|
عَمَّ يَتَسَآءَلُوۡنَۚ ﴿78:1﴾
عَنِ النَّبَاِ الۡعَظِيۡمِۙ ﴿78:2﴾
الَّذِىۡ هُمۡ فِيۡهِ مُخۡتَلِفُوۡنَؕ ﴿78:3﴾
كَلَّا سَيَعۡلَمُوۡنَۙ ﴿78:4﴾
ثُمَّ كَلَّا سَيَعۡلَمُوۡنَ ﴿78:5﴾
اَلَمۡ نَجۡعَلِ الۡاَرۡضَ مِهٰدًا ۙ ﴿78:6﴾
وَّالۡجِبَالَ اَوۡتَادًا ۙ ﴿78:7﴾
وَّخَلَقۡنٰكُمۡ اَزۡوَاجًا ۙ ﴿78:8﴾
وَّجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتًا ۙ ﴿78:9﴾
وَّجَعَلۡنَا الَّيۡلَ لِبَاسًا ۙ ﴿78:10﴾
وَّجَعَلۡنَا النَّهَارَ مَعَاشًا ﴿78:11﴾
وَّبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعًا شِدَادًا ۙ ﴿78:12﴾
وَّ جَعَلۡنَا سِرَاجًا وَّهَّاجًا ۙ ﴿78:13﴾
وَّاَنۡزَلۡنَا مِنَ الۡمُعۡصِرٰتِ مَآءً ثَجَّاجًا ۙ
﴿78:14﴾
لِّـنُخۡرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا ۙ ﴿78:15﴾
وَّجَنّٰتٍ اَلۡفَافًا ؕ ﴿78:16﴾
اِنَّ يَوۡمَ الۡفَصۡلِ كَانَ مِيۡقَاتًا ۙ ﴿78:17﴾
يَّوۡمَ يُنۡفَخُ فِى الصُّوۡرِ فَتَاۡتُوۡنَ اَفۡوَاجًا ۙ
﴿78:18﴾
وَّفُتِحَتِ السَّمَآءُ فَكَانَتۡ اَبۡوَابًا ۙ ﴿78:19﴾
وَّ سُيِّرَتِ الۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا ؕ ﴿78:20﴾
اِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادًا ۙ ﴿78:21﴾
لِّلطّٰغِيۡنَ مَاٰبًا ۙ ﴿78:22﴾
لّٰبِثِيۡنَ فِيۡهَاۤ اَحۡقَابًا ۚ ﴿78:23﴾
لَا يَذُوۡقُوۡنَ فِيۡهَا بَرۡدًا وَّلَا شَرَابًا ۙ
﴿78:24﴾
اِلَّا حَمِيۡمًا وَّغَسَّاقًا ۙ ﴿78:25﴾
جَزَآءً وِّفَاقًا ؕ ﴿78:26﴾
اِنَّهُمۡ كَانُوۡا لَا يَرۡجُوۡنَ حِسَابًا ۙ ﴿78:27﴾
وَّكَذَّبُوۡا بِاٰيٰتِنَا كِذَّابًا ؕ ﴿78:28﴾
وَكُلَّ شَىۡءٍ اَحۡصَيۡنٰهُ كِتٰبًا ۙ ﴿78:29﴾
فَذُوۡقُوۡا فَلَنۡ نَّزِيۡدَكُمۡ اِلَّا عَذَابًا
﴿78:30﴾
78:1 இவர்கள் எதனைக் குறித்து வினவிக் கொள்கின்றார்கள்?
78:2 அந்த மாபெரும் செய்தியைக் குறித்தா?
78:3 அதைப்பற்றி இவர்கள் பல்வேறு முரண்பட்ட கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
78:4 ஒருபோதுமில்லை! வெகு விரைவில் அவர்களுக்குத் தெரிந்து விடும்.
78:5 ஆம்; ஒருபோதுமில்லை! வெகு விரைவில் அவர்களுக்குத் தெரிந்துவிடும்.
78:6 நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா?
78:7 மேலும், மலைகளை முளைகளாக ஊன்றி வைக்கவில்லையா?
78:8 மேலும், உங்களை (ஆண்பெண் எனும்) இணைகளாக நாம் படைக்கவில்லையா?
78:9 மேலும், உங்கள் உறக்கத்தை அமைதியளிக்கக் கூடியதாய் நாம் ஆக்கவில்லையா?
78:10 மேலும், நாம் இரவை மூடிக்கொள்ளக்கூடியதாய் ஆக்கவில்லையா?
78:11 மேலும், நாம் பகலை வாழ்க்கைத் தேவைகளைத் தேடிடும் நேரமாக்கவில்லையா?
78:12 மேலும், உங்களுக்கு மேலே உறுதியான ஏழு வானங்களை நாம் அமைக்கவில்லையா?
78:13 மேலும், அதிக வெப்பமும் ஒளியும் கொண்ட விளக்கையும் நாம் படைக்கவில்லையா?
78:14 மேலும், கார்முகில்களிலிருந்து மழையை நாம் பொழியச் செய்யவில்லையா?
78:15 தானியங்களையும் தாவரங்களையும் மற்றும்
78:16 அடர்ந்த தோட்டங்களையும் உருவாக்குவதற்காக!
78:17 திண்ணமாக, தீர்ப்புநாள் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நேரமாய் இருக்கின்றது;
78:18 (சூர்) எக்காளம் ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக(க் கிளம்பி) வருவீர்கள்.
78:19 மேலும், வானம் திறந்துவிடப்படும்; இறுதியில் அது வாயில்கள் மயமாகி விடும்!
78:20 மேலும், மலைகள் நடத்திச் செல்லப்படும். அப்பொழுது அவை கானலாய்ப் போய்விடும்.
78:21 திண்ணமாக, நரகம் பதுங்கித் தாக்கக்கூடியதாய் இருக்கிறது.
78:22 வரம்பு மீறியவர்களுக்கான இருப்பிடமாக உள்ளது.
78:23 அதில் அவர்கள் பல யுகங்கள் வீழ்ந்து கிடப்பார்கள்.
78:24 அங்கு குளுமையையோ, குடிப்பதற்கேற்ற எந்த ஒரு பொருளின் சுவையையோ அவர்கள் சுவைக்க மாட்டார்கள்.
78:25 கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர!
78:26 (இவை அவர்களின் இழிசெயல்களுக்கு) ஏற்ற கூலிதான்!
78:27 அவர்கள் கேள்விக் கணக்கு கேட்கப்படும் என்பதை நம்பக் கூடியவர்களாய் இருக்கவில்லை.
78:28 மேலும், அவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென முற்றிலும் மறுத்து விட்டிருந்தார்கள்.
78:29 அதே நேரத்தில் நாமோ அவர்களின் ஒவ்வொரு விஷயத்தையும் எண்ணி எண்ணி எழுதி வைத்திருந்தோம்.
78:30 “இதோ, சுவையுங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறெதனையும் நாம் அதிகமாக்கவே மாட்டோம்.”
| |