|
اِذَا الشَّمۡسُ كُوِّرَتۡۙ ﴿81:1﴾
وَاِذَا النُّجُوۡمُ انْكَدَرَتۡۙ ﴿81:2﴾
وَاِذَا الۡجِبَالُ سُيِّرَتۡۙ ﴿81:3﴾
وَاِذَا الۡعِشَارُ عُطِّلَتۡۙ ﴿81:4﴾
وَاِذَا الۡوُحُوۡشُ حُشِرَتۡۙ ﴿81:5﴾
وَاِذَا الۡبِحَارُ سُجِّرَتۡۙ ﴿81:6﴾
وَاِذَا النُّفُوۡسُ زُوِّجَتۡۙ ﴿81:7﴾
وَاِذَا الۡمَوۡءٗدَةُ سُـئِلَتۡۙ ﴿81:8﴾
بِاَىِّ ذَنۡۢبٍ قُتِلَتۡۚ ﴿81:9﴾
وَاِذَا الصُّحُفُ نُشِرَتۡۙ ﴿81:10﴾
وَاِذَا السَّمَآءُ كُشِطَتۡۙ ﴿81:11﴾
وَاِذَا الۡجَحِيۡمُ سُعِّرَتۡۙ ﴿81:12﴾
وَاِذَا الۡجَـنَّةُ اُزۡلِفَتۡۙ ﴿81:13﴾
عَلِمَتۡ نَفۡسٌ مَّاۤ اَحۡضَرَتۡؕ ﴿81:14﴾
فَلَاۤ اُقۡسِمُ بِالۡخُنَّسِۙ ﴿81:15﴾
الۡجَوَارِ الۡكُنَّسِۙ ﴿81:16﴾
وَالَّيۡلِ اِذَا عَسۡعَسَۙ ﴿81:17﴾
وَالصُّبۡحِ اِذَا تَنَفَّسَۙ ﴿81:18﴾
اِنَّهٗ لَقَوۡلُ رَسُوۡلٍ كَرِيۡمٍۙ ﴿81:19﴾
ذِىۡ قُوَّةٍ عِنۡدَ ذِى الۡعَرۡشِ مَكِيۡنٍۙ ﴿81:20﴾
مُّطَاعٍ ثَمَّ اَمِيۡنٍؕ ﴿81:21﴾
وَ مَا صَاحِبُكُمۡ بِمَجۡنُوۡنٍۚ ﴿81:22﴾
وَلَقَدۡ رَاٰهُ بِالۡاُفُقِ الۡمُبِيۡنِۚ ﴿81:23﴾
وَمَا هُوَ عَلَى الۡغَيۡبِ بِضَنِيۡنٍۚ ﴿81:24﴾
وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطٰنٍ رَّجِيۡمٍۙ ﴿81:25﴾
فَاَيۡنَ تَذۡهَبُوۡنَؕ ﴿81:26﴾
اِنۡ هُوَ اِلَّا ذِكۡرٌ لِّلۡعٰلَمِيۡنَۙ ﴿81:27﴾
لِمَنۡ شَآءَ مِنۡكُمۡ اَنۡ يَّسۡتَقِيۡمَؕ ﴿81:28﴾
وَمَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ يَّشَآءَ اللّٰهُ رَبُّ الۡعٰلَمِيۡنَ
﴿81:29﴾
81:1 சூரியன் சுருட்டப்பட்டுவிடும்போது,
81:2 மேலும், தாரகைகள் உதிர்ந்து விடும்போது,
81:3 மேலும், மலைகள் நடத்திச் செல்லப்படும்போது,
81:4 மேலும், பத்து மாத நிறைகர்ப்ப ஒட்டகங்கள் அப்படியே விட்டு விடப்படும்போது,
81:5 மேலும், வன விலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது,
81:6 மேலும், கடல்கள் கொளுத்தப்படும்போது,
81:7 மேலும், உயிர்கள் (உடல்களுடன்) ஒன்றிணைக்கப்படும்போது,
81:8 மேலும், உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம் கேட்கப்படும்போது,
81:9 எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் என்று
81:10 மேலும், வினைச் சுவடிகள் விரிக்கப்படும்போது,
81:11 மேலும், வானத் திரை அகற்றப்படும்போது,
81:12 மேலும், நரகம் எரிக்கப்படும்போது
81:13 மேலும், சுவனம் அருகே கொண்டு வரப்படும்போது,
81:14 அந்நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் எதனைக் கொண்டு வந்துள்ளான் என்பதை அறிந்து கொள்வான்.
81:15 அவ்வாறில்லை! மீண்டும் மீண்டும் திரும்பி வரக்கூடிய தாரகைகள்மீதும்,
81:16 மறையக்கூடிய தாரகைகள் மீதும்,
81:17 விடை பெற்றுச் செல்லும் இரவின் மீதும்,
81:18 புலரும் வைகறையின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
81:19 உண்மையில், இது கண்ணியமிக்க தூதர் ஒருவரின் வாக்காகும்.
81:20 அவர் வலிமையுடையவர்; அர்ஷûக்குரியவனிடம் உயர் மதிப்பு பெற்றவர்.
81:21 அங்கு அவருடைய கட்டளை ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அவர் நம்பிக்கைக்குரியவராயும் இருக்கின்றார்.
81:22 மேலும், (மக்காவாசிகளே!) உங்கள் நண்பர் பைத்தியக்காரர் அல்லர்.
81:23 திண்ணமாக, அவர் அந்தத் தூதரை தெளிவான அடிவானத்தில் கண்டார்.
81:24 மேலும், அவர் மறைவான உண்மைகள் (எனும் இந்த அறிவை மக்களிடம் எடுத்துக்கூறும்) விஷயத்தில் கஞ்சர் அல்லர்.
81:25 மேலும், இது விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானின் சொல்லும் அன்று.
81:26 பின்னர், நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்?
81:27 இதுவோ அனைத்துலக மக்களுக்கும் உரிய ஓர் அறிவுரையாகும்;
81:28 உங்களில், நேர்வழியில் நடந்திட விரும்பும் ஒவ்வொருவருக்கும் உரியது.
81:29 மேலும், நீங்கள் நாடுவதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை, பிரபஞ்சம் அனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ் நாடாத வரையில்!
| |