|
وَالطُّوۡرِۙ ﴿52:1﴾
وَكِتٰبٍ مَّسۡطُوۡرٍۙ ﴿52:2﴾
فِىۡ رَقٍّ مَّنۡشُوۡرٍۙ ﴿52:3﴾
وَالۡبَيۡتِ الۡمَعۡمُوۡرِۙ ﴿52:4﴾
وَالسَّقۡفِ الۡمَرۡفُوۡعِۙ ﴿52:5﴾
وَالۡبَحۡرِ الۡمَسۡجُوۡرِۙ ﴿52:6﴾
اِنَّ عَذَابَ رَبِّكَ لوَاقِعٌ ۙ ﴿52:7﴾
مَّا لَهٗ مِنۡ دَافِعٍۙ ﴿52:8﴾
يَّوۡمَ تَمُوۡرُ السَّمَآءُ مَوۡرًا ۙ ﴿52:9﴾
وَّتَسِيۡرُ الۡجِبَالُ سَيۡرًا ؕ ﴿52:10﴾
فَوَيۡلٌ يَّوۡمَـئِذٍ لِّـلۡمُكَذِّبِيۡنَۙ ﴿52:11﴾
الَّذِيۡنَ هُمۡ فِىۡ خَوۡضٍ يَّلۡعَبُوۡنَۘ ﴿52:12﴾
يَوۡمَ يُدَعُّوۡنَ اِلٰى نَارِ جَهَنَّمَ دَعًّاؕ ﴿52:13﴾
هٰذِهِ النَّارُ الَّتِىۡ كُنۡتُمۡ بِهَا تُكَذِّبُوۡنَ
﴿52:14﴾
اَفَسِحۡرٌ هٰذَاۤ اَمۡ اَنۡتُمۡ لَا تُبۡصِرُوۡنَۚ
﴿52:15﴾
اِصۡلَوۡهَا فَاصۡبِرُوۡۤا اَوۡ لَا تَصۡبِرُوۡاۚ سَوَآءٌ عَلَيۡكُمۡؕ اِنَّمَا تُجۡزَوۡنَ مَا كُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ
﴿52:16﴾
اِنَّ الۡمُتَّقِيۡنَ فِىۡ جَنّٰتٍ وَّنَعِيۡمٍۙ ﴿52:17﴾
فٰكِهِيۡنَ بِمَاۤ اٰتٰٮهُمۡ رَبُّهُمۡۚ وَوَقٰٮهُمۡ رَبُّهُمۡ عَذَابَ الۡجَحِيۡمِ
﴿52:18﴾
كُلُوۡا وَاشۡرَبُوۡا هَـنِٓـيـْئًا ۢ بِمَا كُنۡـتُمۡ تَعۡمَلُوۡنَۙ
﴿52:19﴾
مُتَّكِـئِيۡنَ عَلٰى سُرُرٍ مَّصۡفُوۡفَةٍ ۚ وَزَوَّجۡنٰهُمۡ بِحُوۡرٍ عِيۡنٍ
﴿52:20﴾
وَالَّذِيۡنَ اٰمَنُوۡا وَاتَّبَعَتۡهُمۡ ذُرِّيَّتُهُمۡ بِاِيۡمَانٍ اَلۡحَـقۡنَا بِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَمَاۤ اَلَـتۡنٰهُمۡ مِّنۡ عَمَلِهِمۡ مِّنۡ شَىۡءٍؕ كُلُّ امۡرِیءٍۢ بِمَا كَسَبَ رَهِيۡنٌ
﴿52:21﴾
وَاَمۡدَدۡنٰهُمۡ بِفَاكِهَةٍ وَّلَحۡمٍ مِّمَّا يَشۡتَهُوۡنَ
﴿52:22﴾
يَـتَـنَازَعُوۡنَ فِيۡهَا كَاۡسًا لَّا لَغۡوٌ فِيۡهَا وَلَا تَاۡثِيۡمٌ
﴿52:23﴾
وَيَطُوۡفُ عَلَيۡهِمۡ غِلۡمَانٌ لَّهُمۡ كَاَنَّهُمۡ لُـؤۡلُـؤٌ مَّكۡنُوۡنٌ
﴿52:24﴾
وَاَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلٰى بَعۡضٍ يَّتَسَآءَلُوۡنَ
﴿52:25﴾
قَالُـوۡۤا اِنَّا كُـنَّا قَبۡلُ فِىۡۤ اَهۡلِنَا مُشۡفِقِيۡنَ
﴿52:26﴾
فَمَنَّ اللّٰهُ عَلَيۡنَا وَوَقٰٮنَا عَذَابَ السَّمُوۡمِ
﴿52:27﴾
52:1 தூர் மலையின் மீது சத்தியமாக!
