|
يَوۡمَ نَدۡعُوۡا كُلَّ اُنَاسٍۢ بِاِمَامِهِمۡۚ فَمَنۡ اُوۡتِىَ كِتٰبَهٗ بِيَمِيۡنِهٖ فَاُولٰۤـئِكَ يَقۡرَءُوۡنَ كِتٰبَهُمۡ وَلَا يُظۡلَمُوۡنَ فَتِيۡلًا
﴿17:71﴾
وَمَنۡ كَانَ فِىۡ هٰذِهٖۤ اَعۡمٰى فَهُوَ فِى الۡاٰخِرَةِ اَعۡمٰى وَاَضَلُّ سَبِيۡلًا
﴿17:72﴾
وَاِنۡ كَادُوۡا لَيَـفۡتِنُوۡنَكَ عَنِ الَّذِىۡۤ اَوۡحَيۡنَاۤ اِلَيۡكَ لِتَفۡتَرِىَ عَلَيۡنَا غَيۡرَهٗ ۖ وَاِذًا لَّاتَّخَذُوۡكَ خَلِيۡلًا
﴿17:73﴾
وَلَوۡلَاۤ اَنۡ ثَبَّتۡنٰكَ لَقَدۡ كِدْتَّ تَرۡكَنُ اِلَيۡهِمۡ شَيۡـئًـا قَلِيۡلًا ۙ
﴿17:74﴾
اِذًا لَّاَذَقۡنٰكَ ضِعۡفَ الۡحَيٰوةِ وَضِعۡفَ الۡمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَـكَ عَلَيۡنَا نَصِيۡرًا
﴿17:75﴾
وَاِنۡ كَادُوۡا لَيَسۡتَفِزُّوۡنَكَ مِنَ الۡاَرۡضِ لِيُخۡرِجُوۡكَ مِنۡهَا وَاِذًا لَّا يَلۡبَـثُوۡنَ خِلٰفَكَ اِلَّا قَلِيۡلًا
﴿17:76﴾
سُنَّةَ مَنۡ قَدۡ اَرۡسَلۡنَا قَبۡلَكَ مِنۡ رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحۡوِيۡلًا
﴿17:77﴾
17:71 மேலும் ஒவ்வொரு சமூகத்தையும் அவர்களுடைய தலைவருடன் நாம் அழைக்கவிருக்கும் நாளினை நினைவு கூருங்கள்: அந்நாளில் எவர்களின் வினைப்பட்டியல் அவர்களுடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ அவர்கள் தமது வினைப்பட்டியலைப் படிப்பார்கள். மேலும், அவர்களுக்கு இம்மியளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது.
17:72 மேலும், எவன் இவ்வுலகில் குருடனாக இருந்தானோ அவன் மறுமையிலும் குருடனாகவே இருப்பான். ஏன், வழியை அறிவதில் குருடனை விட அதிகம் தோல்வியுற்றவனாக இருப்பான்.
17:73 (நபியே!) இம்மக்கள் உம்மைக் குழப்பத்திலாழ்த்தி, உம்மைத் திசை திருப்பும் முயற்சியில் எந்தக் குறையும் வைக்கவில்லை நாம் உமக்கு அனுப்பிய வஹியை விட்டு வேறு எதையாவது நீர் நம் மீது புனைந்துரைக்க வேண்டும் என்பதற்காக! நீர் அவ்வாறு புனைந்துரைத்திருந்தால் அவர்கள் உம்மை நண்பராக்கியிருப்பார்கள்.
17:74 நாம் உமக்கு உறுதிப்பாட்டை வழங்காதிருந்தால், நீர் அவர்களின் பக்கம் சிறிதேனும் சாய்ந்திருக்கக் கூடும்.
17:75 நீர் அவ்வாறு சாய்ந்திருந்தால், உலக வாழ்வில் இரு மடங்கு வேதனையையும் மரணத்திற்குப் பின்பு இரு மடங்கு வேதனையையும் நீர் சுவைக்கும்படிச் செய்திருப்போம். பிறகு நமக்கு எதிராக உதவிபுரிபவர் எவரையும் நீர் காணமாட்டீர்.
17:76 இந்த மண்ணிலிருந்து உமது பாதத்தைப் பெயர்த்திட வேண்டும்; உம்மை இங்கிருந்து வெளியேற்றிட வேண்டும் என்று அவர்கள் மும்முரமாக முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்தால் உமக்குப் பின் அவர்களும் இங்கு அதிக காலம் தங்கியிருக்க முடியாது!
17:77 உமக்கு முன்னால் அனுப்பப்பட்ட நம்முடைய அனைத்துத் தூதர்கள் விஷயத்திலும் நாம் கடைப்பிடித்து வந்த நிலையான நியதி இதுவே. நமது நியதியில் நீர் எந்த மாறுதலையும் காணமாட்டீர்!
| |