|
وَالسَّمَآءِ ذَاتِ الۡبُرُوۡجِۙ ﴿85:1﴾
وَالۡيَوۡمِ الۡمَوۡعُوۡدِۙ ﴿85:2﴾
وَشَاهِدٍ وَّمَشۡهُوۡدٍؕ ﴿85:3﴾
قُتِلَ اَصۡحٰبُ الۡاُخۡدُوۡدِۙ ﴿85:4﴾
النَّارِ ذَاتِ الۡوَقُوۡدِۙ ﴿85:5﴾
اِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُوۡدٌ ۙ ﴿85:6﴾
وَّهُمۡ عَلٰى مَا يَفۡعَلُوۡنَ بِالۡمُؤۡمِنِيۡنَ شُهُوۡدٌ ؕ
﴿85:7﴾
وَمَا نَقَمُوۡا مِنۡهُمۡ اِلَّاۤ اَنۡ يُّؤۡمِنُوۡا بِاللّٰهِ الۡعَزِيۡزِ الۡحَمِيۡدِۙ
﴿85:8﴾
الَّذِىۡ لَهٗ مُلۡكُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِؕ وَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىۡءٍ شَهِيۡدٌ ؕ
﴿85:9﴾
اِنَّ الَّذِيۡنَ فَتَـنُوا الۡمُؤۡمِنِيۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ ثُمَّ لَمۡ يَتُوۡبُوۡا فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ الۡحَرِيۡقِؕ
﴿85:10﴾
اِنَّ الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمۡ جَنّٰتٌ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ ؕ ذٰلِكَ الۡفَوۡزُ الۡكَبِيۡرُؕ
﴿85:11﴾
اِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيۡدٌ ؕ ﴿85:12﴾
اِنَّهٗ هُوَ يُبۡدِئُ وَيُعِيۡدُ ۚ ﴿85:13﴾
وَهُوَ الۡغَفُوۡرُ الۡوَدُوۡدُۙ ﴿85:14﴾
ذُو الۡعَرۡشِ الۡمَجِيۡدُ ۙ ﴿85:15﴾
فَعَّالٌ لِّمَا يُرِيۡدُ ؕ ﴿85:16﴾
هَلۡ اَتٰٮكَ حَدِيۡثُ الۡجُـنُوۡدِۙ ﴿85:17﴾
فِرۡعَوۡنَ وَثَمُوۡدَؕ ﴿85:18﴾
بَلِ الَّذِيۡنَ كَفَرُوۡا فِىۡ تَكۡذِيۡبٍۙ ﴿85:19﴾
وَّاللّٰهُ مِنۡ وَّرَآئِهِمۡ مُّحِيۡطٌۚ ﴿85:20﴾
بَلۡ هُوَ قُرۡاٰنٌ مَّجِيۡدٌ ۙ ﴿85:21﴾
فِىۡ لَوۡحٍ مَّحۡفُوۡظٍ ﴿85:22﴾
85:1 உறுதியான கோட்டைகளைக் கொண்ட வானத்தின் மீது சத்தியமாக!
85:2 வாக்களிக்கப்பட்ட அந்த நாளின் மீது சத்தியமாக!
85:3 மேலும், பார்க்கின்றவர் மீதும், பார்க்கப்படும் பொருளின் மீதும் சத்தியமாக!
85:4 தீக்குண்டத்தார் அழிக்கப்பட்டார்கள்!
85:5 (அது எத்தகைய தீக்குண்டமெனில்) அதில் நன்கு கொழுந்து விட்டெரியும் எரிபொருள் இருந்தது.
85:6 அவர்கள் அதன் ஓரத்தில் அமர்ந்திருந்து
85:7 இறைநம்பிக்கையாளர்களுக்குத் தாம் செய்து கொண்டிருந்த செயல்களைப் பார்த்த வண்ணம் இருந்தார்கள்.
85:8 அந்த இறைநம்பிக்கையாளர்களிடம் இவர்கள் பகைமை பாராட்டியதற்குக் காரணம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை: யாவற்றையும் மிகைத்தவனும் தனக்குத்தானே புகழுக்குரியவனுமான அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்என்பதுதான்!
85:9 வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரத்திற்கு உரிமையாளனும் அந்த இறைவனே. மேலும், அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
85:10 இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மீது எவர்கள் கொடுமைகள் புரிந்தார்களோ, பிறகு, அதற்காக மன்னிப்புக் கோரி மீளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயம் நரகவேதனை இருக்கிறது. மேலும், சுட்டெரிக்கும் தண்டனையும் உண்டு,
85:11 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இதுவே பெரும் வெற்றியாகும்.
85:12 உண்மையில், உம் இறைவனின் பிடி மிகக் கடுமையானது.
85:13 திண்ணமாக, அவனே முதன் முதலாகப் படைக்கின்றான். அவனே மீண்டும் படைப்பான்.
85:14 மேலும், அவன் அதிகம் மன்னித்தருள்பவனாகவும், அன்பு செலுத்துபவனாகவும் இருக்கின்றான்.
85:15 அர்ஷின் உரிமையாளனாகவும், மேன்மை மிக்கவனாகவும்,
85:16 தான் நாடுகின்றவற்றை செயல்படுத்துபவனாகவும் இருக்கின்றான்.
85:17 படைகளைப் பற்றிய செய்தி உமக்கு எட்டியதா?
85:18 ஃபிர்அவ்ன் மற்றும் ஸமூத் சமுதாயத்தினரின் (படைகளைப் பற்றிய) செய்தி
85:19 ஆனால், நிராகரிப்பாளர்கள் பொய்யெனத் தூற்றுவதில் முனைந்துள்ளார்கள்.
85:20 ஆயினும், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.
85:21 (அவர்கள் பொய்யெனத் தூற்றுவதால் இந்தக் குர்ஆனுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்பட்டுவிடாது) மாறாக, இந்தக் குர்ஆன் அதிக மகத்துவம் மிக்கது;
85:22 பாதுகாக்கப்பட்ட பலகையில் (பதிக்கப்பட்டு) உள்ளது.
| |