|
وَيۡلٌ لِّلۡمُطَفِّفِيۡنَۙ ﴿83:1﴾
الَّذِيۡنَ اِذَا اكۡتَالُوۡا عَلَى النَّاسِ يَسۡتَوۡفُوۡنَۖ
﴿83:2﴾
وَاِذَا كَالُوۡهُمۡ اَوْ وَّزَنُوۡهُمۡ يُخۡسِرُوۡنَؕ
﴿83:3﴾
اَلَا يَظُنُّ اُولٰٓـئِكَ اَنَّهُمۡ مَّبۡعُوۡثُوۡنَۙ
﴿83:4﴾
لِيَوۡمٍ عَظِيۡمٍۙ ﴿83:5﴾
يَّوۡمَ يَقُوۡمُ النَّاسُ لِرَبِّ الۡعٰلَمِيۡنَؕ ﴿83:6﴾
كَلَّاۤ اِنَّ كِتٰبَ الۡفُجَّارِ لَفِىۡ سِجِّيۡنٍؕ
﴿83:7﴾
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا سِجِّيۡنٌؕ ﴿83:8﴾
كِتٰبٌ مَّرۡقُوۡمٌؕ ﴿83:9﴾
وَيۡلٌ يَّوۡمَـئِذٍ لِّلۡمُكَذِّبِيۡنَۙ ﴿83:10﴾
الَّذِيۡنَ يُكَذِّبُوۡنَ بِيَوۡمِ الدِّيۡنِؕ ﴿83:11﴾
وَمَا يُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعۡتَدٍ اَثِيۡمٍۙ
﴿83:12﴾
اِذَا تُتۡلٰى عَلَيۡهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيۡرُ الۡاَوَّلِيۡنَؕ
﴿83:13﴾
كَلَّا بَلۡ رَانَ عَلٰى قُلُوۡبِهِمۡ مَّا كَانُوۡا يَكۡسِبُوۡنَ
﴿83:14﴾
كَلَّاۤ اِنَّهُمۡ عَنۡ رَّبِّهِمۡ يَوۡمَـئِذٍ لَّمَحۡجُوۡبُوۡنَؕ
﴿83:15﴾
ثُمَّ اِنَّهُمۡ لَصَالُوا الۡجَحِيۡمِؕ ﴿83:16﴾
ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِىۡ كُنۡتُمۡ بِهٖ تُكَذِّبُوۡنَؕ
﴿83:17﴾
كَلَّاۤ اِنَّ كِتٰبَ الۡاَبۡرَارِ لَفِىۡ عِلِّيِّيۡنَؕ
﴿83:18﴾
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا عِلِّيُّوۡنَؕ ﴿83:19﴾
كِتٰبٌ مَّرۡقُوۡمٌۙ ﴿83:20﴾
يَّشۡهَدُهُ الۡمُقَرَّبُوۡنَؕ ﴿83:21﴾
اِنَّ الۡاَبۡرَارَ لَفِىۡ نَعِيۡمٍۙ ﴿83:22﴾
عَلَى الۡاَرَآئِكِ يَنۡظُرُوۡنَۙ ﴿83:23﴾
تَعۡرِفُ فِىۡ وُجُوۡهِهِمۡ نَضۡرَةَ النَّعِيۡمِۚ
﴿83:24﴾
يُسۡقَوۡنَ مِنۡ رَّحِيۡقٍ مَّخۡتُوۡمٍۙ ﴿83:25﴾
خِتٰمُهٗ مِسۡكٌ ؕ وَفِىۡ ذٰلِكَ فَلۡيَتَنَافَسِ الۡمُتَنـَافِسُوۡنَؕ
﴿83:26﴾
وَ مِزَاجُهٗ مِنۡ تَسۡنِيۡمٍۙ ﴿83:27﴾
عَيۡنًا يَّشۡرَبُ بِهَا الۡمُقَرَّبُوۡنَؕ ﴿83:28﴾
اِنَّ الَّذِيۡنَ اَجۡرَمُوۡا كَانُوۡا مِنَ الَّذِيۡنَ اٰمَنُوۡا يَضۡحَكُوۡنَ ۖ
﴿83:29﴾
وَاِذَا مَرُّوۡا بِهِمۡ يَتَغَامَزُوۡنَ ۖ ﴿83:30﴾
وَاِذَا انۡقَلَبُوۡۤا اِلٰٓى اَهۡلِهِمُ انْقَلَبُوۡا فَكِهِيۡنَ ۖ
﴿83:31﴾
وَاِذَا رَاَوۡهُمۡ قَالُوۡۤا اِنَّ هٰٓؤُلَاۤءِ لَـضَآلُّوۡنَۙ
﴿83:32﴾
وَمَاۤ اُرۡسِلُوۡا عَلَيۡهِمۡ حٰفِظِيۡنَۙ ﴿83:33﴾
فَالۡيَوۡمَ الَّذِيۡنَ اٰمَنُوۡا مِنَ الۡكُفَّارِ يَضۡحَكُوۡنَۙ
﴿83:34﴾
عَلَى الۡاَرَآئِكِۙ يَنۡظُرُوۡنَؕ ﴿83:35﴾
هَلۡ ثُوِّبَ الۡكُفَّارُ مَا كَانُوۡا يَفۡعَلُوۡنَ
﴿83:36﴾
83:1 அளவில் மோசடி செய்பவருக்குக் கேடுதான்!
83:2 அவர்கள் எத்தகையோர் என்றால், மக்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்குகின்றார்கள்.
83:3 அவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்துக் கொடுக்கின்றார்கள்.
83:4 திண்ணமாக, அவர்கள் ஒரு மாபெரும் நாளில் எழுப்பிக் கொண்டுவரப்படவிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லையா?
83:5 ஒரு மாபெரும் நாளில்,
83:6 அந்நாளில், அனைத்துலகின் அதிபதியின் முன்னால் மாந்தர்கள் அனைவரும் நின்றுகொண்டிருப்பார்கள்.
83:7 ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, தீயவர்களின் வினைப்பட்டியல் சிறைப்பதிவேட்டில் உள்ளது.
83:8 சிறைப்பதிவேடு என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
83:9 அது எழுதப்பட்ட ஒரு புத்தகமாகும்.
83:10 அந்நாளில், பொய்யெனத் தூற்றுபவர்களுக்குக் கேடுதான்!
83:11 அவர்கள் எத்தகையவர்கள் எனில், கூலி கொடுக்கப்படும் நாளினை பொய் யென வாதிடுகின்றார்கள்.
83:12 அதை யாரும் பொய் யெனக் கூறுவதில்லை, வரம்பு மீறக்கூடிய தீய செயல்கள் செய்யக்கூடிய ஒவ்வொருவனையும் தவிர!
83:13 நம்முடைய வசனங்கள் அவனிடம் ஓதிக் காண்பிக்கப்பட்டால், “இவை பண்டைக் காலத்துக் கட்டுக்கதைகள்” என்று சொல்கின்றான்.
83:14 ஒருபோதும் அவ்வாறில்லை. மாறாக, உண்மை யாதெனில், அவர்களுடைய தீயசெயல்களின் கறை அவர்களின் உள்ளங்களில் படிந்து விட்டிருக்கின்றது.
83:15 ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, அவர்கள் அந்நாளில் தம் இறைவனைக் காணும் பேற்றினை விட்டு தடுத்து வைக்கப்படுவார்கள்.
83:16 பின்னர், அவர்கள் உறுதியாக நரகில் வீழ்வார்கள்.
83:17 பின்னர், அவர்களிடம் “நீங்கள் பொய்யெனத் தூற்றிக் கொண்டிருந்தது இதுதான்” என்று கூறப்படும்.
83:18 ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, நல்லோரின் வினைப்பட்டியல் மேன்மக்களின் பதிவேட்டில் உள்ளது.
83:19 அந்த மேன்மக்களின் பதிவேடு என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
83:20 அது எழுதப்பட்ட ஒரு புத்தகம்;
83:21 (இறைவனிடம்) நெருக்கமான வானவர்கள் அதனைப் பாதுகாக்கின்றார்கள்.
83:22 திண்ணமாக, நல்லவர்கள் பேரின்பத்தில் இருப்பார்கள்.
83:23 உயர்தரமான சாய்வு இருக்கைகளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
83:24 அவர்களின் முகங்களில் சுகவாழ்வின் பொலிவை நீர் கண்டறிவீர்.
83:25 முத்திரையிடப்பட்ட மிகச்சிறந்த மதுபானம் அவர்களுக்குப் புகட்டப்படும்.
83:26 அதன் மீது கஸ்தூரி முத்திரை பதிந்திருக்கும். போட்டியிட்டு முந்திக்கொள்ள முயல்பவர்கள், இதனை அடைந்து கொள்வதில் முந்திக்கொள்ள முயலட்டும்!
83:27 மேலும், அந்த பானத்தில் ‘தஸ்னீம்’ கலந்திருக்கும்.
83:28 அது ஒரு நீரூற்று. (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் அதன் நீருடன் மது அருந்துவார்கள்.
83:29 திண்ணமாக, குற்றம் புரிந்தவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களை (உலகில்) ஏளனம் செய்து கொண்டிருந்தார்கள்.
83:30 மேலும், அவர்களை இவர்கள் கடந்து செல்லும்போது கண்களால் சாடை காட்டிக் கொண்டிருந்தார்கள்.
83:31 மேலும், தம் குடும்பத்தாரிடம் திரும்பும்போது மகிழ்ச்சி ஆரவாரத்துடன் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்.
83:32 மேலும், அவர்களைப் பார்க்கும்போது, நிச்சயமாக இவர்கள் வழிகெட்டவர்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
83:33 ஆனால், அவர்களோ இறைநம்பிக்கையாளர்களை கண்காணிக்கக் கூடியவர்களாய் அனுப்பப்படவில்லை.
83:34 இன்று இறைநம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிக்கின்றார்கள்.
83:35 சாய்வு நாற்காலிகளில் சாய்ந்தவாறு (அவர்களின் நிலைகளைப்) பார்க்கின்றார்கள்.
83:36 கிடைத்துவிட்டதல்லவா, நிராகரிப்பாளர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்கான நற்கூலி!
| |