52:2 மெல்லிய தோலில் எழுதப்பட்ட
52:3 திறந்த புத்தகத்தின் மீது சத்தியமாக!
52:4 மக்கள் நடமாட்டமுள்ள இல்லத்தின்மீது சத்தியமாக!
52:5 உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக!
52:6 அலைபுரளும் கடலின் மீது சத்தியமாக!
52:7 உம்முடைய இறைவன் தரும் வேதனை நிச்சயம் வந்தே தீரும்.
52:8 அதனைத் தடுப்பவர் எவருமிலர்.
52:9 அது நிகழும் நாளில் வானம் கடுமையாக நடுங்கும்;
52:10 மலைகள் பறந்து கொண்டிருக்கும்.
52:11 கேடுதான் இருக்கிறது அந்நாளில், பொய் என்று தூற்றியவர்களுக்கு!
52:12 அவர்களோ இன்று வீண் வாதங்களில் விளையாட்டாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
52:13 எந்நாளில் அவர்கள் நெட்டித் தள்ளப்பட்டு நரக நெருப்பின் பக்கம் விரட்டப்படுவார்களோ அந்நாளில்;
52:14 அவர்களிடம் கூறப்படும்: “இதுதான் அந்த நரக நெருப்பு; இதனைத்தான் நீங்கள் பொய்யென வாதித்தீர்கள்.
52:15 இப்போது கூறுங்கள், இது சூனியமா அல்லது உங்களுக்குப் புலப்படவில்லையா?
52:16 இப்போது அதனுள் நுழைந்து எரிந்து விடுங்கள். நீங்கள் சகித்துக்கொண்டாலும் சரி, சகிக்காவிட்டாலும் சரி. இரண்டும் உங்களுக்குச் சமம்தான். நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்களோ அவ்வாறே உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுகின்றது.”
52:17 இறையச்சமுள்ளவர்கள் அங்கு சுவனங்களிலும் அருட்பேறுகளிலும் இருப்பார்கள்.
52:18 அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றிலிருந்து இன்பம் துய்த்துக் கொண்டிருப்பார்கள். மேலும், அவர்களுடைய இறைவன் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவான்.
52:19 (அவர்களிடம் கூறப்படும்:) “உண்ணுங்கள், பருகுங்கள் மகிழ்வோடு; நீங்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்குரிய வெகுமதியாக!”
52:20 எதிரெதிரே விரித்து வைக்கப்பட்டிருக்கும் கட்டில்களில் மெத்தைகள் வைத்து அவர்கள் அமர்ந்திருப்பார்கள். அழகிய கண்களைக் கொண்ட மங்கையரை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்போம்.
52:21 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ, அவர்களையும், இறைநம்பிக்கையில் ஓரளவாவது அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய அவர்களின் வழித்தோன்றல்களையும் நாம் (சுவனத்தில்) ஒன்று சேர்த்து வைப்போம். மேலும், அவர்களின் செயல்களில் எந்த இழப்பையும் அவர்களுக்கு நாம் ஏற்படுத்தமாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றுக்குப் பணயமாக இருக்கின்றான்.
52:22 மேலும், நாம் எல்லாவிதமான பழங்களையும், இறைச்சியையும், அவர்களின் உள்ளம் விரும்புகின்றவற்றையும் அவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்துக்கொண்டே இருப்போம்.
52:23 அங்கே அவர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து மதுக்கிண்ணத்தைப் பாய்ந்து பாய்ந்து வாங்கிக் கொண்டிருப்பார்கள். அங்கு வீணான பேச்சும் இருக்காது; தீய நடத்தையும் இருக்காது.
52:24 அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்கென்று நியமிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களுக்குச் சேவைபுரிய ஓடியாடிக் கொண்டிருப்பார்கள். அந்தச் சிறுவர்கள் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அழகாய் இருப்பார்கள்.
52:25 மேலும், அவர்கள் (உலகில் நடந்த) நிலைமைகளைக் குறித்து பரஸ்பரம் விசாரிப்பார்கள்.
52:26 அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் முன்பு எங்கள் குடும்பத்தாரிடையே அஞ்சிய வண்ணம் வாழ்ந்து வந்தோம்.
52:27 இறுதியில், அல்லாஹ் எங்கள்மீது அருள்புரிந்தான்; மேலும், பொசுக்கிவிடும் காற்றின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றிவிட்டான்.
| |