|
وَقُلْ لِّعِبَادِىۡ يَقُوۡلُوا الَّتِىۡ هِىَ اَحۡسَنُؕ اِنَّ الشَّيۡطٰنَ يَنۡزَغُ بَيۡنَهُمۡؕ اِنَّ الشَّيۡطٰنَ كَانَ لِلۡاِنۡسَانِ عَدُوًّا مُّبِيۡنًا
﴿17:53﴾
رَبُّكُمۡ اَعۡلَمُ بِكُمۡؕ اِنۡ يَّشَاۡ يَرۡحَمۡكُمۡ اَوۡ اِنۡ يَّشَاۡ يُعَذِّبۡكُمۡ ؕ وَمَاۤ اَرۡسَلۡنٰكَ عَلَيۡهِمۡ وَكِيۡلًا
﴿17:54﴾
وَرَبُّكَ اَعۡلَمُ بِمَنۡ فِى السَّمٰوٰتِ وَالۡاَرۡضِؕ وَلَقَدۡ فَضَّلۡنَا بَعۡضَ النَّبِيّٖنَ عَلٰى بَعۡضٍ وَّاٰتَيۡنَا دَاوٗدَ زَبُوۡرًا
﴿17:55﴾
قُلِ ادۡعُوا الَّذِيۡنَ زَعَمۡتُمۡ مِّنۡ دُوۡنِهٖ فَلَا يَمۡلِكُوۡنَ كَشۡفَ الضُّرِّ عَنۡكُمۡ وَلَا تَحۡوِيۡلًا
﴿17:56﴾
اُولٰۤـئِكَ الَّذِيۡنَ يَدۡعُوۡنَ يَبۡتَغُوۡنَ اِلٰى رَبِّهِمُ الۡوَسِيۡلَةَ اَيُّهُمۡ اَقۡرَبُ وَيَرۡجُوۡنَ رَحۡمَتَهٗ وَيَخَافُوۡنَ عَذَابَهٗؕ اِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحۡذُوۡرًا
﴿17:57﴾
وَاِنۡ مِّنۡ قَرۡيَةٍ اِلَّا نَحۡنُ مُهۡلِكُوۡهَا قَبۡلَ يَوۡمِ الۡقِيٰمَةِ اَوۡ مُعَذِّبُوۡهَا عَذَابًا شَدِيۡدًا ؕ كَانَ ذٰ لِكَ فِى الۡـكِتٰبِ مَسۡطُوۡرًا
﴿17:58﴾
وَمَا مَنَعَنَاۤ اَنۡ نُّرۡسِلَ بِالۡاٰيٰتِ اِلَّاۤ اَنۡ كَذَّبَ بِهَا الۡاَوَّلُوۡنَؕ وَاٰتَيۡنَا ثَمُوۡدَ النَّاقَةَ مُبۡصِرَةً فَظَلَمُوۡا بِهَاؕ وَمَا نُرۡسِلُ بِالۡاٰيٰتِ اِلَّا تَخۡوِيۡفًا
﴿17:59﴾
وَاِذۡ قُلۡنَا لَـكَ اِنَّ رَبَّكَ اَحَاطَ بِالنَّاسِ ؕ وَمَا جَعَلۡنَا الرُّءۡيَا الَّتِىۡۤ اَرَيۡنٰكَ اِلَّا فِتۡنَةً لِّلنَّاسِ وَ الشَّجَرَةَ الۡمَلۡعُوۡنَةَ فِى الۡقُرۡاٰنِ ؕ وَنُخَوِّفُهُمۡۙ فَمَا يَزِيۡدُهُمۡ اِلَّا طُغۡيَانًا كَبِيۡرًا
﴿17:60﴾
17:53 மேலும், (நபியே! நம்பிக்கையாளர்களான) என் அடியார்களிடம், அவர்கள் மிகவும் சிறந்த பேச்சைத்தான் பேச வேண்டும் என்று நீர் கூறுவீராக! உண்மையாதெனில், ஷைத்தான் மனிதர்களிடையே குழப்பம் உண்டாக்க முயற்சி செய்கிறான். திண்ணமாக, ஷைத்தான் மனிதர்களுக்கு வெளிப்படையான பகைவன் ஆவான்.
17:54 உங்கள் இறைவன் உங்கள் நிலைமையை நன்கு அறிந்தவனாக இருக்கிறான். அவன் நாடினால் உங்களுக்கு அருள் புரிவான்; அவன் நாடினால் உங்களைத் தண்டிப்பான். மேலும் (நபியே!) மக்களுக்குப் பொறுப்பேற்பவராக நாம் உம்மை அனுப்பி வைக்கவில்லை.
17:55 உம் இறைவன் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள படைப்புகள் பற்றி அதிகம் அறிந்திருக்கிறான். நாம் தூதர்களில் சிலருக்கு சிலரைவிட சிறப்பளித்திருக்கிறோம். மேலும், நாம் தாவூதுக்கு ஜபூர் வேதத்தை வழங்கியிருந்தோம்.
17:56 இவர்களிடம் கூறும்: “அல்லாஹ்வை விடுத்து (உங்கள் காரியங்களை நிறைவேற்றுபவர்களாய்) எந்தக் கடவுளர்களை நீங்கள் கருதுகிறீர்களோ அவர்களை அழைத்துப் பாருங்கள்! உங்களின் எந்தத் துன்பத்தையும் அவர்களால் அகற்றிவிட முடியாது; மாற்றிவிடவும் முடியாது.
17:57 அவர்களேகூட தம் இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வஸீலாவை வழிவகையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்; தங்களில் யார் அவனுக்கு அதிகம் நெருக்கமானவராய் ஆவது என்பதற்காக! மேலும், அவனுடைய அருளை எதிர்பார்த்துக் கொண்டும் அவன் தரக்கூடிய வேதனைக்கு அஞ்சிக் கொண்டும் இருக்கிறார்கள். உண்மையில் அஞ்ச வேண்டியது உம் அதிபதி தரும் வேதனைக்குத்தான்!
17:58 எந்த ஊரையும் மறுமைநாளைக்கு முன் அழித்தொழிக் காமலோ, கடுமையான வேதனையில் ஆழ்த்தாமலோ நாம் விட்டு விட மாட்டோம். இது இறைவனின் பதிவேட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
17:59 சான்றுகளை அனுப்புவதிலிருந்து நம்மைத் தடுக்க வில்லை; முன்பு வாழ்ந்தவர்கள் அவற்றைப் பொய்யெனத் தூற்றி விட்டார்கள் என்பதைத் தவிர! (பாருங்கள்:) ஸமூத் கூட்டத்தார்க்கு ஒரு பெண் ஒட்டகத்தை எல்லோரும் அறியும் வண்ணம் வெளிப்படையாக கொடுத்தோம். ஆனால், அவர்கள் அதற்குக் கொடுமை இழைத்தார்கள். நாம் சான்றுகளை அனுப்புவது, மக்கள் அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டும் என்பதற்காகவே!
17:60 மேலும் (நபியே!) திண்ணமாக உம் இறைவன் மக்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான் என்று நாம் உம்மிடம் கூறியிருந்ததை நினைத்துப் பாரும்! மேலும், இப்போது நாம் உமக்குக் காண்பித்துத் தந்தவற்றையும் குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரத்தையும் இம்மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியிருக்கிறோம். நாம் மீண்டும் மீண்டும் இவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு அச்சுறுத்தலும் இவர்களுடைய வரம்பு மீறும் நடத்தையை அதிகப்படுத்தவே செய்கிறது.
| |