Image-Description

Author

MOULAVI NOOH MAHLARI – மௌலவி நூஹ் மஹ்ழரி
  • அலங்கரிப்போம் ரமளானை

    மறுமையில் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல காரணமாக இருப்பவை எவை? இறை நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் இறையில்லத்தில் தங்கும் இஃதிகாஃபின் நன்மைகள் என்ன? பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் மாதமாக ரமளான் திகழ்வதால் கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்வது எப்படி? என்பவைகளை சிறப்பாக நூலாசிரியர் மௌலவி நூஹ் மஹ்ழரி எடுத்து வைத்துள்ளார்.

     

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    100
  • அல்குர்ஆன் கூறும் அழகிய சரிதைகள்

    வாழும் தேசத்திற்கு என்ன பங்களிப்பைச் செய்திருக்கிறாய்? என்று ஒரு சரிதை உங்களிடம் கேட்கும். நாட்டில் நீதி தேவையா, வீட்டிலிருந்து துவங்கு என்று மற்றொரு சரிதை கூறும். மூன்றாவது சரிதையோ ஒழுக்க விழுமங்களைக் கடைப்பிடிக்கின்றாயா? என்று நம்மை உலுக்கிக் கேட்கும். நான்காவது நிகழ்வோ சூழல்களுக்கு அடிபணிந்து வீழ்ச்சியடையாதே என்று வீரவரலாறு கூறும்.

     

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    250
  • அன்புத் தலைவர் அழுத பொழுதுகள்

    தம் பசிக்காக, தம் காயங்களுக்காகக் கண்ணீர் சிந்தாமல், தம் அன்புத் தோழர் களின் வலிகளைக் கண்டு பொங்கியெழுந்த பொழுதுகளை, அற்ப உலகின் தேவைகளுக் காகக் கலங்காமல் மறுமையில் மாபெரும் இறைவனின் திருமுன் நிற்கும் நேரத்தை நினைத்துக் குலுங்கியழுத கண்ணீர் கணங்களை கண் முன் கொண்டு வருகிறது இந்நூல்.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    160
  • இஸ்லாமும் இங்கிதமும்

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    150
  • உனது பெயரால் உயிர் வாழ்கிறோம்

    இறைவனின் 99 திருநாமங்களில் சில பெயர்களை முன்-வைத்து இந்த நூல் பேசும் அழகு தனி. நூலாசிரியர் வரலாற்றின் அடியாழங்களுக்குச் சென்று அரிய வரலாற்று நிகழ்வுகளை ஆங்காங்கே நூல் முழுவதும் சொல்லிச் செல்கின்றார். புத்தம் புதிய வரலாற்று நிகழ்வுகளும் நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. சிறந்த பேச்சாற்றல் கொண்டியங்கும் நூலாசிரியரின் சொற்சித்திரமாகவே இந்த நூல் விரிந்துகொண்டு செல்கிறது. அது தடையற்ற வாசிப்பிற்கு துணைபுரிகிறது. உணராமல் செய்யும் ஓராயிரம் வழிபாடுகளைவிட உணர்ந்து செய்யும் சில நூறு வழிபாடுகள் சிறந்ததல்லவா? இறைவனின் பண்புகளை நாம் அறிந்து, புரிந்து, உணர்ந்து கொண்டால்தான் நமது வழிபாடுகள் உரம்பெறும். நமது வாழ்வு உயிர்பெறும். இறைவனைக் குறித்த அறிதலுக்கான முயற்சியாகத்தான் இந்த நூலை நாம் வெளியிடுகின்றோம்

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    160
  • ஒருபால் உறவு – ஆய்வும் ஆலோசனையும்

    அதிகாலை வருவதற்கு வெகுநேரமா இருக்கிறது? (ஒருபால் உறவின் விபரீதங்களை விவரித்து அது குறித்து எழும் வாதங்களை உடைத்தெறியும் நூல்)

    ஒருபால் உறவில் ஈடுபட்ட ஊரை இறைவன் தலைகீழாகப் புரட்டினான். அவர்களை அழிப்பதற்காக இறைவன் நேரம் குறித்தான். அதிகாலை நேரம். அந்த அதிகாலை நேரம் வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது? என்ற அந்தக் கேள்வி நம்மை உலுக்குகிறது. ஒருபால் உறவில் ஈடுபட்டு வருபவர்கள் திருந்தி மீள்வ-தற்கு இறைவன் எழுப்பும் இந்த வினா ஒன்றே போதுமானது.
    இது நமக்குத் தொடர்பில்லாத நூல். இதைப்படித்து என்னாவது? என்று கடந்துவிடாமல் நம் காலத்தில் நிலவும் பெரும் தீமையின் கோரத்தை உணர்வதற்காக நாம் ஒவ்வொரு-வரும் இந்த நூலை வாசிக்க வேண்டும். சமுதாயத்தைச் சீரழிக்கக் கிளம்பியுள்ள இந்த புற்று நோய்க் கட்டிகளை நாம் அகற்றுவதற்கான மருந்துதான் இந்த நூல். மனித இனத்தையே நாசப்படுத்தும் இந்தக் கொடும் அரக்கனுக்கு எதிராக நாம் ஏந்தும் ஆயுதம்தான் இந்த நூல். அந்த வகையில் ஒவ்வொரு-வரும் இந்த நூலை வாசிப்ப-துடன், மக்களுக்கு இத்தீமை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் வேண்டும்.

