|
وَاِذۡ قُلۡنَا لِلۡمَلٰۤـئِكَةِ اسۡجُدُوۡا لِاٰدَمَ فَسَجَدُوۡۤا اِلَّاۤ اِبۡلِيۡسَ قَالَ ءَاَسۡجُدُ لِمَنۡ خَلَقۡتَ طِيۡنًا ۚ
﴿17:61﴾
قَالَ اَرَءَيۡتَكَ هٰذَا الَّذِىۡ كَرَّمۡتَ عَلَىَّ لَـئِنۡ اَخَّرۡتَنِ اِلٰى يَوۡمِ الۡقِيٰمَةِ لَاَحۡتَنِكَنَّ ذُرِّيَّتَهٗۤ اِلَّا قَلِيۡلًا
﴿17:62﴾
قَالَ اذۡهَبۡ فَمَنۡ تَبِعَكَ مِنۡهُمۡ فَاِنَّ جَهَـنَّمَ جَزَآؤُكُمۡ جَزَآءً مَّوۡفُوۡرًا
﴿17:63﴾
وَاسۡتَفۡزِزۡ مَنِ اسۡتَطَعۡتَ مِنۡهُمۡ بِصَوۡتِكَ وَاَجۡلِبۡ عَلَيۡهِمۡ بِخَيۡلِكَ وَرَجِلِكَ وَشَارِكۡهُمۡ فِى الۡاَمۡوَالِ وَالۡاَوۡلَادِ وَعِدۡهُمۡ ؕ وَمَا يَعِدُهُمُ الشَّيۡطٰنُ اِلَّا غُرُوۡرًا
﴿17:64﴾
اِنَّ عِبَادِىۡ لَـيۡسَ لَـكَ عَلَيۡهِمۡ سُلۡطٰنٌ ؕ وَكَفٰى بِرَبِّكَ وَكِيۡلًا
﴿17:65﴾
رَبُّكُمُ الَّذِىۡ يُزۡجِىۡ لَـكُمُ الۡفُلۡكَ فِى الۡبَحۡرِ لِتَبۡتَغُوۡا مِنۡ فَضۡلِهٖؕ اِنَّهٗ كَانَ بِكُمۡ رَحِيۡمًا
﴿17:66﴾
وَاِذَا مَسَّكُمُ الضُّرُّ فِى الۡبَحۡرِ ضَلَّ مَنۡ تَدۡعُوۡنَ اِلَّاۤ اِيَّاهُ ۚ فَلَمَّا نَجّٰٮكُمۡ اِلَى الۡبَرِّ اَعۡرَضۡتُمۡ ؕ وَكَانَ الۡاِنۡسَانُ كَفُوۡرًا
﴿17:67﴾
اَفَاَمِنۡتُمۡ اَنۡ يَّخۡسِفَ بِكُمۡ جَانِبَ الۡبَرِّ اَوۡ يُرۡسِلَ عَلَيۡكُمۡ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوۡالَـكُمۡ وَكِيۡلًا ۙ
﴿17:68﴾
اَمۡ اَمِنۡتُمۡ اَنۡ يُّعِيۡدَكُمۡ فِيۡهِ تَارَةً اُخۡرٰى فَيُرۡسِلَ عَلَيۡكُمۡ قَاصِفًا مِّنَ الرِّيۡحِ فَيُغۡرِقَكُمۡ بِمَا كَفَرۡتُمۡۙ ثُمَّ لَا تَجِدُوۡا لَـكُمۡ عَلَيۡنَا بِهٖ تَبِيۡعًا
﴿17:69﴾
وَلَـقَدۡ كَرَّمۡنَا بَنِىۡۤ اٰدَمَ وَحَمَلۡنٰهُمۡ فِى الۡبَرِّ وَالۡبَحۡرِ وَرَزَقۡنٰهُمۡ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلۡنٰهُمۡ عَلٰى كَثِيۡرٍ مِّمَّنۡ خَلَقۡنَا تَفۡضِيۡلًا
﴿17:70﴾
17:61 மேலும், நினைத்துப் பாரும்: ஆதத்துக்குச் சிரம் பணியுங்கள் என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, அனைவரும் சிரம் பணிந்தார்கள் இப்லீசைத் தவிர! அவன் கேட்டான்: “நீ மண்ணினால் படைத்த ஒருவருக்கு நான் சிரம் பணிவேனா?”
