
Author
DR. K.V.S. HABEEB MOHAMMED – டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
-
அண்ணலாரின் ஆளுமைகள் – அழகிய குணநலன்கள் | தலைமைத்துவப் பண்புகள் | மனிதநேய மாண்புகள்
தலைமைத்துவப் பண்புகள், ஆளுமைப் பண்புகள், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள விரும்புவோருக்கு இது ஓர் அரிய வழிகாட்டி நூல்.மனித உறவுகள் எப்படி இருக்கவேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? நேரத்தை எப்படி திட்டமிட வேண்டும்? என்பதற்கு நபிகளாரின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.நபிகளாரின் வாழ்க்கை வரலாறு பல நுாறு ஆண்டுகளாக உலகின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. தமிழிலும் நபிகளாரின் பல வரலாற்று நூல்கள் உண்டு. ஆனால், நபிகளாரின் ஆளுமைப் பற்றிய நூல்கள் மிகக் குறைவே. அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அவள் (பெண்ணியப் பார்வையில்)
பெண்ணியம், உண்மையில் பெண்களுக்கு முழுமையான விடுதலையைத் தரவில்லை என்பதை இன்றைக்குப் பெண்ணியவாதிகளே உணர்ந்து கொண்டார்கள். தாம் உருவாக்கிய கோட்பாட்டைத் தாமே விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது வேறொரு திசையில் பெண்ணியத்துக்கு விளக்கம் தேடும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் இஸ்லாம் கூறும் பெண்ணியம் தகத்தகாயப் பேரொளியுடன் வருகிறது. அமெரிக்காவில் முதல் பெண்ணியக் குரல் எழுந்தது 1848 இல்தான்! ஆனால் ஏழாம் நூற்றாண்டிலேயே பெண்ணியக் குரல் மண்ணில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அந்த முழக்கத்தை எழுப்பியவர் பெண்ணோ ஆணோ அல்ல. மாறாக, அந்த மகத்தான முழக்கத்தை முன்வைத்தவன் இறைவன்! ஆம் பெண்ணியல் நோக்கில், பெண்ணியல்பு நோக்கில் அவளுக்குத் தேவையான அத்தனை உரிமைகளையும் இறைவன் வழங்கினான். அந்த உரிமைகளின் பட்டியல் மிக நீளமானது. போராடாமலே பெண் இனத்துக்குக் கிடைத்த பெரும் புதையல் அது!
நாடறிந்த நல்லிணக்கச் சிந்தனையாளர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் காலம் கருதி இந்த நூலை இயற்றித் தந்துள்ளார்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இதயங்களை வெல்வோம்
நபிகளார் கொண்டு வந்த செய்தியை அவரது தோழர்களும், அதற்குப் பின்னர் வந்தவர்களும் தொடர்ந்து பல சிரமங்களைத் தாங்கியும், தடைகளைத் தாண்டியும் செய்து வந்தனர். இதன் காரணமாக இஸ்லாம் உலகெங்கும் பரவி உலக மக்களில் நான்கில் ஒரு பகுதியினரைத் தன் பால் கவர்ந்துகொண்டது.
நாள்கள் செல்லச் செல்ல அழைப்புப் பணி மீது முஸ்லிம்-களுக்கு இருந்த ஆர்வம் குறைந்து அழைப்புப் பணியின் அவசியத்தை மறந்தனர். சிலர், முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்ந்தால் போதும்; முதலில் அவர்களைத் திருத்துவதற்கே முன்னுரிமை தரவேண்டும் என்று சொல்லி அழைப்புப் பணியைப் புறந்தள்ளினர். இதன் விளைவாக இஸ்லாத்தின் வளர்ச்சி தடைபட்டது. இஸ்லாத்தைப் பற்றி தவறான செய்திகள் பரவி முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் மீதான வெறுப்பும் பகையும் வளர்ந்து மேலும் அவர்களுக்கு ஹிதாயத் & நேர்வழி கிடைக்காமலேயே போய்விட்டது.
இந்த நிலையில் அழைப்புப் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மீண்டும் முஸ்லிம்களில் சில தனிமனிதர்களிடமும், சில அமைப்பு களிடமும் உருவாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ள அழைப்பாளர் களுக்கு அழைப்புப் பணியின் தேவையை மட்டுமல்ல, அதன் முறைகளையும் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இத்தேவையை உணர்ந்தே இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஆர்வமில்லாதவர்களுக்கும் ஆர்வமூட்டும் வகையிலும், அழைப்புப் பணி தேவையில்லை என்று வாதிடுவோர்க்கு உரிய விளக்கம் அளிக்கும் வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இந்திய முஸ்லிம்கள் இனி செய்ய வேண்டியது என்ன?
