|
وَلَقَدۡ اٰتَيۡنَا مُوۡسٰى تِسۡعَ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ فَسۡـئَلۡ بَنِىۡۤ اِسۡرَاۤءِيۡلَ اِذۡ جَآءَهُمۡ فَقَالَ لَهٗ فِرۡعَوۡنُ اِنِّىۡ لَاَظُنُّكَ يٰمُوۡسٰى مَسۡحُوۡرًا
﴿17:101﴾
قَالَ لَقَدۡ عَلِمۡتَ مَاۤ اَنۡزَلَ هٰٓؤُلَاۤءِ اِلَّا رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ بَصَآئِرَ ۚ وَاِنِّىۡ لَاَظُنُّكَ يٰفِرۡعَوۡنُ مَثۡبُوۡرًا
﴿17:102﴾
فَاَرَادَ اَنۡ يَّسۡتَفِزَّهُمۡ مِّنَ الۡاَرۡضِ فَاَغۡرَقۡنٰهُ وَ مَنۡ مَّعَهٗ جَمِيۡعًا ۙ
﴿17:103﴾
وَّقُلۡنَا مِنۡۢ بَعۡدِهٖ لِبَنِىۡۤ اِسۡرَاۤءِيۡلَ اسۡكُنُوا الۡاَرۡضَ فَاِذَا جَآءَ وَعۡدُ الۡاٰخِرَةِ جِئۡنَا بِكُمۡ لَفِيۡفًا ؕ
﴿17:104﴾
وَبِالۡحَـقِّ اَنۡزَلۡنٰهُ وَبِالۡحَـقِّ نَزَلَ ؕ وَمَاۤ اَرۡسَلۡنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِيۡرًا ۘ
﴿17:105﴾
وَقُرۡاٰنًا فَرَقۡنٰهُ لِتَقۡرَاَهٗ عَلَى النَّاسِ عَلٰى مُكۡثٍ وَّنَزَّلۡنٰهُ تَنۡزِيۡلًا
﴿17:106﴾
قُلۡ اٰمِنُوۡا بِهٖۤ اَوۡ لَا تُؤۡمِنُوۡٓا ؕ اِنَّ الَّذِيۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ مِنۡ قَبۡلِهٖۤ اِذَا يُتۡلٰى عَلَيۡهِمۡ يَخِرُّوۡنَ لِلۡاَذۡقَانِ سُجَّدًا ۙ
﴿17:107﴾
وَّيَقُوۡلُوۡنَ سُبۡحٰنَ رَبِّنَاۤ اِنۡ كَانَ وَعۡدُ رَبِّنَا لَمَفۡعُوۡلًا
﴿17:108﴾
وَيَخِرُّوۡنَ لِلۡاَذۡقَانِ يَبۡكُوۡنَ وَيَزِيۡدُهُمۡ خُشُوۡعًا ۩
﴿17:109﴾
قُلِ ادۡعُوا اللّٰهَ اَوِ ادۡعُوا الرَّحۡمٰنَ ؕ اَ يًّا مَّا تَدۡعُوۡا فَلَهُ الۡاَسۡمَآءُ الۡحُسۡنٰى ۚ وَلَا تَجۡهَرۡ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتۡ بِهَا وَابۡتَغِ بَيۡنَ ذٰ لِكَ سَبِيۡلًا
﴿17:110﴾
وَقُلِ الۡحَمۡدُ لِلّٰهِ الَّذِىۡ لَمۡ يَتَّخِذۡ وَلَدًا وَّلَمۡ يَكُنۡ لَّهٗ شَرِيۡكٌ فِى الۡمُلۡكِ وَلَمۡ يَكُنۡ لَّهٗ وَلِىٌّ مِّنَ الذُّلِّ وَكَبِّرۡهُ تَكۡبِيۡرًا
﴿17:111﴾
17:101 தெளிவாகப் புலப்படக்கூடிய ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு நாம் வழங்கியிருந்தோம். நீங்கள் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களிடம் மூஸா வந்தபோது ஃபிர் அவ்ன் அவரிடம், “மூஸாவே! நான் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே கருதுகின்றேன்” என்றல்லவா கூறினான்!
17:102 அதற்கு மூஸா கூறினார்: “அகத் தெளிவை ஏற்படுத்தக்கூடிய சான்றுகளை வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இறக்கி வைக்கவில்லை என்பதை நீ நன்கறிவாய். ஃபிர்அவ்னே! திண்ணமாக, நான் உன்னை நாசத்திற்குள்ளாகக் கூடிய மனிதனாகவே கருதுகின்றேன்.”
17:103 இறுதியில் மூஸாவையும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களையும் அந்தப் பூமியிலிருந்து அடியோடு வெளியேற்றிட வேண்டும் என்று ஃபிர்அவ்ன் எண்ணியிருந்தான். ஆயினும், நாம் அவனையும் அவனுடைய ஆட்களையும் கூண்டோடு மூழ்கடித்தோம்.
17:104 மேலும், அவனுக்குப் பின்னர் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் கூறினோம்: “நீங்கள் இந்தப் பூமியில் குடியிருங்கள். மறுமை பற்றி வாக்களிக்கப்பட்ட காலம் வரும்போது நாம் உங்கள் அனைவரையும் ஒன்று திரட்டிக் கொண்டு வருவோம்.”
17:105 இந்தக் குர்ஆனை நாம் சத்தியத்துடனேயே இறக்கியருளினோம்; அது சத்தியத்துடன்தான் இறங்கியுள்ளது. மேலும் (நபியே!) நாம் உம்மை, (ஏற்றுக் கொண்டவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பதற்கும் (ஏற்றுக் கொள்ளாதோருக்கு) எச்சரிக்கை செய்வதற்குமே அன்றி வேறு எதற்காகவும் அனுப்ப வில்லை.
17:106 நாம் இந்தக் குர்ஆனை எதற்காக கொஞ்சம் கொஞ்சமாக இறக்கியருளினோமெனில், நீர் இதனை மக்களுக்கு நிறுத்தி நிறுத்தி ஓதிக்காட்ட வேண்டும் என்பதற்காகத்தான்! மேலும், இதனை நாம் படிப்படியாக (சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு) இறக்கி வைத்தோம்.
17:107 (நபியே! இவர்களிடம்) கூறிவிடும்; “இதனை நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி; இதற்கு முன்பு ஞானம் வழங்கப்பட்ட மக்களிடம் இது ஓதிக்காட்டப்பட்டால், அவர்கள் முகங்குப்புற ஸஜ்தாவில் வீழ்கிறார்கள்.
17:108 மேலும், “தூய்மையானவன் எங்கள் இறைவன்; அவனுடைய வாக்குறுதி நிச்சயம் நிறை வேற வேண்டியிருந்தது” என்று கூறுகின்றார்கள்;
17:109 அழுத வண்ணம் முகங்குப்புற விழுகின்றார்கள்! இதனைச் செவிமடுப்பது அவர்களின் இறையச்சத்தை இன்னும் அதிகப்படுத்திவிடுகின்றது.
17:110 (நபியே! இவர்களிடம்) கூறும்: ‘நீங்கள் அல்லாஹ் என்று அழைத்தாலும் சரி; ரஹ்மான் என்று அழைத்தாலும் சரி; நீங்கள் எந்தப் பெயரைக் கூறியும் அழையுங்கள். அவனுக்குரிய பெயர்கள் அனைத்தும் நல்லவைதாம்’. மேலும், உமது தொழுகையில் உமது குரலை மிகவும் உயர்த்த வேண்டாம்; மிகத் தாழ்த்தவும் வேண்டாம். இவ்விரண்டுக்கும் இடையில் மிதமான தொனியைக் கடைப்பிடியும்.
17:111 கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் எத்தகையவன் எனில், அவன் யாரையும் மகனாக்கிக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் யாரும் பங்கு கொண்டவராகவும் இல்லை; யாரேனும் அவனுக்கு உதவியாளராய் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு அவன் இயலாதவனும் அல்ல! மேலும், எடுத்துரைப்பீராக, அவனுடைய பரிபூரணமான பெருமையை!
| |