|
هَلۡ اَتٰٮكَ حَدِيۡثُ الۡغَاشِيَةِؕ ﴿88:1﴾
وُجُوۡهٌ يَّوۡمَـئِذٍ خَاشِعَةٌ ۙ ﴿88:2﴾
عَامِلَةٌ نَّاصِبَةٌ ۙ ﴿88:3﴾
تَصۡلٰى نَارًا حَامِيَةً ۙ ﴿88:4﴾
تُسۡقٰى مِنۡ عَيۡنٍ اٰنِيَةٍؕ ﴿88:5﴾
لَـيۡسَ لَهُمۡ طَعَامٌ اِلَّا مِنۡ ضَرِيۡعٍۙ ﴿88:6﴾
لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِىۡ مِنۡ جُوۡعٍؕ ﴿88:7﴾
وُجُوۡهٌ يَّوۡمَـئِذٍ نَّاعِمَةٌ ۙ ﴿88:8﴾
لِّسَعۡيِهَا رَاضِيَةٌ ۙ ﴿88:9﴾
فِىۡ جَنَّةٍ عَالِيَةٍۙ ﴿88:10﴾
لَّا تَسۡمَعُ فِيۡهَا لَاغِيَةً ؕ ﴿88:11﴾
فِيۡهَا عَيۡنٌ جَارِيَةٌ ۘ ﴿88:12﴾
فِيۡهَا سُرُرٌ مَّرۡفُوۡعَةٌ ۙ ﴿88:13﴾
وَّاَكۡوَابٌ مَّوۡضُوۡعَةٌ ۙ ﴿88:14﴾
وَّنَمَارِقُ مَصۡفُوۡفَةٌ ۙ ﴿88:15﴾
وَّزَرَابِىُّ مَبۡثُوۡثَةٌ ؕ ﴿88:16﴾
اَفَلَا يَنۡظُرُوۡنَ اِلَى الۡاِ بِلِ كَيۡفَ خُلِقَتۡ
﴿88:17﴾
وَاِلَى السَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ ﴿88:18﴾
وَاِلَى الۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ ﴿88:19﴾
وَاِلَى الۡاَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ ﴿88:20﴾
فَذَكِّرۡ ؕ اِنَّمَاۤ اَنۡتَ مُذَكِّرٌ ؕ ﴿88:21﴾
لَـسۡتَ عَلَيۡهِمۡ بِمُصَۜيۡطِرٍۙ ﴿88:22﴾
اِلَّا مَنۡ تَوَلّٰى وَكَفَرَۙ ﴿88:23﴾
فَيُعَذِّبُهُ اللّٰهُ الۡعَذَابَ الۡاَكۡبَرَؕ ﴿88:24﴾
اِنَّ اِلَيۡنَاۤ اِيَابَهُمۡۙ ﴿88:25﴾
ثُمَّ اِنَّ عَلَيۡنَا حِسَابَهُمْ ﴿88:26﴾
88:1 சூழ்ந்து கொள்ளக் கூடிய துன்பம் (அதாவது மறுமை) பற்றிய செய்தி உமக்கு வந்ததா?
88:2 அந்நாளில் சில முகங்கள் பீதியுற்றிருக்கும்;
88:3 கடுமையான சிரமத்தை மேற் கொண்டிருக்கும்; களைத்துப் போயிருக்கும்;
88:4 கனன்றெழும் நெருப்பில் கருகிக் கொண்டிருக்கும்;
88:5 கொதிக்கும் ஊற்றுநீர் அவர்களுக்கு அருந்தக் கொடுக்கப்படும்;
88:6 முட்கள் நிறைந்த காய்ந்துபோன புற்பூண்டைத் தவிர வேறெந்த உணவும் அவர்களுக்குக் கிடைக்காது.
88:7 அது ஊட்டமும் தராது; பசியையும் போக்காது!
88:8 வேறு சில முகங்கள் அந்நாளில் பொலிவுற்றிருக்கும்;
88:9 தன் செயல்கள் குறித்து திருப்தியடைந்திருக்கும்;
88:10 உன்னதமான சுவனத்தில் இருக்கும்;
88:11 அவை அங்கு வீணானவற்றைச் செவியுற மாட்டா.
88:12 ஓடிக்கொண்டிருக்கும் நீரூற்று அங்கு உண்டு;
88:13 உயர்ந்த கட்டில்கள் அங்கு இருக்கும்;
88:14 மேலும், கிண்ணங்களும் வைக்கப்பட்டிருக்கும்.
88:15 தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்;
88:16 எழிலான விரிப்புகளும் விரிக்கப்பட்டிருக்கும்.
88:17 (இம்மக்கள் நம்பிக்கை கொள்வதில்லை எனில்,) ஒட்டகங்களை இவர்கள் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று!
88:18 மேலும், வானத்தைப் பார்க்க வில்லையா, அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று!
88:19 மேலும், மலைகளைப் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு ஊன்றப்பட்டுள்ளன என்று!
88:20 மேலும், பூமியைப் பார்க்கவில்லையா, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று!
88:21 சரி (நபியே!) நீர் அறிவுரை புரிந்தவண்ணம் இருப்பீராக! திண்ணமாக, நீர் அறிவுரை புரிபவர் மட்டுமே ஆவீர்!
88:22 அவர்களை நீர் நிர்ப்பந்திப்பவர் அல்லர்.
88:23 ஆனால், எவன் புறக்கணித்தானோ மேலும், நிராகரித்தானோ
88:24 அவனுக்கு அல்லாஹ் கடினமான தண்டனை அளிப்பான்.
88:25 திண்ணமாக, இவர்கள் நம் பக்கமே திரும்பி வர வேண்டியுள்ளது.
88:26 பிறகு, இவர்களிடம் கணக்கு வாங்கும் பொறுப்பு நம்மீதே உள்ளது.
| |