|
وَالۡعٰدِيٰتِ ضَبۡحًا ۙ ﴿100:1﴾
فَالۡمُوۡرِيٰتِ قَدۡحًا ۙ ﴿100:2﴾
فَالۡمُغِيۡرٰتِ صُبۡحًا ۙ ﴿100:3﴾
فَاَثَرۡنَ بِهٖ نَقۡعًا ۙ ﴿100:4﴾
فَوَسَطۡنَ بِهٖ جَمۡعًا ۙ ﴿100:5﴾
اِنَّ الۡاِنۡسَانَ لِرَبِّهٖ لَـكَنُوۡدٌ ۚ ﴿100:6﴾
وَاِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِيۡدٌ ۚ ﴿100:7﴾
وَاِنَّهٗ لِحُبِّ الۡخَيۡرِ لَشَدِيۡدٌ ؕ ﴿100:8﴾
اَفَلَا يَعۡلَمُ اِذَا بُعۡثِرَ مَا فِى الۡقُبُوۡرِۙ
﴿100:9﴾
وَحُصِّلَ مَا فِى الصُّدُوۡرِۙ ﴿100:10﴾
اِنَّ رَبَّهُمۡ بِهِمۡ يَوۡمَـئِذٍ لَّخَبِيۡرٌ ﴿100:11﴾
100:1 மூச்சிறைக்கப் பாய்ந்து ஓடுகின்றவை (குதிரைகள்) மீது சத்தியமாக!
100:2 பின்னர், குளம்புகளிலிருந்து தீப்பொறியை எழுப்புகின்ற
100:3 மேலும், அதிகாலையில் பாய்ந்து தாக்குதல் நடத்தி,
100:4 அதனால் புழுதியினைக் கிளப்பி
100:5 மேலும், ஏதேனும் கூட்டத்தின் நடுவில் நுழைந்துவிடுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக!
100:6 உண்மையில் மனிதன் தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
100:7 அவனே அதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்
100:8 மேலும், அவன் செல்வத்தின் மீது அளவு கடந்து மோகம் கொண்டிருக்கின்றான்.
100:9 மண்ணறைகளில் (அடக்கப்பட்டு) உள்ளவை அனைத்தும் வெளிக்கொணரப்படும் நேரத்தையும்;
100:10 மேலும், நெஞ்சங்களில் (மறைக்கப்பட்டு) உள்ளவை அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படும் நேரத்தையும் அவன் அறியமாட்டானா?
100:11 திண்ணமாக, அந்நாளில் அவர்களின் இறைவன் அவர்களைப் பற்றி நன்கறிந்தவனாக இருப்பான்.
| |