Author
KHURRAM MURAD – குர்ரம் முராத்
-
-
-
-
-
-
-
-
-
இஸ்லாமிய இயக்கம் ஏன்? எதற்கு?
இஸ்லாமிய இயக்கம் என்றால் என்ன?
அதன் நோக்கும், போக்கும் எவ்வாறு இருக்க வேண்டும்? அது அடைய வேண்டிய இலக்கு எது? அதற்கான பாதை எது?
‘சத்தியத்திற்குச் சான்று பகர்தல்’ என்றால் என்ன? அது எவ்வாறு கடமையாகிறது?
அதில் அலட்சியமாக இருப்பதனால் ஏற்படும் விளைவு என்ன?
இஸ்லாமிய இயக்கம் இன்றைக்கு ஏன் தேவைப்படுகிறது?
-போன்ற பல அடிப்படைக் கேள்விகளுக்கு தமக்கே உரிய பாணியில் விளக்கம் தருகிறார், குர்ரம் முராத் அவர்கள்.Author: KHURRAM MURAD
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சமுதாயத்தின் எதிர்காலமும் பள்ளிவாசல் இமாம்களும்
இந்த இனிய நூல் சமுதாயத்தின் மையமாக இருக்கின்ற பள்ளிவாசலின் முக்கியத்துவத்தையும் தனிச்சிறப்பையும் சொல்லும் நூல். பள்ளிவாசல் இமாம்களின் அந்தஸ்தையும் பொறுப்புகளையும் விவரிக்கும் நன்னூல்.
Author: KHURRAM MURAD
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் பாதையில்… வாழ்வியல் பயணம்!
திருக்குர்ஆன் ஒரு வாழ்வியல் பொக்கிஷம். மனிதகுலம் முழுவதற்குமான சொத்து. அள்ளக்குறையாத அறிவுக் கருவூலம். இந்நூல் திருக்குர்ஆன் குறித்த நூல்களில் தனித்துவம் வாய்ந்தது. திருக்குர்ஆன் நபித்தோழர்களிடம் வானளவு மாற்றங்களை நிகழ்த்திக்காட்டியது. காரணம் அவர்கள் திருக்குர்ஆனை அணுகிய விதமும் முறையும்தான். அவர்கள் திருக்குர் ஆனை புத்தகமாகப் பார்க்கவில்லை. இறைவனின் குரலாகக் கேட்டார்கள். இறைக்கட்டளையாக உணர்ந்தார்கள். நபித்தோழர்கள் அணுகிய அதே விதத்தில் இன்று நாம் அணுகி-னாலும் அதே மாற்றத்தை நம்முள் விதைக்க திருக்குர்ஆன் தயாராக இருக்கிறது. நாம் தயாராக இருக்கின்றோமா என்பதுதான் கேள்வி. இந்தநூல் அதற்கான வழிகாட்டுதல்களையும் திட்டங்களை-யும் நுட்பமாகச் சொல்கிறது. அறிஞர் குர்ரம் முராத் குர்ஆனிய மனிதர். குர்ஆனை இவர் வெறுமனே வாசிக்காமல் சுவாசித்திருக்கின்றார். அவரின் உயிர் மூச்சே இந்தக்குர்ஆன்தான். இந்த நூலை ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க-வேண்டும். அதனைப் பின்பற்றி திருக்குர்ஆனை ஓதவேண்டும். இதனை வாசிப்பதற்கு முன் நாம் குர்ஆனை ஓதியதற்கும், வாசித்தபிறகு திருக்குர்ஆனை ஓதுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசத்தைக் கண்டிப்பாக உணர முடியும்.Author: KHURRAM MURAD
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பெருமானார் (ஸல்) தரும் பரிசு
மனிதகுலத்திற்கு ஓர் அருட்கொடையாக வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மணிமொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய மலர்ச்செண்டு இது!Author: KHURRAM MURAD
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
வான்மறைச் செல்வம்
குர்ஆன் கூறுவது என்ன? தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குர் ஆன் திருவசனங்களின் அழகிய சிறுதொகுப்பு!குர்ரம் முராத்Author: KHURRAM MURAD
Publisher: ISLAMIC FOUNDATION TRUST