்பும் ஓர் உண்மையை அவருக்குத் தூலமாகப் புலப்படுத்தியது. இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றாததே முஸ்லிம்களின் வீழ்ச்சிக்குக் காரணம் எனும் உண்மைதான் அது. குர்ஆனின் பக்கம் முஸ்லிம்களை மீளச்செய்ய வேண்டும் எனும் அவரின் வேட்கை 1932ல் ‘தர்ஜூமானுல் குர்ஆன்’ எனும் உர்து பத்திரிகையை ஆரம்பிக்க வழிகோலியது. இந்த இதழ் இஸ்லாமிய புனர்நிர்மாணத்துக்கு அவரது பெரும் பங்களிப்பாகக் கொள்ளப்படுகிறது.
1937ல் நடைபெற்ற பொதுத் தேர்தலும் அதையொட்டி காங்கிரஸ் அமைத்த மாகாண அமைச்சரவையும் மௌலானா மௌதூதியின் வாழ்வில் மிகப் பெரும் திருப்புமுனையாகின. “இந்து அரசாங்கம்” என இதைக் குற்றம் சாட்டிய மௌதூதி, முஸ்லிம்களை அரசியல் மட்டத்திலும், கலாச்சார ரீதியிலும் இது ஓரங்கட்டுவதோடு, கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்களாக அவர்களை மாற்றவே முனைகிறது எனக் கண்டித்தார். முஸ்லிம் லீகும் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பை மேற்கொண்டது. எனினும் மௌதூதியின் கண்ணோட்டம் அதிலிருந்து வேறுபட்டு தனித்து நின்றது. காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகியவை மதச்சார்பற்ற தேசத்துக்காக உழைப்பதால் இவற்றுக்கு மத்தியில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என அவர் சாடினார். முஸ்லிம் லீக்கை “ஜமாஅத்தே ஜாஹிலிய்யா” என்றதோடு, ஷரிஆ அடிப்படையில் அது அரசை அமைக்க முயலாததால் எதிர்காலத்தில் பாகிஸ்தான் “முஸ்லிம்களின் இறைமறுப்பு அரசாக”த் திகழும் என்றார். ஜின்னா மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளிலும், சட்டங்களிலும் மட்டுமே அறிவு பெற்றிருப்பதால் இஸ்லாமிய ஆட்சி மலர்வதற்கு அவர் எதிரானவர் என்பது மௌலானாவின் கருத்தாக இருந்தது. மதச்சார்பின்மை, தேசியவாதம் போன்றவற்றை எதிர்த்துவந்த மௌதூதி இப்படியாக அபிப்ராயம் கொண்டிருந்தது வியப்புக்குரியதன்று.
இந்தக் கருத்தோட்டத்தின் நீட்சியாகவே, 1941ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் நாள் ஜமாஅத்தே இஸ்லாமி எனும் பேரியக்கத்தை 75 பேர்களுடன் சேர்ந்து மௌதூதி நிறுவினார். ‘ஹுக்குமத்தே இலாஹி’ (அல்லாஹ்வின் அரசாங்கம் அல்லது இஸ்லாமிய அரசு) என்பது அதன் குறிக்கோளாக இருந்தது. இறை ஆட்சியை நிர்மாணிப்பது முஸ்லிம்களின் கடமை என்றும், அடிப்படை நம்பிக்கையான ஏகத்துவத்தின் அங்கம் அது என்றும் கூறினார். ‘அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள்’ என்கிற அவரது நூலில் இலாஹ் (இறைவன்), ரப் (அதிபதி), இபாதத் (வழிபாடு), தீன் (வாழ்கைநெறி) ஆகிய குர்ஆனிய சொற்பிரயோகத்தின் வழி இவற்றை நிறுவினார். இறைவனுக்கு அன்றி அதிகாரம் மனிதனின் கரங்களில் ஒப்படைக்கப்படுவதை ஜாஹிலிய்யா என்று எதிர்த்தார்.
