|
وَلَقَدۡ صَرَّفۡنَا فِىۡ هٰذَا الۡقُرۡاٰنِ لِيَذَّكَّرُوۡا ؕ وَمَا يَزِيۡدُهُمۡ اِلَّا نُفُوۡرًا
﴿17:41﴾
قُلْ لَّوۡ كَانَ مَعَهٗۤ اٰلِهَةٌ كَمَا يَقُوۡلُوۡنَ اِذًا لَّابۡتَغَوۡا اِلٰى ذِى الۡعَرۡشِ سَبِيۡلًا
﴿17:42﴾
سُبۡحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يَقُوۡلُوۡنَ عُلُوًّا كَبِيۡرًا
﴿17:43﴾
تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبۡعُ وَالۡاَرۡضُ وَمَنۡ فِيۡهِنَّؕ وَاِنۡ مِّنۡ شَىۡءٍ اِلَّا يُسَبِّحُ بِحَمۡدِهٖ وَلٰـكِنۡ لَّا تَفۡقَهُوۡنَ تَسۡبِيۡحَهُمۡؕ اِنَّهٗ كَانَ حَلِيۡمًا غَفُوۡرًا
﴿17:44﴾
وَاِذَا قَرَاۡتَ الۡقُرۡاٰنَ جَعَلۡنَا بَيۡنَكَ وَبَيۡنَ الَّذِيۡنَ لَا يُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَةِ حِجَابًا مَّسۡتُوۡرًا ۙ
﴿17:45﴾
وَّجَعَلۡنَا عَلٰى قُلُوۡبِهِمۡ اَكِنَّةً اَنۡ يَّفۡقَهُوۡهُ وَفِىۡۤ اٰذَانِهِمۡ وَقۡرًا ؕ وَاِذَا ذَكَرۡتَ رَبَّكَ فِى الۡقُرۡاٰنِ وَحۡدَهٗ وَلَّوۡا عَلٰٓى اَدۡبَارِهِمۡ نُفُوۡرًا
﴿17:46﴾
نَحۡنُ اَعۡلَمُ بِمَا يَسۡتَمِعُوۡنَ بِهٖۤ اِذۡ يَسۡتَمِعُوۡنَ اِلَيۡكَ وَاِذۡ هُمۡ نَجۡوٰٓى اِذۡ يَقُوۡلُ الظّٰلِمُوۡنَ اِنۡ تَتَّبِعُوۡنَ اِلَّا رَجُلًا مَّسۡحُوۡرًا
﴿17:47﴾
اُنْظُرۡ كَيۡفَ ضَرَبُوۡا لَكَ الۡاَمۡثَالَ فَضَلُّوۡا فَلَا يَسۡتَطِيۡعُوۡنَ سَبِيۡلًا
﴿17:48﴾
وَقَالُوۡۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبۡعُوۡثُوۡنَ خَلۡقًا جَدِيۡدًا
﴿17:49﴾
قُلۡ كُوۡنُوۡا حِجَارَةً اَوۡ حَدِيۡدًا ﴿17:50﴾
اَوۡ خَلۡقًا مِّمَّا يَكۡبُرُ فِىۡ صُدُوۡرِكُمۡۚ فَسَيَـقُوۡلُوۡنَ مَنۡ يُّعِيۡدُنَا ؕ قُلِ الَّذِىۡ فَطَرَكُمۡ اَوَّلَ مَرَّةٍ ۚ فَسَيُنۡغِضُوۡنَ اِلَيۡكَ رُءُوۡسَهُمۡ وَيَقُوۡلُوۡنَ مَتٰى هُوَ ؕ قُلۡ عَسٰٓى اَنۡ يَّكُوۡنَ قَرِيۡبًا
﴿17:51﴾
يَوۡمَ يَدۡعُوۡكُمۡ فَتَسۡتَجِيۡبُوۡنَ بِحَمۡدِهٖ وَتَظُنُّوۡنَ اِنۡ لَّبِثۡتُمۡ اِلَّا قَلِيۡلًا
﴿17:52﴾
17:41 மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் குர்ஆனில் (உண்மைகளை) விதவிதமாக நாம் விளக்கினோம். ஆனால், அவர்கள் சத்தியத்தை விட்டு மேலும் மேலும் விலகி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
17:42 (நபியே! இவர்களிடம்) நீர் கூறுவீராக: “இவர்கள் சொல்வது போல் அல்லாஹ்வுடன் வேறு கடவுளரும் இருந்திருந்தால், நிச்சயமாக அவர்கள் அர்ஷûடைய அதிபதியின் இடத்தை அடைவதற்குத் திண்ணமாக வழிவகையைத் தேடியிருப்பார்கள்.
17:43 அவன் மிகத் தூய்மையானவனும், மிக உயர்ந்தவனும், மேலானவனும் ஆவான்; இவர்கள் கூறிக்கொண்டிருப்பதை விட்டு!
17:44 ஏழு வானங்களும் பூமியும் மற்றும் இவற்றிலுள்ள அனைத்துமே அவனுடைய தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றன. அவனைப் புகழ்வதுடன் அவனைத் துதி செய்து கொண்டிராத எந்த ஒரு பொருளும் இல்லை. ஆயினும், அவை துதி செய்வதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. உண்மையில், அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும், மன்னித்தருள்பவனாகவும் இருக்கின்றான்.
17:45 நீர் குர்ஆனை ஓதும்போது உமக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் நாம் ஒரு திரையைப் போட்டு விடுகிறோம்.
17:46 எதையும் அவர்கள் புரிந்து கொள்ளாதவாறு அவர்களின் இதயங்கள் மீது உறைபோட்டு விடுகிறோம். மேலும், அவர்களின் காதுகளை மந்தமாக்கி விடுகிறோம். நீர் குர்ஆனில் உம்முடைய ஏகனாகிய அதிபதியைப் பற்றி எடுத்துரைக்கும்போது அவர்கள் வெறுப்போடு முகம் திருப்பிச் சென்றுவிடுகிறார்கள்.
17:47 நீர் கூறுகின்றவற்றை அவர்கள் செவிதாழ்த்திக் கேட்கும்போது உண்மையில் எதனைக் கேட்கிறார்கள் என்பதையும், அவர்கள் தமக்கிடையே கிசுகிசுக்கும்போது என்ன பேசுகிறார்கள் என்பதையும் நாம் நன்கறிவோம். இந்த அக்கிரமக்காரர்கள் தமக்கிடையே கூறுகிறார்கள்: “இவரோ சூனியம் செய்யப்பட்டுள்ள மனிதர்; இவரைப் போய் நீங்கள் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கிறீர்களே!”
17:48 பாரும்! எப்படிப்பட்ட விஷயங்களையெல்லாம் இவர்கள் உம்மீது அள்ளி வீசுகிறார்கள். இவர்கள் வழிபிறழ்ந்து விட்டார்கள். இனி இவர்களுக்கு நேர்வழி கிடைக்கப்போவதில்லை.
17:49 அவர்கள் கேட்கிறார்கள்: “நாங்கள் வெறும் எலும்புகளாகி மண்ணோடு மண்ணாகிய பிறகு மீண்டும் புதிய படைப்பாய் எழுப்பப்படுவோமா?”
17:50 (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகிவிடுங்கள்.
17:51 அல்லது உயிர் பெறவே முடியாது என்று நீங்கள் கருதுகின்ற இதைவிடவும் கடினமான வேறொரு பொருளாய் ஆகிவிடுங்கள்!” (எப்படியானாலும் நீங்கள் எழுப்பப்படுவீர்கள்!) “மீண்டும் எங்களை வாழ்க்கையின் பக்கம் திரும்பக்கொண்டு வருபவர் யார்?” என்று அவர்கள் அவசியம் கேட்பார்கள். நீர் கூறும்: “எவன், உங்களை முதல் தடவை படைத்தானோ, அவன்தான்!” தங்களின் தலையை ஆட்டி ஆட்டி அவர்கள் உம்மிடம் கேட்பார்கள், “சரி, அது எப்போது நிகழும்?” என்று! நீர் பதில் கூறும்: “வியப்பென்ன? மிக விரைவிலேயே அது நிகழக்கூடும்.”
17:52 எந்நாளில் அவன் உங்களை அழைப்பானோ அந்நாளில் அவனது அழைப்பிற்குப் பதில் அளிக்கும் வகையில், நீங்கள் அவனது புகழ்பாடிக் கொண்டு வருவீர்கள். ‘நாம் சிறிதுகாலமே இந்நிலையில் கிடந்திருந்தோம்’ என்பதுதான் அப்பொழுது உங்களுடைய நினைப்பாக இருக்கும்!
| |