وَيۡلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۙ ﴿104:1﴾
اۨلَّذِىۡ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ ۙ ﴿104:2﴾
يَحۡسَبُ اَنَّ مَالَهٗۤ اَخۡلَدَهٗ ۚ ﴿104:3﴾
كَلَّا لَيُنۡۢبَذَنَّ فِى الۡحُطَمَةِ ۖ ﴿104:4﴾
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا الۡحُطَمَةُ ؕ ﴿104:5﴾
نَارُ اللّٰهِ الۡمُوۡقَدَةُ ۙ ﴿104:6﴾
الَّتِىۡ تَطَّلِعُ عَلَى الۡاَفۡـئِدَةِ ؕ ﴿104:7﴾
اِنَّهَا عَلَيۡهِمۡ مُّؤۡصَدَةٌ ۙ ﴿104:8﴾
فِىۡ عَمَدٍ مُّمَدَّدَةٍ ﴿104:9﴾
104:1 (மக்களை நேருக்கு நேர்) இழித்துரைத்துக் கொண்டும், (முதுகுக்குப் பின்) குறை கூறிக் கொண்டும் திரிகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான்.
104:2 அவன் பொருளைச் சேகரிக்கின்றான்.
104:3 மேலும் அதனை எண்ணி எண்ணி வைக்கின்றான். அவன் கருதுகின்றான், தன்னுடைய பொருள் தன்னிடம் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்று!
104:4 அவ்வாறன்று! சிதைத்துச் சின்னாபின்னமாக்குகின்ற ஓரிடத்தில் அவன் வீசியெறியப்படுவான்.
104:5 மேலும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் அந்த இடம் எதுவென்று உமக்குத் தெரியுமா என்ன?
104:6 அது அல்லாஹ்வின் நெருப்பு; அதி உக்கிரமாக மூட்டப்பட்டிருக்கின்றது;
104:7 இதயங்கள் வரைச் சென்று பரவுகின்றது;
104:8 நிச்சயமாக அதனால் அவர்கள் சூழப்பட்டு மூடப்படுவார்கள்.
104:9 உயர உயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்பட்ட நிலையில்).
|