இஸ்லாத்தை முழு வாழ்க்கைத் திட்டமாக முன்வைத்தார். மனித உடலின் எந்தவொரு பாகமும் பிரித்துப் பார்க்க முடியாதபடி ஒன்றோடு மற்றொன்று பின்னிப்பிணைந்து இருப்பதை இஸ்லாத்திற்கு உருவகப்படுத்திக் காட்டினார். இதன் மூலம் முழு வாழ்க்கைத் திட்டத்தின் உயிர்நாடியாக அரசு இருப்பதை விளக்கினார். ஜாஹிலிய்யாவுக்கும் இது பொருந்தும் எனச் சுட்டிக்காட்டி, இஸ்லாமும் ஜாஹிலிய்யாவும் ஒருபோதும் ஒன்றாகப் பயணிக்க முடியாதென அழுத்தமாகப் பதிவு செய்தார். மானுடத்தின் வரலாற்றை ‘ஹக்’-க்கும் (சத்தியம்/நீதி) ‘பாத்தில்’-க்கும் (அசத்தியம்) இடையிலான – இஸ்லாத்துக்கும் ஜாஹிலிய்யாவுக்குமான – தொடர் போராட்டமாக அணுகினார். இவையெல்லாம் இஸ்லாத்தைக் குறுக்கிப் புரிந்துகொள்ளும் பிற இஸ்லாமிய அறிஞர்களில் இருந்து மௌலானா மௌதூதியை வேறுபடுத்திக் காட்டும் அம்சங்களாகின.
தேசப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி ஏற்படவேண்டும் என்று ஆவல்கொண்டார் மௌதூதி. ஆனால் அவரது குரலுக்கு அந்நாட்டின் அதிகார வர்க்கம் செவிசாய்க்காததோடு, இஸ்லாமிய ஆட்சிக்கான எதிர்பார்ப்பை சுமந்திருந்த மக்களின் நம்பிக்கையையும் பாழ்படுத்தியது. மௌதூதி வாழ்ந்த காலமெல்லாம் தொடர்ந்து அரசியல் செயல்பாட்டில் ஈடுபட்டே வந்தார். சில சறுக்கல்களும் அதில் இருக்கவே செய்தன.
காதியானிகளுக்கு எதிராக அவர் எழுதியதற்காக 1953 மே மாதம் 11 அன்று மௌலானா மௌதூதிக்குத் தூக்கு தண்டனை வழங்கியது பாகிஸ்தான் நீதிமன்றம். அதற்கு எதிராக உலகம் முழுக்க முஸ்லிம்களின் கண்டக் குரல்களும் போராட்டங்களும் வெடித்தன. அரசுக்கு மௌதூதி கருணை மனு அளிக்கும்படி கோரப்பட்டது. ஆனால் அவர் அதைக் கடுமையாக மறுத்துவிட்டார். பின்னர் அவருக்குக் கொடுத்த தண்டனை தளர்த்தப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது; அதுவும் பிற்பாடு விலக்கப்பட்டு மௌதூதி விடுதலை செய்யப்பட்டார்.
ஜமாஅத்தே இஸ்லாமி பேரியக்கத்தை மௌதூதி மிகச் சிறப்பாக தலைமை தாங்கினார். தீனை மனித வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் நிலைநாட்டும் நோக்கில் பல்வேறு புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதிக்குவித்தார். அரபு, வங்காளி, ஹிந்தி, ஆங்கிலம் முதலான பல மொழிகளுக்கு அவரின் உர்து ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. முப்பது ஆண்டுகள் செலவழித்து அவர் எழுதிய ‘தஃப்ஹீமுல் குர்ஆன்’ தஃப்சீர் அவரது ஆகப்பெரும் பங்களிப்பாகத் திகழ்கிறது.