17:62 மேலும், அவன் கூறினான்: “சற்று நீயே பார்! என்னைவிட இவருக்கு நீ கண்ணியம் அளித்துள்ளாயே, அதற்கு அவர் தகுதியுடையவர்தானா? நீ எனக்கு மறுமை நாள் வரை அவகாசம் அளித்தால், அவருடைய வழித்தோன்றல்கள் அனைவரையும் அடியோடு நான் ஒழித்துக்கட்டுவேன். மிகக் குறைவான மக்கள்தாம் என்னிடமிருந்து தப்ப முடியும்!”
17:63 அல்லாஹ் கூறினான்: “சரி! நீ போய்விடு; அவர்களில் யார் உன்னைப் பின்பற்றினாலும் உன்னோடு சேர்த்து அவர்கள் அனைவர்க்கும் நரகம்தான் நிறைவான கூலியாகும்.
17:64 உனது பசப்பு வார்த்தையின் மூலம் அவர்களில் யாரை உன்னால் வழிபிறழச் செய்ய முடியுமோ வழிபிறழச் செய்! மேலும், உனது குதிரைப் படையையும் காலாட் படையையும் அவர்களுக்கு எதிராக அணிதிரட்டு! சொத்துக்களிலும் பிள்ளைகளிலும் நீ அவர்களுடன் பங்காளியாகிவிடு. உன்னுடைய வாக்குறுதி வலைக்குள் அவர்களைச் சிக்கவை! ஷைத்தானின் வாக்குறுதி பெரும் ஏமாற்றமே தவிர வேறொன்றுமில்லை
17:65 திண்ணமாக, என் அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இருக்காது. மேலும் முற்றிலும் சார்ந்து இருப்பதற்கு உம் இறைவனே போதுமானவன்!”
17:66 உங்கள் (உண்மையான) இறைவன் யாரெனில், அவன்தான் உங்களுக்காக கடலில் கப்பலைச் செலுத்துகிறான்; நீங்கள் அவனது அருளைத் தேடும்பொருட்டு! திண்ணமாக, அவன் உங்களுக்கு மிகவும் கிருபை புரிபவனாக இருக்கின்றான்.
17:67 கடலில் உங்களுக்குத் துன்பம் ஏற்படும்போது அந்த ஏகனை விடுத்து, நீங்கள் யார் யாரையெல்லாம் அழைக்கிறீர்களோ, அவர்கள் அனைவரும் மறைந்துபோய் விடுகிறார்கள். ஆனால், அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிடும்போது நீங்கள் அவனைப் புறக்கணித்துவிடுகிறீர்கள். உண்மையில் மனிதன் மிகவும் நன்றி கொல்பவனாக இருக்கிறான்.
17:68 கரை சேர்ந்த பிறகு என்றேனும் ஒருநாள் இறைவன் உங்களைப் பூமி விழுங்கும்படிச் செய்துவிடுவான் என்பது குறித்தும் அல்லது உங்கள் மீது கற்களைப் பொழியும் புயலை அனுப்பிவிடுவான் என்பது குறித்தும் பிறகு, அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற எந்தப் பாதுகாவலனையும் நீங்கள் காணமாட்டீர்கள் என்பதைக் குறித்தும் நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா என்ன?
17:69 அல்லது அல்லாஹ் மீண்டும் ஒருமுறை உங்களைக் கடலுக்குக் கொண்டு சென்று, நீங்கள் நன்றி கொன்றதற்குப் பதிலாக உங்கள் மீது கடும் புயல்காற்றை அனுப்பி, உங்களை மூழ்கடித்துவிடுவான்; அல்லது உங்களுக்கு ஏற்பட்ட இந்தக் கதி பற்றி அவனிடம் விசாரணை செய்யக்கூடிய எவரும் உங்களுக்குக் கிடைக்க மாட்டார்கள் என்பவற்றைக் குறித்தும் நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா?
17:70 நாம் ஆதத்தின் வழித்தோன்றல்களுக்குக் கண்ணியம் அளித்துள்ளோம். மேலும், தரையிலும் கடலிலும் அவர்களுக்கு வாகனங்களை வழங்கினோம். தூய பொருள்களிலிருந்து அவர்களுக்கு ஆகாரம் வழங்கினோம். மேலும், நாம் படைத்த பெரும்பாலான படைப்புகளைவிட அவர்களுக்கு அதிகச் சிறப்புகளையும் வழங்கினோம். இவை நமது கொடைகளாகும்.
| |