|
وَالۡمُرۡسَلٰتِ عُرۡفًا ۙ ﴿77:1﴾
فَالۡعٰصِفٰتِ عَصۡفًا ۙ ﴿77:2﴾
وَّالنّٰشِرٰتِ نَشۡرًا ۙ ﴿77:3﴾
فَالۡفٰرِقٰتِ فَرۡقًا ۙ ﴿77:4﴾
فَالۡمُلۡقِيٰتِ ذِكۡرًا ۙ ﴿77:5﴾
عُذۡرًا اَوۡ نُذۡرًا ۙ ﴿77:6﴾
اِنَّمَا تُوۡعَدُوۡنَ لَوَاقِعٌ ؕ ﴿77:7﴾
فَاِذَا النُّجُوۡمُ طُمِسَتۡۙ ﴿77:8﴾
وَ اِذَا السَّمَآءُ فُرِجَتۡۙ ﴿77:9﴾
وَاِذَا الۡجِبَالُ نُسِفَتۡۙ ﴿77:10﴾
وَاِذَا الرُّسُلُ اُقِّتَتۡؕ ﴿77:11﴾
لِاَىِّ يَوۡمٍ اُجِّلَتۡؕ ﴿77:12﴾
لِيَوۡمِ الۡفَصۡلِۚ ﴿77:13﴾
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا يَوۡمُ الۡفَصۡلِؕ ﴿77:14﴾
وَيۡلٌ يَّوۡمَـئِذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ ﴿77:15﴾
اَلَمۡ نُهۡلِكِ الۡاَوَّلِيۡنَؕ ﴿77:16﴾
ثُمَّ نُتۡبِعُهُمُ الۡاٰخِرِيۡنَ ﴿77:17﴾
كَذٰلِكَ نَفۡعَلُ بِالۡمُجۡرِمِيۡنَ ﴿77:18﴾
وَيۡلٌ يَّوۡمَـئِذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ ﴿77:19﴾
اَلَمۡ نَخۡلُقۡكُّمۡ مِّنۡ مَّآءٍ مَّهِيۡنٍۙ ﴿77:20﴾
فَجَعَلۡنٰهُ فِىۡ قَرَارٍ مَّكِيۡنٍۙ ﴿77:21﴾
اِلٰى قَدَرٍ مَّعۡلُوۡمٍۙ ﴿77:22﴾
فَقَدَرۡنَا ۖ فَنِعۡمَ الۡقٰدِرُوۡنَ ﴿77:23﴾
وَيۡلٌ يَّوۡمَـئِذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ ﴿77:24﴾
اَلَمۡ نَجۡعَلِ الۡاَرۡضَ كِفَاتًا ۙ ﴿77:25﴾
اَحۡيَآءً وَّاَمۡوَاتًا ۙ ﴿77:26﴾
وَّجَعَلۡنَا فِيۡهَا رَوَاسِىَ شٰمِخٰتٍ وَّ اَسۡقَيۡنٰكُمۡ مَّآءً فُرَاتًا ؕ
﴿77:27﴾
وَيۡلٌ يَّوۡمَـئِذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ ﴿77:28﴾
اِنْطَلِقُوۡۤا اِلٰى مَا كُنۡتُمۡ بِهٖ تُكَذِّبُوۡنَۚ
﴿77:29﴾
اِنْطَلِقُوۡۤا اِلٰى ظِلٍّ ذِىۡ ثَلٰثِ شُعَبٍۙ ﴿77:30﴾
لَّا ظَلِيۡلٍ وَّلَا يُغۡنِىۡ مِنَ اللَّهَبِؕ ﴿77:31﴾
اِنَّهَا تَرۡمِىۡ بِشَرَرٍ كَالۡقَصۡرِۚ ﴿77:32﴾
كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفۡرٌ ؕ ﴿77:33﴾
وَيۡلٌ يَّوۡمَـئِذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ ﴿77:34﴾
هٰذَا يَوۡمُ لَا يَنۡطِقُوۡنَۙ ﴿77:35﴾
وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَـعۡتَذِرُوۡنَ ﴿77:36﴾
وَيۡلٌ يَّوۡمَـئِذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ ﴿77:37﴾
هٰذَا يَوۡمُ الۡفَصۡلِۚ جَمَعۡنٰكُمۡ وَالۡاَوَّلِيۡنَ
﴿77:38﴾
فَاِنۡ كَانَ لَـكُمۡ كَيۡدٌ فَكِيۡدُوۡنِ ﴿77:39﴾
وَيۡلٌ يَّوۡمَـئِذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ ﴿77:40﴾
77:1 தொடர்ந்து அனுப்பப்படுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக;
77:2 பிறகு, புயல் வேகத்தில் வீசுகின்றவற்றின் மீது சத்தியமாக;
77:3 (மேகங்களை) பரப்புகின்றவற்றின் மீது சத்தியமாக;
77:4 பிறகு, அவற்றைத் துண்டு துண்டாகப் பிளக்கின்றவற்றின் மீது சத்தியமாக;
77:5 பிறகு, (இதயங்களில் இறைவனின்) நினைவை உண்டாக்குபவைமீது சத்தியமாக;
77:6 மன்னிப்புப் பெறுவதற்காக அல்லது அச்சமூட்டி எச்சரிப்பதற்காக!
77:7 எதைப் பற்றி உங்களிடம் வாக்களிக்கப்படுகின்றதோ, அது திண்ணமாக நிகழக்கூடியதே!
77:8 பிறகு, நட்சத்திரங்கள் ஒளியிழந்து போகும்பொழுது,
77:9 வானம் பிளக்கப்படும்பொழுது,
77:10 மலைகள் தூள்தூளாக் கப்படும்பொழுது,
77:11 இறைத்தூதர்கள் ஆஜராகும் நேரம் வரும் பொழுது (அது நிகழ்ந்துவிடும்).
77:12 எந்த நாளுக்காக இந்தக் காரியம் பிற்படுத்தப்பட்டுள்ளது?
77:13 தீர்ப்பு நாளுக்காகத் தான்!
77:14 அந்தத் தீர்ப்புநாள் என்னவென்று உமக்குத் தெரியுமா?
77:15 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
77:16 நாம் முன் சென்றோரை அழிக்கவில்லையா, என்ன?
77:17 பின்னர் அவர்களின் அடிச்சுவட்டில்தானே பின்வருவோரையும் நடக்கச் செய்வோம்!
77:18 குற்றவாளிகளிடம் நாம் இப்படித்தான் நடந்துகொள்கின்றோம்.
77:19 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
77:20 என்ன, நாம் உங்களை அற்பமானதொரு நீரிலிருந்து படைக்கவில்லையா?
77:21 மேலும், அதனை பாதுகாப்பான ஓர் இடத்தில் வைக்கவில்லையா
77:22 ஒரு குறிப்பிட்ட காலம்வரை.
77:23 (இதோ பாருங்கள்!) நாம் இதற்கான ஆற்றலுடையவர்கள்தாம். ஆம்! நாம் மிகச் சிறந்த ஆற்றல் கொண்டவர்கள்தாம்!
77:24 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
77:25 நாம் பூமியை ஒன்று திரட்டி வைக்கக்கூடியதாக ஆக்கவில்லையா?
77:26 உயிருள்ளவர்களையும் மரித்தவர்களையும்.
77:27 மேலும், மிக உயர்ந்த மலைகளை அதில் நாம் நாட்டவில்லையா? உங்களுக்கு சுவையான நீரைப் புகட்டவும் இல்லையா, என்ன?
77:28 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
77:29 இப்போது செல்லுங்கள், நீங்கள் எதனைப் பொய்யென்று கூறிக் கொண்டிருந்தீர்களோ அதன் பக்கம்!
77:30 செல்லுங்கள், மூன்று கிளைகளையுடைய நிழலின் பக்கம்!
77:31 அது குளிரச் செய்யக்கூடியதுமன்று, தீச்சுவாலையிலிருந்து காப்பாற்றக்கூடியதுமன்று.
77:32 அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்.
77:33 அது (குமுறி எழும்போது) மஞ்சள் நிற ஒட்டகங்களைப் போலிருக்கும்.
77:34 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
77:35 இது எத்தகைய நாள் எனில், இதில் அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள்;
77:36 எந்தச் சாக்குப்போக்கும் கூறிட அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது.
77:37 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
77:38 இது தீர்ப்பளிக்கும் நாளாகும். நாம் உங்களையும் உங்களுக்கு முன் சென்றவர்களையும் ஒன்று திரட்டியுள்ளோம்.
77:39 இப்போது உங்களால் ஏதேனும் சூழ்ச்சி செய்ய முடியுமெனில், எனக்கெதிராக சூழ்ச்சி செய்து பாருங்கள்!
77:40 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
| |