முதுமைக் காலத்தில் கடும் உடல் சுகவீனத்தால் அவதியுற்றார் மௌதூதி. 1972ல் ஜமாஅத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலக அனுமதிக்குமாறு ஜமாஅத் தலைமையை அவர் கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோள் ஷுறா உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மௌலானாவின் உடல்நிலை ரொம்பவும் மோசமாகியதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் மருத்துவராக இருந்த அவரது மகன் சிகிச்சைக்காக அங்கே மௌதூதியை அழைத்துச் சென்றார். அங்கே சிகிச்சை பலனின்றி 1979 செப்டம்பர் 22ஆம் நாள் பேரறிஞர் மௌதூதி (ரஹ்) இம்மண்ணை விட்டு அகன்றார். உலகின் பல இடங்களில் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அவரது உடல் லாஹூரிலுள்ள அவருடைய இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 22 (அல் ஹஜ்)
திருக்குர்ஆனின் 22ஆவது அத்தியாயமான அல்-ஹஜ்ஜுக்கு விளக்கவுரை அளித்துள்ள மௌலானா மௌதூதி அவர்கள், அல்லாஹ் மூன்று குழுவினரை நோக்கி கருத்துரைகளை நிகழ்த்துவதாக தெரிவிக்கிறார்கள். அவர்கள்,
1) மக்கத்து இணைவைப்போர்,
2) இறைநம்பிக்கைக்கும் இறைமறுப்புக்குமிடையில் தடுமாறும் முஸ்லிம்கள்,
3) வாய்மைமிக்க இறைநம்பிக்கையாளர்கள்
என்று வகைப்படுத்தியுள்ளார்கள். மறுமைநாளின் பூகம்பம் மாபெரும் திகிலை ஏற்படுத்துவதாக இருக்கும், அந்தக் கோபத்தின் பிடியிலிருந்து மனிதர்களே உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று தொடங்கும் இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்திற்கே மௌலானா அவர்கள் நீண்டதொரு விளக்கத்துடன் விரிவுரையை அளித்துள்ளார்கள்.
இது போன்றே பல வசனங்களுக்கு ஐயங்களுக்கிடமின்றி மிக தெளிவாகவும் குர்ஆன் எடுத்துரைக்கும் செய்தியை சரியான பார்வையுடனும் விளக்கும் விதம் மெளலானா அவர்களின் சிந்தனையாற்றலை பிரதிபலிக்கிறது.About The Author
இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய மாபெரும் இஸ்லாமிய ஆளுமை மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்). 20ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகக் களம் கண்ட புரட்சிகர சிந்தனையாளரான அவர், இஸ்லாத்தை இம்மண்ணில் மேலோங்கிடச் செய்யும் உயரிய லட்சியத்துக்காக அல்லும் பகலும் உழைத்தவர். பல இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆதர்ச நாயகராக விளங்கிய மௌதூதியைக் கற்பதற்கான ஆர்வமும் தேடலும் உலகம் முழுக்க இன்றும் உயிர்ப்புடன் இருந்துவருகிறது.
மௌலானா மௌதூதி (ரஹ்) 1903ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் ஔரங்காபாதில் சூஃபிப் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார். அரபு, பாரசீகம், சட்டம், ஹதீஸ் ஆகியன அவருக்கு சிறுபிராயம் முதலே கற்பிக்கப்பட்டன. வீட்டிலேயே இவற்றைப் பயின்று வந்த அவர் தனது பதினோராம் வயதில் வீட்டுக்கு அருகிலிருந்த ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டார். அங்குதான் நவீனக் கல்வி அவருக்கு வாய்த்தது. இயற்கை அறிவியல், ஆங்கிலம், கணிதம் போன்றவற்றை அங்குதான் பயின்றார். பிறகு 1916ல் ஹைதராபாதில் பேரறிஞர் ஹமீதுத்தீன் ஃபராஹி தலைமையாசிரியராக இருந்த தாருல் உலூம் அரபிக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அவரது தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவருக்குக் கல்வி தடைப்பட்டது. தந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு போபாலுக்குக் குடிபெயரும் நிலை ஏற்பட்டது. அங்கே சர்ச்சைக்குரிய உர்து இலக்கியவாதியாக அறியப்பட்ட நியாஸ் ஃபதெஹ்பூரிக்கு அறிமுகமானார் மௌதூதி. அவர்தான் மௌதூதியை எழுத்துப் பணியை மேற்கொள்ளுமாறு ஊக்கம் தந்தார். இளம் வயது தொட்டே தான் வாழ்ந்த காலத்தின் முக்கியச் சிந்தனையாளர்களாகக் கருதப்பட்ட பலருடனும் மௌலானா மௌதூதிக்குத் தொடர்பிருந்தது. பல்வேறு சிந்தனைப் போக்குகளை அவர் கடந்து வந்திருப்பதற்கு இது ஒரு காரணமாக விளங்குகிறது.