இன்று முஸ்லிம் உலகம் நெருக்கடியான, சோதனையான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கின்றது. உலக அளவில் அமெரிக்க, சியோனிச, ஏகாதிபத்தியவாதிகள், நமது நாட்டளவில் வலதுசாரிகள், வகுப்புவாதிகள், முஸ்லிம் வெறுப்பாளர்கள் ஆகியோரின் பன்முகத் தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் ஆளாகின்றனர்.இத்தகைய சூழலில் உணர்ச்சிவசப்படாமலும், அச்சப்படாமலும், நம்பிக்கை இழக்காமலும், தோல்வி மனப்பான்மையில் துவளாமலும், இறைவனின் மீதும் இறை மார்க்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு விவேகத்தின் அடிப்படையில் ஷரீஅத்திற்கு உட்பட்ட முடிவுகளை எடுத்து முஸ்லிம் சமுதாயம் செயல்பட்டால் நிலைமைகள் மாறும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இஸ்லாமிய எதிர்ப்பலைகளை எதிர்கொள்வது எப்படி?
ஊடகங்களின் தேவை குறித்தும், இஜ்திஹாதின் (நவீன பிரச்னைகளுக்கு இஸ்லாமிய அடிப்படையிலான ஆய்வு) கதவைத் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், சமுதாய ஒற்றுமை குறித்தும் டாக்டர் அவர்கள் முன்வைத்துள்ள கருத்துகள் மார்க்க அறிஞர்களின், முஸ்லிம் அமைப்புகள்-கட்சிகள்-இயக்கங்களின் சிந்தனைக்கும் விவாதத்துக்கும் உரியவை.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் சில நிமிடங்களில்
வாழ்க்கையில் இலட்சியம் என்பது படைத்தவனை வணங்கி வாழ்வதும் படைப்பினங்களுக்கு வழங்கி வாழ்வதும் ஆகும். இவை இரண்டும் இறைக்கட்டளைகளே!
இறைக்கட்டளைகளுக்காக வாழ்வதே, வாழ்வின் இலட்சியமாகும்.
இந்த உயர்ந்த இலட்சியத்தைக் கொண்ட இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன. பெரும்பாலான செய்திகள் எதிர்மறையாகவே உள்ளன. எனவே உண்மையை அறியும் ஆர்வம் பலருக்கு எழுந்துள்ளது. பரபரப்பான இக்காலகட்டத்தில் குறைந்த நேரத்தில் செய்திகளை அறிய மக்கள் விரும்புகின்றனர். எனவே சுருக்கமாக ஆனால் அதே சமயத்தில் தெளிவாகவும், புரியும்படியும், ஆதாரப்பூர்வமாகவும் இருக்கவேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
இந்த விருப்பத்தின் அடிப்படையில் இஸ்லாத்தை எளிய முறையில், சுருக்கமாக, சிந்திக்கின்ற விதத்தில் நாடறிந்த நல்ல சிந்தனையாளர், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் தொகுத்தளித்துள்ளார்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் தாக்கப்படும் போது
இஸ்லாத்தின் மீது வசைமாரி பொழியப்படும் போது முஸ்லிம்களின் உயிர் – உடைமைகள் அழிக்கப்படும் போது நம்முடைய எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும் என்பதைக் கூறும் நூல்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
எங்கே அமைதி
“இஸ்லாம் எனும் பெயருக்கு அமைதி என்று பொருள். எனவே, அமைதியைப்பற்றி இஸ்லாம் விரிவாகப் பேசுகிறது. தனிமனிதனில் தொடங்கி சமூகம், பொருளா தாரம், அரசியல் என மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமைதியை நிலைநாட்டுவது பற்றி இஸ்லாம் விளக்குகிறது. இவை வெறும் தத்துவங்கள் அல்ல, மாறாக ஏற்கெனவே செயல்படுத்திக் காட்டப் பட்ட கொள்கைகள்; இன்றும் செயல்படுத்தப்பட்டு வரும் கொள்கைகள்” என முன்னுரையில் டாக்டர் கே.வி.எஸ். மொழிவதை மெய்ப்பிக்கும் நூல்
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
கேள்வி பிறந்தது இன்று – 1
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
கேள்வி பிறந்தது இன்று – 2
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
திருமணத்தில் அநீதி, அநாச்சாரம், விரயம்
திருமணம் என்பது இறைவன் செய்த ஏற்பாடாகும். இதனால்தான் பெருமானார் (ஸல்) அவர்கள், ‘‘திருமணம் எனது வழிமுறை. இதைப் புறக்கணிப்போர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்றார்கள். திருமணத்தை இஸ்லாம் ஒரு சடங்காக மட்டுமே பார்க்கவில்லை. அதை ஒரு வணக்கமாகவும், இறைநம்பிக்கையாகவும் வைத்து அழகு பார்க்கிறது.
இஸ்லாம் திருமணத்தை வெளிப்படையாகவும் எளிமையாகவும் நடத்த வேண்டும் என்று எடுத்துச் சொல்கின்றது.