    Author: V.S. MOHAMMED AMEEN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    70
  • சிறுபான்மை முஸ்லிம்களுக்கான சட்டம்

    ஷரீஅத்தின் – இஸ்லாமிய சட்டங்கள் அடிப்படைகள், கோட்பாடுகள் எக்காலத்திற்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை, மாற்றத்திற்கு உள்ளாக்க முடியாதவை. அதே வேளை ஷரீஅத் ஒவ்வொரு மனிதனுடைய சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளும். மார்க்கத்தைப் பின்பற்றுவதில் அவனுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்காது. தாங்க இயலாத சுமையை அவன்மீது சுமத்தாது.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    130
  • சுவனம் நமது வீடுகளில்

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    150
  • செல்வந்தர் நபிகள் நாயகம் (ஸல்)

    மேலும், அவன் (இறைவன்) உம்மை (நபிகளாரை) ஏழையாய்க் கண்டான்; பிறகு செல்வராய் ஆக்கினான். (திருக்குர்ஆன் 93:8)

     

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    230
  • நபித்தோழர்களின் பள்ளிக்கூடம்

    நபித்தோழர்களின் வரலாற்றையும் சமகால வரலாற்றையும் ஒப்பிடும்போதுதான் நபித்தோழர்கள் எவ்வளவு உன்னத நிலையில் வாழ்ந்துள்ளனர் என்பதை இந்த நூல் நமக்குக் காட்சிப்படுத்துகிறது.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    200
  • நாகரிகத்தின் தந்தை உமர் (ரலி)

    உமரே! நீர் சத்தியத்தை ஏற்றபோது
    சர்தார் நபியின் வதனம் மலர்ந்தது.

    உமரே! எத்தனையோ முறை
    உமது வாக்கே வஹியாக இறங்கின!

    உமரே! எத்தனையோ முறை
    உமது கூற்றே உண்மையாக இருந்தது!

    உமரே! உமது வரலாறு எங்கள்முன் பிரகாசமாக இருக்கிறது.
    இல்லையேல், கற்பனை கதாபாத்திரம் என்றே
    உம்மை நாங்கள் கருதியிருப்போம்.

     

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    300
  • நெஞ்சுக்கு நிம்மதி

    இன்றைய அதிநவீன உலகம் அறிவியல் தொழில்-நுட்பத்தில் பெருமளவு முன்னேறி வருகிறது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பல மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை-யும் மாறுதல்களையும் ஏற்படுத்தி வருகின்றன. தனிமனித வருமானம் அதிகரித்து வருகிறது. பணமும் வசதி வாய்ப்பு-களும் மனித வாழ்வை சொகுசானதாக ஆக்கியுள்ளன. ஆனால், இத்தனை வசதிகளையும் பெற்ற பிறகும்கூட மனிதன் ஏதோவொன்றைத் தொலைத்துவிட்டு நிற்கின்றான். அதைத் தேடித் தேடி அங்கும் இங்கும் திரிகின்றான். அவனது கால்கள் ஓய்ந்ததே தவிர அதனைக் கண்டெடுக்க முடிய-வில்லை. அது என்ன? அதுதான் மனஅமைதி. அமைதியான, மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு இன்று அரிதாகிக் கொண்டே வருகிறது. எத்தனை எத்தனை பிரச்னைகள் நாள்தோறும் வெடிக்கின்றன? அதற்கான தீர்வு எதுவும் இன்றி, மனஅமைதி இழந்து மனிதர்கள் தவித்து வருகின்றனர். பணத்தால் அதனைப் பெற முடியாது. விஞ்ஞானம் அதனைப் பெற்றுத் தராது. பிறகு எவ்வாறு அது சாத்திய-மாகும்? இதனைத்தான் நெஞ்சுக்கு நிம்மதி என்கிற இந்நூல் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. மனஅமைதியைத் தேடியலையும் உள்ளங்கள் இதனைக் கட்டாயம் வாசிக்க வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் நூலகங்களிலும் அவசியம் இந்நூல் இடம்பெற வேண்டும் என்பது எங்களின் வேணவா.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST
    240
  • பேசத் தயங்கும் கருப்பொருள் காதல்

    முஸ்லிம்கள் பேசத் தயங்கும் கருப்பொருள்களில் ஒன்று – காதல்.

    காதல் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் என்ன?

    இஸ்லாம் காதலை வெறுக்கிறதா?

    காதலிப்பது என்ன அவ்வளவு பெரிய பாவமா?

    எது காதல்? எது காதல் இல்லை?

    காதலுக்குக் கண் இல்லை என்பது உண்மையா?

    கண் பேசும் காதல் மொழி எப்படி இருக்கும்?

    இறைத்தூதர்களின் வாழ்வில் காதல் இருந்ததா?

    நேசித்தத் துணையையே மணமுடிக்க என்ன வழி?

    வாருங்கள் வாசிப்போம்…

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    185
  • முன்மாதிரி முஸ்லிம் இளைஞன்

    இளமை முதல் முதுமைவரை மனிதவாழ்வில் பலமும் பலவீனமும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். குழந்தைப் பருவம் பலவீனமானது. வாலிபத்தில் மனிதன் பலசாலியாக மாறுகின்றான். வயோதிகத்தில் மீண்டும் பலவீனமானவனாக மாறுகின்றான். வாழ்வில் இருமுறை பலவீனமானவனாக இருக்கும் மனிதன், தன்வாழ்வில் ஒரேயொரு முறைதான் பலசாலியாக இருக்கின்றான். அதுதான் அவனது இளமைப்பருவம், ஆகவேதான், இந்த இளமை கொண்டாடப்படுகிறது.

    இளைஞர்களே! வாசிக்கும் பழக்கத்தை வார்த்தெடுங்கள். வாசிக்கும் இன்றைய இளம் தலைமுறைதான் நாளைய வழிகாட்டும் தலைமுறையாக மாறும் என்பதை மறந்து விடாதீர்கள். வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களால்தான் வாழ்க்கையில் முக்கிய முடிவெடுக்கும் சிந்தனைத் தெளிவு கொண்டவர்களாக இருக்க முடியும்.

    ஒரு முன்மாதிரி முஸ்லிம் இளைஞன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. இஸ்லாமிய வரலாற்றில் செயற்கரிய செயல்களைச் செய்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருந்தபோதுதான் அவற்றைச் செய்துள்ளனர் என்பது இந்த நூல் சொல்லித் தரும் முக்கியச் செய்தி.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    180
  • முஹம்மத் நபிகளார் (ஸல்) முகம் சிவந்த தருணங்கள்

    எப்போதும் புன்முறுவல் பூத்த முகத்துடன் இருந்த, இருக்கச் சொன்ன நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் கோபத்தால் முகம் சிவந்தவர்களாகத் தமது தோழர்களைக் கண்டித்துச் சீர்படுத்தினார்கள். அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள் என்ன என்பதை வரலாற்று நிகழ்வுகளோடு எடுத்துரைக்கிறது இந்நூல்.

     

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    175
  • வரலாறு படைத்த பெண்கள் – மௌலவி நூஹ் மஹ்ழரி

    இஸ்லாத்துடன் முஸ்லிம் பெண்களுக்கான தொடர்பு என்பது வெறும் புர்கா அணிவது மட்டுமே என்று அனேகமானவர்கள் கருதுகின்றனர். ஆயினும் உண்மையோ அதற்கு நேர்மாறாக உள்ளது. இஸ்லாம் என்பது உயர்ந்த விழுமியங்களாலும் சிறந்த சிந்தனைகளாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு மார்க்கம். அது சமூகத்தளத்தில் பெண்களுக்கென தனிப் பங்களிப்பை வழங்கியுள்ளது.
    வேறெந்த மதமும் வழங்காத சகல உரிமைகளையும் இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளது. இஸ்லாத்தைக் குறித்து தரக்குறைவாக விமர்சிப்பதற்கும், அபாண்டங்களை அள்ளி வீசுவதற்கும் பெண்கள் குறித்த இந்த அறியாமையையே தங்களுக்கான ஆயுதமாக அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
    இது பெண்களுக்கான நூல் மட்டுமல்ல, மாறாக ஆண்களுக்குமான நூலும் கூட. இஸ்லாமிய மார்க்கம் நமது தாயை, நமது சகோதரியை, நமது மகளை எவ்வளவு தூரம் கண்ணியப்படுத்தியுள்ளது என்பதை நாம் தெரிந்துகொண்டால்தானே அதனை பிறருக்கும் எடுத்துச் சொல்லமுடியும்.
    அந்த அடிப்படையில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள் மற்றும் உயரிய தகுதி குறித்து வரலாறு படைத்த பெண்கள் எனும் இச்சிறிய நூல் பேசுகிறது.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    100
  • வாழ்க்கை – தொட்டுவிடும் தூரம்தான்!

    காசேதான் கடவுளடா என்று வாழ்ந்தால்.. வசதியான வாழ்வு மட்டுமே லட்சியம் என்று மனம் போன போக்கில் வாழ்ந்தால்… நிம்மதி எங்கிருந்து கிடைக்கும்? ஒருநாளும் கிடைக்காது. இறை வழிகாட்டுதல் இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்ந்தால்; சாதாரண மனிதன் காட்டும் பாதைகள் எவ்வாறு பயன் தரும்..? பயம்தான் வரும்!

    மனிதனின் பயத்தை போக்கி அவனை அழிவில்லா, அளவில்ல ஆனந்த வாழ்வின் பக்கம் வழிகட்டுகிறது இந்நூல்.

     

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    150