இளம் மௌதூதியின் அன்றாட வாழ்வே ஒரு போராட்டமாகிப் போனது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் உழன்றதால் முறையாகக் கல்வி கற்கும் சூழலை மௌதூதி இழந்தார். ஆரம்பத்திலிருந்தே உர்து மொழிவளமும், ஆய்வுநோக்கும் கொண்டவராக மௌதூதி திகழ்ந்ததால் பத்திரிகைத் துறை அவரை உள்ளீர்த்துக் கொண்டது. தனது 17ஆம் வயதில் ஜபல்பூர் காங்கிரஸ் கட்சியின் உர்து வாரப் பத்திரிகையான ‘தாஜ்’-ல் பணியாற்றத் தொடங்கினார். அங்கு வேலைப் பார்த்ததன் மூலம் அவரின் பொருளாதார நிலை சற்று முன்னகர்ந்தது. தடைப்பட்ட தன்னுடைய கல்வியை சுயமாகத் தொடர நினைத்தார்.
ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளைப் பயில்வது, சர் சையித் அஹ்மத் கான் போன்றோரின் படைப்புகளை வாசிப்பது போன்றவற்றில் நேரம் செலவிட்டார். இது தவிர, இந்தக் காலகட்டத்தில் மௌலானா மேற்கொண்ட முயற்சிகள் பற்றி இந்திய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னோடியான அப்துல் ஹக் அன்சாரி கூறும்போது, அவர் “மேலைத் தத்துவச் சிந்தனைகளின் பக்கம் திரும்பி, முழுமையாக ஐந்து ஆண்டுகள் அர்ப்பணித்து, மேற்கத்திய தத்துவம் தொடர்பான முக்கிய ஆக்கங்கள், அரசியல் அறிவியல், வரலாறு, சமூகவியல் முதலானவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டார்” எனக் குறிப்பிடுகிறார். உலகின் மிகப் பெரும் சக்தியாக ஐரோப்பா எழுச்சிபெற்றதில் அங்கே உருவான அறிவுஜீவிகளான ஹெகல், ஆடம்ஸ்மித், ரூசோ, மால்தூஸ், வால்டேர், டார்வின், கோதே போன்றோரின் அறிவுசார் பங்களிப்பை மௌதூதி சுட்டிக்காட்டினார்.
ஜம்மியத் உலமா யே ஹிந்துடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு அவரது வாழ்வில் மற்றொரு திருப்பத்தை உண்டாக்கியது. அந்த அமைப்பின் ஏடான ‘முஸ்லிம்’ல் (பின்னர் அது ‘ஜம்மியத்’ என பெயர் மாற்றம் பெற்றது) பொறுப்பாசிரியரானார். சற்றேறக்குறைய மூன்றாண்டுகள் அதில் பணியாற்றிய அவருக்கு முக்கியமான அனுபவங்களெல்லாம் அங்கே கிடைத்தன. அந்த சமயத்தில் காந்தியால் வழிநடத்தப்பட்ட கிலாஃபத் இயக்கத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்குபெற்றார். இந்திய தேசிய காங்கிரஸுடன் முஸ்லிம்களை ஒன்றிணைப்பதற்காக வேலை செய்தார். அப்போது, காங்கிரஸின் தேசியவாதம் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவதற்கு இட்டுச்செல்வதை அவதானித்தார். மதக் கலவரங்கள் அதிகரிக்கத் தொடங்கிய அந்த நேரத்தில் காங்கிரஸின் முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கண்டு அதிருப்தியடைந்தார். இஸ்லாம் வன்முறை சமயமாகத் தூற்றப்பட்டுக் கொண்டிருந்த இந்தக் காலப்பிரிவில்தான் அதற்குப் பதிலளிக்கும் நோக்கில் மௌதூதியின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான ‘அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்’ நூல் வெளியானது. தேசியவாதம் இந்திய அரசியலில் தாக்கம் செலுத்தியது மட்டுமின்றி உஸ்மானிய பேரரசைக் கவிழ்ப்பதற்கு முதன்மைக் காரணியாக விளங்கியதையும் மௌதூதி கண்ணுற்றார். ஜம்மியத் உலமா – காங்கிரஸ் ஆதரவுநிலையைத் துறந்து முற்றிலுமாக அவர் விலகுவதற்கு மேற்சொன்ன விஷயங்களெல்லாம் வழிவகுத்தன.
பிறகு, டெல்லியிலிருந்து ஹைதராபாதுக்கு இடம்பெயர்ந்த அவர், இஸ்லாத்தை ஆய்ந்தறிவதில் தீவிரமாக ஈடுபட்டார். நிஜாமின் ஆட்சியில் ஏற்பட்ட சரிவும், மௌதூதியின் ஆழ்ந்த வாசிப்பும் ஓர் உண்மையை அவருக்குத் தூலமாகப் புலப்படுத்தியது. இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றாததே முஸ்லிம்களின் வீழ்ச்சிக்குக் காரணம் எனும் உண்மைதான் அது. குர்ஆனின் பக்கம் முஸ்லிம்களை மீளச்செய்ய வேண்டும் எனும் அவரின் வேட்கை 1932ல் ‘தர்ஜூமானுல் குர்ஆன்’ எனும் உர்து பத்திரிகையை ஆரம்பிக்க வழிகோலியது. இந்த இதழ் இஸ்லாமிய புனர்நிர்மாணத்துக்கு அவரது பெரும் பங்களிப்பாகக் கொள்ளப்படுகிறது.
1937ல் நடைபெற்ற பொதுத் தேர்தலும் அதையொட்டி காங்கிரஸ் அமைத்த மாகாண அமைச்சரவையும் மௌலானா மௌதூதியின் வாழ்வில் மிகப் பெரும் திருப்புமுனையாகின. “இந்து அரசாங்கம்” என இதைக் குற்றம் சாட்டிய மௌதூதி, முஸ்லிம்களை அரசியல் மட்டத்திலும், கலாச்சார ரீதியிலும் இது ஓரங்கட்டுவதோடு, கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்களாக அவர்களை மாற்றவே முனைகிறது எனக் கண்டித்தார். முஸ்லிம் லீகும் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பை மேற்கொண்டது. எனினும் மௌதூதியின் கண்ணோட்டம் அதிலிருந்து வேறுபட்டு தனித்து நின்றது. காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகியவை மதச்சார்பற்ற தேசத்துக்காக உழைப்பதால் இவற்றுக்கு மத்தியில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என அவர் சாடினார். முஸ்லிம் லீக்கை “ஜமாஅத்தே ஜாஹிலிய்யா” என்றதோடு, ஷரிஆ அடிப்படையில் அது அரசை அமைக்க முயலாததால் எதிர்காலத்தில் பாகிஸ்தான் “முஸ்லிம்களின் இறைமறுப்பு அரசாக”த் திகழும் என்றார். ஜின்னா மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளிலும், சட்டங்களிலும் மட்டுமே அறிவு பெற்றிருப்பதால் இஸ்லாமிய ஆட்சி மலர்வதற்கு அவர் எதிரானவர் என்பது மௌலானாவின் கருத்தாக இருந்தது. மதச்சார்பின்மை, தேசியவாதம் போன்றவற்றை எதிர்த்துவந்த மௌதூதி இப்படியாக அபிப்ராயம் கொண்டிருந்தது வியப்புக்குரியதன்று.
இந்தக் கருத்தோட்டத்தின் நீட்சியாகவே, 1941ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் நாள் ஜமாஅத்தே இஸ்லாமி எனும் பேரியக்கத்தை 75 பேர்களுடன் சேர்ந்து மௌதூதி நிறுவினார். ‘ஹுக்குமத்தே இலாஹி’ (அல்லாஹ்வின் அரசாங்கம் அல்லது இஸ்லாமிய அரசு) என்பது அதன் குறிக்கோளாக இருந்தது. இறை ஆட்சியை நிர்மாணிப்பது முஸ்லிம்களின் கடமை என்றும், அடிப்படை நம்பிக்கையான ஏகத்துவத்தின் அங்கம் அது என்றும் கூறினார். ‘அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள்’ என்கிற அவரது நூலில் இலாஹ் (இறைவன்), ரப் (அதிபதி), இபாதத் (வழிபாடு), தீன் (வாழ்கைநெறி) ஆகிய குர்ஆனிய சொற்பிரயோகத்தின் வழி இவற்றை நிறுவினார். இறைவனுக்கு அன்றி அதிகாரம் மனிதனின் கரங்களில் ஒப்படைக்கப்படுவதை ஜாஹிலிய்யா என்று எதிர்த்தார்.
இஸ்லாத்தை முழு வாழ்க்கைத் திட்டமாக முன்வைத்தார். மனித உடலின் எந்தவொரு பாகமும் பிரித்துப் பார்க்க முடியாதபடி ஒன்றோடு மற்றொன்று பின்னிப்பிணைந்து இருப்பதை இஸ்லாத்திற்கு உருவகப்படுத்திக் காட்டினார். இதன் மூலம் முழு வாழ்க்கைத் திட்டத்தின் உயிர்நாடியாக அரசு இருப்பதை விளக்கினார். ஜாஹிலிய்யாவுக்கும் இது பொருந்தும் எனச் சுட்டிக்காட்டி, இஸ்லாமும் ஜாஹிலிய்யாவும் ஒருபோதும் ஒன்றாகப் பயணிக்க முடியாதென அழுத்தமாகப் பதிவு செய்தார். மானுடத்தின் வரலாற்றை ‘ஹக்’-க்கும் (சத்தியம்/நீதி) ‘பாத்தில்’-க்கும் (அசத்தியம்) இடையிலான – இஸ்லாத்துக்கும் ஜாஹிலிய்யாவுக்குமான – தொடர் போராட்டமாக அணுகினார். இவையெல்லாம் இஸ்லாத்தைக் குறுக்கிப் புரிந்துகொள்ளும் பிற இஸ்லாமிய அறிஞர்களில் இருந்து மௌலானா மௌதூதியை வேறுபடுத்திக் காட்டும் அம்சங்களாகின.
தேசப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி ஏற்படவேண்டும் என்று ஆவல்கொண்டார் மௌதூதி. ஆனால் அவரது குரலுக்கு அந்நாட்டின் அதிகார வர்க்கம் செவிசாய்க்காததோடு, இஸ்லாமிய ஆட்சிக்கான எதிர்பார்ப்பை சுமந்திருந்த மக்களின் நம்பிக்கையையும் பாழ்படுத்தியது. மௌதூதி வாழ்ந்த காலமெல்லாம் தொடர்ந்து அரசியல் செயல்பாட்டில் ஈடுபட்டே வந்தார். சில சறுக்கல்களும் அதில் இருக்கவே செய்தன.
காதியானிகளுக்கு எதிராக அவர் எழுதியதற்காக 1953 மே மாதம் 11 அன்று மௌலானா மௌதூதிக்குத் தூக்கு தண்டனை வழங்கியது பாகிஸ்தான் நீதிமன்றம். அதற்கு எதிராக உலகம் முழுக்க முஸ்லிம்களின் கண்டக் குரல்களும் போராட்டங்களும் வெடித்தன. அரசுக்கு மௌதூதி கருணை மனு அளிக்கும்படி கோரப்பட்டது. ஆனால் அவர் அதைக் கடுமையாக மறுத்துவிட்டார். பின்னர் அவருக்குக் கொடுத்த தண்டனை தளர்த்தப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது; அதுவும் பிற்பாடு விலக்கப்பட்டு மௌதூதி விடுதலை செய்யப்பட்டார்.