‘செலவில் குறைந்த திருமணமே அபிவிருத்தியில் நிறைந்ததாக அமையும்’ என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
இவ்வளவு சிறப்புமிக்க திருமணத்தை இன்று முஸ்லிம்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான வழிகளில் நடத்தி தீமையின் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தத் தீமையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுடன் அதற்குரிய தீர்வுகளையும் தர வேண்டுமென்ற நோக்கத்தில் நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் ‘திருமணத்தில் அநீதி, அநாச்சாரம், விரயம்’ என்ற தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளார். -
தொழிலாளி – முதலாளி உரிமைகள் – கடமைகள் – உறவுகள்
சமூக நீதி என்பது இட ஒதுக்கீட்டைத் தாண்டி பல பரிமாணங்களைக் கொண்டது. சமூகத்தில் வாழும் அனைவருக்கும் சமமான சமூக, அரசியல், பொருளாதார உரிமை கிட்டுவதே சமூக நீதியாகும். கணவன் – மனைவி, பெற்றோர் – பிள்ளைகள், உறவினர்கள், அண்டை வீட்டினர், நலிவுற்ற பிரிவினர் ஆகிய அனைவருக்கும் உரிமைகள் கிட்ட வேண்டும். ஏழைக்கும் உரிமை உண்டு, பணக்காரனுக்கும் உரிமை உண்டு. தொழிலாளி – முதலாளி இருவருக்கும் உரிமை உண்டு. ஆள்வோர் – ஆளப்படுவோர் இருவருக்கும் உரிமைகள் உண்டு. உரிமைகள் ஒரு வழிப் பாதையாய் இருக்கக்கூடாது. ஒருவரின் உரிமை மற்றவருக்குக் கடமையாகி-விடுகிறது. உரிமையும் கடமையும் இணைந்தே வர வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே சமூகத்தில் அமைதி நிலவும்.இந்த நூலில் தொழிலாளி – முதலாளி உரிமைகள் கடமைகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் உரிமை குறித்து 19ஆம் நூற்றாண்டிலிருந்துதான் பேசப்பட்டு வருகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொழிலாளி – முதலாளி உரிமைகள், கடமைகள், உறவுகள் பற்றிய அடிப்படைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. இஸ்லாத்தின் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டால் போராட்டங்களுக்கோ ஆர்ப்பாட்டங்களுக்கோ அவசியம் எழாது. இந்தச் செய்தியை மிகவும் ஆழமாகப் பதிவு செய்கிறது இந்நூல்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வரதட்சணை எனும் அவமானம்
குடும்பத்தின் அமைதியையும் சமுதாயத்தின் நல்லொழுக்கத்தையும் சீர்குலைத்துக் கோரத் தாண்டவமாடும்வரதட்சிணை எனும் கொடுமையை எப்படி ஒழிப்பது? அதன் ஆணிவேரையே அசைத்துப் பிடுங்கி எறிய வழிகாட்டும் நூல் இது…!
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வேதவரிகளும் தூதர் மொழிகளும் (பாகம் – 1)
Book Summary of வேதவரிகளும் தூதர் மொழிகளும் (Ordinary)
திருக்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் எளிய நடையில் தொகுக்கப்பட்டுள்ளன. இறைவன், மனிதன், நற்பண்புகள், தீயகுணங்கள், கல்வி, அரசியல், பொருளியல், சமூகவியல், பெண்கள் என 24 தலைப்புகளில் தொகுக் கப்பட்டுள்ளன.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வேதவரிகளும் தூதர் மொழிகளும் (பாகம் – 2)
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வேதவரிகளும் தூதர்மொழிகளும் (பாகம் – 3)
Dr. K.V.S. ஹபீப் முஹம்மத்
திருக்குர்ஆன் ஒரு பொறியியல் வல்லுநரின் வரைபடத்திற்கு (Blue Print) ஒப்பானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் வரைபடத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பானது. அடிப்படைகளைக் குர்ஆன் வழங்குகிறது. விரிவான விதிமுறைகளை நபி வழங்குவார். இந்தக் கோட்பாடுகள் நபிகள் நாயகம் காலத்திலேயே நிறைவேற்றப்பட்டு விட்டன. அறியாமையிலும் ஆதிக்க உணர்வுகளிலும் மனித உரிமை மீறல்களிலும் சமூக அரசியல் பொருளாதாரச் சுரண்டல்களிலும் மூழ்கியிருந்த சமூகத்தை 23 ஆண்டுகளுக்குள் இஸ்லாம் மாற்றி அமைத்தது. பின்னர் உலகெங்கும் பரவி அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது; ஏற்படுத்தி வருகிறது.
இறைவாக்கு ‘குர்ஆன்’ என்றும், நபிகளாரின் வாழ்வும் வாக்கும் ‘ஹதீஸ்’ என்றும் அழைக்கப்படும். சில ஆயிரம் பக்கங்களில் விரிந்து கிடக்கும் இஸ்லாமியக் கருத்துகள் எல்லாரும் அறிந்திடும் வண்ணம் சுருக்கமாக இந்த நூலில் தரப் பட்டுள்ளன. முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதார்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தனித் தனித் தலைப்புகளின்கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. சொற்பொழிவு ஆற்றுவோருக்கும் கட்டுரைகள் எழுதுவோருக்கும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்து இஸ்லாத்தின் பார்வை என்ன என்பதை எளிதில் அறியும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் முதல் பகுதி 25 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு மக்களின் பேராதரவைப் பெற்றது. பல பதிப்புகளைக் கண்டது.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST