|
اِذَا السَّمَآءُ انْفَطَرَتۡۙ ﴿82:1﴾
وَاِذَا الۡكَوَاكِبُ انْتَثَرَتۡۙ ﴿82:2﴾
وَاِذَا الۡبِحَارُ فُجِّرَتۡۙ ﴿82:3﴾
وَاِذَا الۡقُبُوۡرُ بُعۡثِرَتۡۙ ﴿82:4﴾
عَلِمَتۡ نَفۡسٌ مَّا قَدَّمَتۡ وَاَخَّرَتۡؕ ﴿82:5﴾
يٰۤاَيُّهَا الۡاِنۡسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الۡكَرِيۡمِۙ
﴿82:6﴾
الَّذِىۡ خَلَقَكَ فَسَوّٰٮكَ فَعَدَلَـكَۙ ﴿82:7﴾
فِىۡۤ اَىِّ صُوۡرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَؕ ﴿82:8﴾
كَلَّا بَلۡ تُكَذِّبُوۡنَ بِالدِّيۡنِۙ ﴿82:9﴾
وَاِنَّ عَلَيۡكُمۡ لَحٰـفِظِيۡنَۙ ﴿82:10﴾
كِرَامًا كَاتِبِيۡنَۙ ﴿82:11﴾
يَعۡلَمُوۡنَ مَا تَفۡعَلُوۡنَ ﴿82:12﴾
اِنَّ الۡاَبۡرَارَ لَفِىۡ نَعِيۡمٍۚ ﴿82:13﴾
وَاِنَّ الۡفُجَّارَ لَفِىۡ جَحِيۡمٍ ۚۖ ﴿82:14﴾
يَّصۡلَوۡنَهَا يَوۡمَ الدِّيۡنِ ﴿82:15﴾
وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِيۡنَؕ ﴿82:16﴾
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا يَوۡمُ الدِّيۡنِۙ ﴿82:17﴾
ثُمَّ مَاۤ اَدۡرٰٮكَ مَا يَوۡمُ الدِّيۡنِؕ ﴿82:18﴾
يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٌ لِّنَفۡسٍ شَيۡـئًا ؕ وَالۡاَمۡرُ يَوۡمَـئِذٍ لِّلَّهِ
﴿82:19﴾
82:1 வானம் வெடித்து விடும்போது
82:2 மேலும், தாரகைகள் உதிர்ந்துவிடும்போது
82:3 மேலும், கடல்கள் பிளக்கப்படும்போது
82:4 மேலும், அடக்கத்தலங்கள் திறந்துவிடப்படும்போது
82:5 ஒவ்வொரு மனிதனும் தான் முன்பும் பின்பும் செய்த செயல்கள் அனைத்தையும் அப்போது நன்கு அறிந்துகொள்வான்.
82:6 மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது?
82:7 அவனே உன்னைப் படைத்தான்; உன்னைக் குறைகள் எதுவுமின்றிச் செம்மைப்படுத்தினான்; உனக்குப் பொருத்தமான உறுப்புகளை அளித்தான்.
82:8 மேலும், தான் நாடிய உருவத்தில் உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான்.
82:9 ஒருபோதும் அவ்வாறில்லை! மாறாக, (உண்மை யாதெனில்) கூலி கொடுக்கப்படுவதை நீங்கள் பொய்யெனத் தூற்றுகின்றீர்கள்.
82:10 நிச்சயமாக உங்கள் மீது கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
82:11 அவர்களோ கண்ணியமிக்க எழுத்தர்களாவர்;
82:12 உங்களுடைய ஒவ்வொரு செயலையும் அறிகின்றார்கள்.
82:13 திண்ணமாக, நல்லவர்கள் இன்பத்தில் திளைத்திருப் பார்கள்.
82:14 மேலும், சந்தேகமின்றி, தீயவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள்.
82:15 கூலி கொடுக்கப்படும் நாளில், அதில் அவர்கள் நுழைவார்கள்.
82:16 மேலும், அதிலிருந்து அவர்கள் காணாமல் போய்விட முடியாது.
82:17 மேலும், கூலி கொடுக்கப்படும் நாள் என்னவென்று நீர் அறிவீரா?
82:18 ஆம்! கூலி கொடுக்கப்படும் அந்நாள் எத்தகையது என்று உமக்குத் தெரியுமா, என்ன?
82:19 அந்நாளில் எந்த மனிதனுக்காகவும் எதையும் செய்திட எவருக்கும் சக்தியிராது. தீர்ப்பு வழங்குவது, அந்நாளில் முற்றிலும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கும்.
| |