ஜமாஅத்தே இஸ்லாமி பேரியக்கத்தை மௌதூதி மிகச் சிறப்பாக தலைமை தாங்கினார். தீனை மனித வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் நிலைநாட்டும் நோக்கில் பல்வேறு புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதிக்குவித்தார். அரபு, வங்காளி, ஹிந்தி, ஆங்கிலம் முதலான பல மொழிகளுக்கு அவரின் உர்து ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. முப்பது ஆண்டுகள் செலவழித்து அவர் எழுதிய ‘தஃப்ஹீமுல் குர்ஆன்’ தஃப்சீர் அவரது ஆகப்பெரும் பங்களிப்பாகத் திகழ்கிறது.
முதுமைக் காலத்தில் கடும் உடல் சுகவீனத்தால் அவதியுற்றார் மௌதூதி. 1972ல் ஜமாஅத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலக அனுமதிக்குமாறு ஜமாஅத் தலைமையை அவர் கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோள் ஷுறா உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மௌலானாவின் உடல்நிலை ரொம்பவும் மோசமாகியதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் மருத்துவராக இருந்த அவரது மகன் சிகிச்சைக்காக அங்கே மௌதூதியை அழைத்துச் சென்றார். அங்கே சிகிச்சை பலனின்றி 1979 செப்டம்பர் 22ஆம் நாள் பேரறிஞர் மௌதூதி (ரஹ்) இம்மண்ணை விட்டு அகன்றார். உலகின் பல இடங்களில் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அவரது உடல் லாஹூரிலுள்ள அவருடைய இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தஃப்ஹீமுல் குர்ஆன்_(32 Books Package)
திருக்குர்ஆன் முன் வைக்கின்ற அழைப்பை விளக்கிச் சொல்வதற்காக காலம்தோறும் விரிவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன; இவை காலத்தை வென்று நிற்கின்றன. இந்த தொடரில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் “மௌலானா சையத் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)” அவர்கள் எழுதிய குர்ஆனின் தலைசிறந்த விளக்க உரையாக “தஃப்ஹீமுல் குர்ஆன்” திகழ்கின்றது.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹4440 -
திருக்குர்ஆன் கையடக்கம்
நடுத்தர வர்க்கத்தினர் கூட வாங்கிப் படிக்கும் அளவில், பயணத்தின் போதும் எடுத்துச் செல்லும் வடிவில் கையடக்கப் பிரதியாக…திருவசனங்கள் ஒவ்வொன்றும் எடுத்தாளும் வகையில் தனித்தனி எண்களுடன்…Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் தமிழாக்கம் விளக்கவுரை
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUSமனித மனம் எப்படி அமைதல் வேண்டும்? மனித நடப்பு எப்படி இருத்தல் வேண்டும்? ஆனந்தம், அன்பு, சிரிப்பு, சினம், சாந்தி, சண்டை ஆகிய அனைத்துக்குமான ஒழுங் கும் தீர்வுகளும்! அறிவின் பசி தீர்த்து – தெளிவின் திசை காட்டும் இறைவேதம்! எளிய தமிழில்! இனிய நடையில்!!
விளக்கவுரை
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
-
திருக்குர்ஆன் விளக்கவுரை – யூனுஸ், ஹுத்
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
-
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தவ்பா
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 1-2 (அல்ஃபாத்திஹா – அல்பகறா)
குர்ஆனின் தொடக்கத்திலேயே அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை இடம்பெறச் செய்திருப்பதன் நோக்கம் இதுதான்: நீங்கள் உண்மையிலேயே இந்த வேதத்தின் மூலம் பயன்பெற விரும்புகிறீர்கள் எனில், முதலில் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள் என்று எடுத்துச் சொல்வதுதான் அந்த நோக்கம்.
இந்த (அல் பகறா) அத்தியாயத்தைப் புரிந்து கொள்வதற்கு, அருளப்பட்ட சூழ்நிலையையும் வரலாற்றுப் பின்னணியையும் தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST