|
اِذَا وَقَعَتِ الۡوَاقِعَةُ ۙ ﴿56:1﴾
لَيۡسَ لِـوَقۡعَتِهَا كَاذِبَةٌ ۘ ﴿56:2﴾
خَافِضَةٌ رَّافِعَةٌ ۙ ﴿56:3﴾
اِذَا رُجَّتِ الۡاَرۡضُ رَجًّا ۙ ﴿56:4﴾
وَّبُسَّتِ الۡجِبَالُ بَسًّا ۙ ﴿56:5﴾
فَكَانَتۡ هَبَآءً مُّنۡۢبَـثًّا ۙ ﴿56:6﴾
وَّكُنۡـتُمۡ اَزۡوَاجًا ثَلٰـثَـةً ؕ ﴿56:7﴾
فَاَصۡحٰبُ الۡمَيۡمَنَةِ ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَيۡمَنَةِ ؕ
﴿56:8﴾
وَاَصۡحٰبُ الۡمَشۡـئَـمَةِ ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَشۡـئَـمَةِؕ
﴿56:9﴾
وَالسّٰبِقُوۡنَ السّٰبِقُوۡنَۚ ۙ ﴿56:10﴾
اُولٰٓـئِكَ الۡمُقَرَّبُوۡنَۚ ﴿56:11﴾
فِىۡ جَنّٰتِ النَّعِيۡمِ ﴿56:12﴾
ثُلَّةٌ مِّنَ الۡاَوَّلِيۡنَۙ ﴿56:13﴾
وَقَلِيۡلٌ مِّنَ الۡاٰخِرِيۡنَؕ ﴿56:14﴾
عَلٰى سُرُرٍ مَّوۡضُوۡنَةٍۙ ﴿56:15﴾
مُّتَّكِـئِيۡنَ عَلَيۡهَا مُتَقٰبِلِيۡنَ ﴿56:16﴾
يَطُوۡفُ عَلَيۡهِمۡ وِلۡدَانٌ مُّخَلَّدُوۡنَۙ ﴿56:17﴾
بِاَكۡوَابٍ وَّاَبَارِيۡقَ ۙ وَكَاۡسٍ مِّنۡ مَّعِيۡنٍۙ
﴿56:18﴾
لَّا يُصَدَّعُوۡنَ عَنۡهَا وَلَا يُنۡزِفُوۡنَۙ ﴿56:19﴾
وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُوۡنَۙ ﴿56:20﴾
وَلَحۡمِ طَيۡرٍ مِّمَّا يَشۡتَهُوۡنَؕ ﴿56:21﴾
وَحُوۡرٌ عِيۡنٌۙ ﴿56:22﴾
كَاَمۡثَالِ اللُّـؤۡلُـوٴِالۡمَكۡنُوۡنِۚ ﴿56:23﴾
جَزَآءًۢ بِمَا كَانُوۡا يَعۡمَلُوۡنَ ﴿56:24﴾
لَا يَسۡمَعُوۡنَ فِيۡهَا لَغۡوًا وَّلَا تَاۡثِيۡمًا ۙ
﴿56:25﴾
اِلَّا قِيۡلًا سَلٰمًا سَلٰمًا ﴿56:26﴾
وَاَصۡحٰبُ الۡيَمِيۡنِ ۙ مَاۤ اَصۡحٰبُ الۡيَمِيۡنِؕ
﴿56:27﴾
فِىۡ سِدۡرٍ مَّخۡضُوۡدٍۙ ﴿56:28﴾
وَّطَلۡحٍ مَّنۡضُوۡدٍۙ ﴿56:29﴾
وَّظِلٍّ مَّمۡدُوۡدٍۙ ﴿56:30﴾
وَّ مَآءٍ مَّسۡكُوۡبٍۙ ﴿56:31﴾
وَّفَاكِهَةٍ كَثِيۡرَةٍۙ ﴿56:32﴾
لَّا مَقۡطُوۡعَةٍ وَّلَا مَمۡنُوۡعَةٍۙ ﴿56:33﴾
وَّ فُرُشٍ مَّرۡفُوۡعَةٍؕ ﴿56:34﴾
اِنَّاۤ اَنۡشَاۡنٰهُنَّ اِنۡشَآءًۙ ﴿56:35﴾
فَجَعَلۡنٰهُنَّ اَبۡكَارًاۙ ﴿56:36﴾
عُرُبًا اَتۡرَابًاۙ ﴿56:37﴾
لِّاَصۡحٰبِ الۡيَمِيۡنِؕ ﴿56:38﴾
56:1 நிகழவேண்டிய அந்நிகழ்ச்சி நிகழ்ந்து விடும் போது,
56:2 அது நிகழ்வதைப் பொய்யெனக் கூறுபவர் எவரும் இருக்கமாட்டார்.
56:3 அது தலைகீழாகப் புரட்டக்கூடிய ஆபத்தாயிருக்கும்.
56:4 அந்நேரம் பூமி ஒரே உலுக்காக உலுக்கப்படும்.
56:5 மேலும், மலைகள் பொடிப் பொடியாக்கப்பட்டு ;
56:6 பரத்தப்பட்ட புழுதியாகிவிடும்!
56:7 அப்போது நீங்கள் மூன்று குழுவினராய்ப் பிரிந்துவிடுவீர்கள்.
56:8 வலப்பக்கத்தார்! வலப்பக்கத்தாருடைய (நற்பாக்கிய) நிலைமையை என்னவென்றுரைப்பது!
56:9 மேலும், இடப்பக்கத்தார்! இடப்பக்கத்தாருடைய (துர்ப்பாக்கிய) நிலைமையை என்னவென்றுரைப்பது!
56:10 மேலும், முந்தியவர்கள் முந்தியவர்களே!
56:11 அவர்கள்தாம் நெருக்கமானவர்கள்.
56:12 அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில் இருப்பார்கள்.
56:13 முன்னோரில் நிறையப் பேரும்
56:14 பின்னோரில் ஒரு சிலரும் இருப்பார்கள்.
56:15 தங்க இழைகளால் நெய்யப்பட்ட இருக்கைகளில்
56:16 எதிரெதிரே சாய்ந்திருப்பார்கள்.
56:17 அவர்களின் அவைகளில் நிரந்தரச் சிறுவர்கள்
56:18 மது ஓடுகின்ற ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட கோப்பைகளையும், கெண்டிகளையும், பளிங்குக் கிண்ணங்களையும் ஏந்தியவாறு சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.
56:19 அவற்றை அருந்துவதால் அவர்களுக்குத் தலைச்சுற்றல் ஏற்படாது; அவர்களின் அறிவு பேதலிக்கவும் செய்யாது.
56:20 அவர்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்காக அச்சிறுவர்கள் அவர்களுக்கு விதவிதமான, சுவையான கனிகளைப் பரிமாறுவார்கள்;
56:21 மேலும், அவர்கள் விரும்புகின்ற பறவை இறைச்சியையும் உண்பதற்காக அளிப்பார்கள்.
56:22 மேலும், அழகிய கண்களை உடைய ‘ஹூர்’ எனும் மங்கையரும் அவர்களுக்காக இருப்பர்;
56:23 அவர்கள் மறைத்துவைக்கப்பட்ட முத்துக்களைப் போன்று அழகாய் இருப்பார்கள்.
56:24 இவை அனைத்தும் உலகில் அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்குக் கிடைக்கும்.
56:25 அங்கு அவர்கள் வீண் பேச்சுகளையோ, பாவமான விஷயங்களையோ செவியேற்க மாட்டார்கள்.
56:26 எது பேசப்பட்டாலும் சரியாகவே பேசப்படும்.
56:27 மேலும், வலப்பக்கத்தார்; வலப்பக்கத்தார் (உடைய நற்பாக்கியம்) பற்றி என்னவென்றுரைப்பது?
56:28 அவர்கள் முள்ளில்லாத இலந்தை மரங்கள்,
56:29 மேலும் அடுக்கடுக்காய் குலைகள் கொண்ட வாழைகள்;
56:30 பரந்து விரிந்திருக்கும் நிழல்,
56:31 எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் நீர்,
56:32 என்றைக்கும் தீர்ந்துவிடாத
56:33 தங்குதடையின்றிக் கிடைக்கக்கூடிய ஏராளமான கனிகள் ;
56:34 மற்றும் உயர்ந்த விரிப்புகளில் இருப்பார்கள்.
56:35 அவர்களின் மனைவியரை நாம் தனிச்சிறப்புடன் புது அமைப்பில் படைப்போம்.
56:36 மேலும், அவர்களைக் கன்னிகளாகவும்,
56:37 தங்கள் கணவர்கள் மீது காதல் கொண்டவர்களாகவும் சமவயதுடையவர்களாகவும் ஆக்குவோம்.
56:38 இவை அனைத்தும் வலப்பக்கத்தாருக்கு உரியவை.
| |