
Author
DR. K.V.S. HABEEB MOHAMMED – டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
-
Let us Know Hijab
Hijab is now hotly debated all over India. Different people have diverse views about it.
What is the reason? Is it because of sheer ignorance? Or is it because of malice and ulterior motives of degrading Islam and Muslims?
The list of doubts and questions is endless.
This prompted the IFT to release a booklet on this issue. And this booklet in your hands is the outcome of that prompt endeavour.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அகிம்சை இஸ்லாமியக் கண்ணோட்டம்
“அகிம்சை, அகிம்சை” என்று சொல்வதால் மட்டும் வன்முறை ஒழிந்துவிடாது. அன்பு பற்றி உரத்துப் பேசுவதாலும் அநீதிகள் அகன்று விடா. கொஞ்சம் விழிகளை அகலத் திறந்து பார்க்க வேண்டும். தம்மைச் சுற்றி என்னென்ன கொடுமைகள் நிகழ்கின்றன எனப் பார்த்து அவற்றைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணலாரின் ஆளுமைகள் – அழகிய குணநலன்கள் | தலைமைத்துவப் பண்புகள் | மனிதநேய மாண்புகள்
தலைமைத்துவப் பண்புகள், ஆளுமைப் பண்புகள், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள விரும்புவோருக்கு இது ஓர் அரிய வழிகாட்டி நூல்.மனித உறவுகள் எப்படி இருக்கவேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? நேரத்தை எப்படி திட்டமிட வேண்டும்? என்பதற்கு நபிகளாரின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.நபிகளாரின் வாழ்க்கை வரலாறு பல நுாறு ஆண்டுகளாக உலகின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. தமிழிலும் நபிகளாரின் பல வரலாற்று நூல்கள் உண்டு. ஆனால், நபிகளாரின் ஆளுமைப் பற்றிய நூல்கள் மிகக் குறைவே. அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணலாரின் பலதார திருமணங்கள் – ஓர் அலசல்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தார். எந்த வயதில் அப்பெண்களை மணந்தார்? எதற்காக மணந்தார்? அவற்றிற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? அந்தப் பெண்கள் கண்ணியரா? வயது முதிர்ந்தவர்களா? விதவைகளா? என்பதை அறிய வேண்டும். அவர்கள் எந்தப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த கேள்விகளுக்கு இந்த நூல் விடை தரும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அநாதைகள் விதவைகள் ? ஆதரவற்றவர்களை அரவணைப்போம்! (மனித உறவுகள் – 3)
இன்றைய நவநாகரீமான உலகில் இவர்களின் உரிமைகளும் நீதியும் மறுக்கப்பட்டு தெருவோரங்களில் சுற்றித் திரிபவர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த சூழலில் நமது கடமை என்ன? நமது செயற்பாடுகள் எப்படியிருக்க வேண்டுமென்பதை மனதில் உரைக்கும் வண்ணம் நூலாசிரியர் டாக்டர். கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் ‘அநாதைகள் – விதவைகள், ஆதரவற்றவர்களை அரவணைப்போம்’ என்ற இந்த நூலை எழுதியுள்ளார்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அமைதி அடைந்த ஆன்மா… (உளத்தூய்மை வழிகாட்டி)
நண்பனைப் போல் நடித்து ஏமாற்றுவது, குடும்பச் சூழ்நிலை, வளாகச் சூழ்நிலை, தீய நண்பர்களின் பழக்கம், சமூகச் சூழ்நிலைகள் என்பவை மூலம் ஷைத்தான் தனது காரியத்தில் வெற்றிபெற முயற்சிக்கின்றான். அதிலிருந்து நாம் விடுபடுவது எப்படி என்பதையும் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் இந்நூலில் எடுத்துரைத்துள்ளார்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அவள் (பெண்ணியப் பார்வையில்)
பெண்ணியம், உண்மையில் பெண்களுக்கு முழுமையான விடுதலையைத் தரவில்லை என்பதை இன்றைக்குப் பெண்ணியவாதிகளே உணர்ந்து கொண்டார்கள். தாம் உருவாக்கிய கோட்பாட்டைத் தாமே விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது வேறொரு திசையில் பெண்ணியத்துக்கு விளக்கம் தேடும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் இஸ்லாம் கூறும் பெண்ணியம் தகத்தகாயப் பேரொளியுடன் வருகிறது. அமெரிக்காவில் முதல் பெண்ணியக் குரல் எழுந்தது 1848 இல்தான்! ஆனால் ஏழாம் நூற்றாண்டிலேயே பெண்ணியக் குரல் மண்ணில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அந்த முழக்கத்தை எழுப்பியவர் பெண்ணோ ஆணோ அல்ல. மாறாக, அந்த மகத்தான முழக்கத்தை முன்வைத்தவன் இறைவன்! ஆம் பெண்ணியல் நோக்கில், பெண்ணியல்பு நோக்கில் அவளுக்குத் தேவையான அத்தனை உரிமைகளையும் இறைவன் வழங்கினான். அந்த உரிமைகளின் பட்டியல் மிக நீளமானது. போராடாமலே பெண் இனத்துக்குக் கிடைத்த பெரும் புதையல் அது!
நாடறிந்த நல்லிணக்கச் சிந்தனையாளர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் காலம் கருதி இந்த நூலை இயற்றித் தந்துள்ளார்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழகிய அண்டை வீடு (மனித உறவுகள் – 1)
அண்டைவீட்டார் என்றால் யார்? அவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன? அவர்களோடு நாம் எப்படி யெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது? என பல்வேறு கேள்வி களுக்கு விடைகளையும் பன்மை சமூகமாக வாழும் நாம் நம் தேசத்தில் ஜாதி மதம் மொழிகளை எல்லாம் தாண்டி தன் அண்டை வீட்டார்களோடு ஒற்றுமையோடும் மனிதநேயத்துடன் எப்படி வாழ்வது என்பதையும் இந்நூல் பேசுகிறது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழிக்கும் ஆணவம் (உளத்தூய்மை- 2)
குடும்பத்தின் அமைதி குலைந்திருக்கிறதா? அங்கு ஆணவம் புகுந்து விட்டது என்று தெரிந்து கொள்ள முடியும். குடும்பம் மட்டுமல்ல சமூகத்திலும் குழப்பங்களும் சிக்கல்களும் உருவாகியிருக்கிறது என்றால் ஆணவம் தனது வேலையைச் செய்யத் தொடங்கி விட்டது என்றே அர்த்தம்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அறிவோம் ஹிஜாப்
ஹிஜாப் தனிப்பட்ட மனிதர்களின் நிலைப்பாட்டை தாண்டி ஒரு தேசப் பிரச்சினையாக உருவாவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ஹிஜாப் பற்றிய விளக்கங்களையும் தெளிவுகளையும் நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தவறான கருத்துக்களை அழித்து ஹிஜாப் பற்றிய உண்மை நிலையை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதத்தில் “அறிவோம் ஹிஜாப்” என்ற இச்சிறு நூலை டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இதயங்களை வெல்வோம்
நபிகளார் கொண்டு வந்த செய்தியை அவரது தோழர்களும், அதற்குப் பின்னர் வந்தவர்களும் தொடர்ந்து பல சிரமங்களைத் தாங்கியும், தடைகளைத் தாண்டியும் செய்து வந்தனர். இதன் காரணமாக இஸ்லாம் உலகெங்கும் பரவி உலக மக்களில் நான்கில் ஒரு பகுதியினரைத் தன் பால் கவர்ந்துகொண்டது.
நாள்கள் செல்லச் செல்ல அழைப்புப் பணி மீது முஸ்லிம்-களுக்கு இருந்த ஆர்வம் குறைந்து அழைப்புப் பணியின் அவசியத்தை மறந்தனர். சிலர், முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்ந்தால் போதும்; முதலில் அவர்களைத் திருத்துவதற்கே முன்னுரிமை தரவேண்டும் என்று சொல்லி அழைப்புப் பணியைப் புறந்தள்ளினர். இதன் விளைவாக இஸ்லாத்தின் வளர்ச்சி தடைபட்டது. இஸ்லாத்தைப் பற்றி தவறான செய்திகள் பரவி முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் மீதான வெறுப்பும் பகையும் வளர்ந்து மேலும் அவர்களுக்கு ஹிதாயத் & நேர்வழி கிடைக்காமலேயே போய்விட்டது.
இந்த நிலையில் அழைப்புப் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மீண்டும் முஸ்லிம்களில் சில தனிமனிதர்களிடமும், சில அமைப்பு களிடமும் உருவாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ள அழைப்பாளர் களுக்கு அழைப்புப் பணியின் தேவையை மட்டுமல்ல, அதன் முறைகளையும் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இத்தேவையை உணர்ந்தே இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஆர்வமில்லாதவர்களுக்கும் ஆர்வமூட்டும் வகையிலும், அழைப்புப் பணி தேவையில்லை என்று வாதிடுவோர்க்கு உரிய விளக்கம் அளிக்கும் வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இந்திய முஸ்லிம்கள் இனி செய்ய வேண்டியது என்ன?
இன்று முஸ்லிம் உலகம் நெருக்கடியான, சோதனையான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கின்றது. உலக அளவில் அமெரிக்க, சியோனிச, ஏகாதிபத்தியவாதிகள், நமது நாட்டளவில் வலதுசாரிகள், வகுப்புவாதிகள், முஸ்லிம் வெறுப்பாளர்கள் ஆகியோரின் பன்முகத் தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் ஆளாகின்றனர்.இத்தகைய சூழலில் உணர்ச்சிவசப்படாமலும், அச்சப்படாமலும், நம்பிக்கை இழக்காமலும், தோல்வி மனப்பான்மையில் துவளாமலும், இறைவனின் மீதும் இறை மார்க்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு விவேகத்தின் அடிப்படையில் ஷரீஅத்திற்கு உட்பட்ட முடிவுகளை எடுத்து முஸ்லிம் சமுதாயம் செயல்பட்டால் நிலைமைகள் மாறும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இஸ்லாமிய எதிர்ப்பலைகளை எதிர்கொள்வது எப்படி?
ஊடகங்களின் தேவை குறித்தும், இஜ்திஹாதின் (நவீன பிரச்னைகளுக்கு இஸ்லாமிய அடிப்படையிலான ஆய்வு) கதவைத் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், சமுதாய ஒற்றுமை குறித்தும் டாக்டர் அவர்கள் முன்வைத்துள்ள கருத்துகள் மார்க்க அறிஞர்களின், முஸ்லிம் அமைப்புகள்-கட்சிகள்-இயக்கங்களின் சிந்தனைக்கும் விவாதத்துக்கும் உரியவை.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமும் அரசியலும்
சமுதாய வாழ்க்கையில் அமைதி நிலவ வேண்டும் என்றால் அங்கு அரசியல் இருக்க வேண்டும்.
அரசியல் ஒரு சாக்கடை என்று நினைத்து அதை விட்டு விலகுவது மிகப் பெரிய தவறாகும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் ஒரு பார்வை
துக்ளக் இதழில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கானவர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற முக்கியமான தொடர் இப்போது நூல் வடிவில்!
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் சில நிமிடங்களில்
வாழ்க்கையில் இலட்சியம் என்பது படைத்தவனை வணங்கி வாழ்வதும் படைப்பினங்களுக்கு வழங்கி வாழ்வதும் ஆகும். இவை இரண்டும் இறைக்கட்டளைகளே!
இறைக்கட்டளைகளுக்காக வாழ்வதே, வாழ்வின் இலட்சியமாகும்.
இந்த உயர்ந்த இலட்சியத்தைக் கொண்ட இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன. பெரும்பாலான செய்திகள் எதிர்மறையாகவே உள்ளன. எனவே உண்மையை அறியும் ஆர்வம் பலருக்கு எழுந்துள்ளது. பரபரப்பான இக்காலகட்டத்தில் குறைந்த நேரத்தில் செய்திகளை அறிய மக்கள் விரும்புகின்றனர். எனவே சுருக்கமாக ஆனால் அதே சமயத்தில் தெளிவாகவும், புரியும்படியும், ஆதாரப்பூர்வமாகவும் இருக்கவேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
இந்த விருப்பத்தின் அடிப்படையில் இஸ்லாத்தை எளிய முறையில், சுருக்கமாக, சிந்திக்கின்ற விதத்தில் நாடறிந்த நல்ல சிந்தனையாளர், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் தொகுத்தளித்துள்ளார்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் தாக்கப்படும் போது
இஸ்லாத்தின் மீது வசைமாரி பொழியப்படும் போது முஸ்லிம்களின் உயிர் – உடைமைகள் அழிக்கப்படும் போது நம்முடைய எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும் என்பதைக் கூறும் நூல்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் வெற்றிபெற
* இஸ்லாம் வெற்றிபெற வேண்டும்.
* இஸ்லாம் வெற்றி பெற்றால் முஸ்லிம்கள் வெற்றி பெறுவர்.
* எது உண்மையான வெற்றி?
* வெற்றியை அடையும் வழிமுறைகள் என்ன என்பதை அலசும் நூல்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
எங்கே அமைதி
“இஸ்லாம் எனும் பெயருக்கு அமைதி என்று பொருள். எனவே, அமைதியைப்பற்றி இஸ்லாம் விரிவாகப் பேசுகிறது. தனிமனிதனில் தொடங்கி சமூகம், பொருளா தாரம், அரசியல் என மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமைதியை நிலைநாட்டுவது பற்றி இஸ்லாம் விளக்குகிறது. இவை வெறும் தத்துவங்கள் அல்ல, மாறாக ஏற்கெனவே செயல்படுத்திக் காட்டப் பட்ட கொள்கைகள்; இன்றும் செயல்படுத்தப்பட்டு வரும் கொள்கைகள்” என முன்னுரையில் டாக்டர் கே.வி.எஸ். மொழிவதை மெய்ப்பிக்கும் நூல்
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
குடும்ப உறவுகளை குலைக்கலாமா? (மனித உறவுகள் – 2)
உறவைப் பேணுவதின் அவசியத்தையும், என்ன காரணங்களால் குடும்ப உறவு சீர்குலைகிறது என்பதையும், குடும்ப உறவுகள் குலையாமல் பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதையும், குர்ஆன் மற்றும் சுன்னா ஒளியில் மிக அற்புதமாகத் தொகுத்து தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
கேள்வி பிறந்தது இன்று – 1
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
கேள்வி பிறந்தது இன்று – 2
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
சுயமரியாதை
அழகாகச் செய்வது சுயமரியாதை;
அரைகுறையாகச் செய்வது அவமரியாதை!தவறை ஒப்புக்கொள்வதும்; மன்னிப்பை கோருவதும் சுயமரியாதையே!
மரியாதையாக நடத்துவதும் சுயமரியாதையே!
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தவக்குல் இறைவனைச் சார்ந்திருத்தல் (உளத்தூய்மை- 6)
இந்த நூலை படிக்கின்ற எவருக்கும் தவக்குல் என்கிற கோட்பாட்டின் சரியான புரிதலை தந்து இனம் புரியாத மனவலிமையை ஏற்படுத்தி சாதிக்கத் துடிக்கும் சாமானியர்களையும், வெற்றியின் விளிம்பிற்கே இந்த நூல் அழைத்துச் செல்லும் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திக்ர் – இறைதியாகம் (உளத்தூய்மை- 7)
பொதுவாக, இஸ்லாத்தில் பல அம்சங்களை ஒரு குறுகிய வட்டத்தில் சுருக்கிப் பார்த்தே பழகிய முஸ்லிம் உம்மத், இறைதியானம் (திக்ர்) என்பதையும், சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் போன்ற ஒரு சில வார்த்தைகளோடு சுருக்கி வைத்து விட்டது. இந்த கண்ணோட்டம் சரிசெய்யப்பட வேண்டும்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருமணத்தில் அநீதி, அநாச்சாரம், விரயம்
திருமணம் என்பது இறைவன் செய்த ஏற்பாடாகும். இதனால்தான் பெருமானார் (ஸல்) அவர்கள், ‘‘திருமணம் எனது வழிமுறை. இதைப் புறக்கணிப்போர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்றார்கள். திருமணத்தை இஸ்லாம் ஒரு சடங்காக மட்டுமே பார்க்கவில்லை. அதை ஒரு வணக்கமாகவும், இறைநம்பிக்கையாகவும் வைத்து அழகு பார்க்கிறது.
இஸ்லாம் திருமணத்தை வெளிப்படையாகவும் எளிமையாகவும் நடத்த வேண்டும் என்று எடுத்துச் சொல்கின்றது.
‘செலவில் குறைந்த திருமணமே அபிவிருத்தியில் நிறைந்ததாக அமையும்’ என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
இவ்வளவு சிறப்புமிக்க திருமணத்தை இன்று முஸ்லிம்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான வழிகளில் நடத்தி தீமையின் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தத் தீமையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுடன் அதற்குரிய தீர்வுகளையும் தர வேண்டுமென்ற நோக்கத்தில் நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் ‘திருமணத்தில் அநீதி, அநாச்சாரம், விரயம்’ என்ற தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளார். -
தொழிலாளி – முதலாளி உரிமைகள் – கடமைகள் – உறவுகள்
சமூக நீதி என்பது இட ஒதுக்கீட்டைத் தாண்டி பல பரிமாணங்களைக் கொண்டது. சமூகத்தில் வாழும் அனைவருக்கும் சமமான சமூக, அரசியல், பொருளாதார உரிமை கிட்டுவதே சமூக நீதியாகும். கணவன் – மனைவி, பெற்றோர் – பிள்ளைகள், உறவினர்கள், அண்டை வீட்டினர், நலிவுற்ற பிரிவினர் ஆகிய அனைவருக்கும் உரிமைகள் கிட்ட வேண்டும். ஏழைக்கும் உரிமை உண்டு, பணக்காரனுக்கும் உரிமை உண்டு. தொழிலாளி – முதலாளி இருவருக்கும் உரிமை உண்டு. ஆள்வோர் – ஆளப்படுவோர் இருவருக்கும் உரிமைகள் உண்டு. உரிமைகள் ஒரு வழிப் பாதையாய் இருக்கக்கூடாது. ஒருவரின் உரிமை மற்றவருக்குக் கடமையாகி-விடுகிறது. உரிமையும் கடமையும் இணைந்தே வர வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே சமூகத்தில் அமைதி நிலவும்.இந்த நூலில் தொழிலாளி – முதலாளி உரிமைகள் கடமைகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் உரிமை குறித்து 19ஆம் நூற்றாண்டிலிருந்துதான் பேசப்பட்டு வருகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொழிலாளி – முதலாளி உரிமைகள், கடமைகள், உறவுகள் பற்றிய அடிப்படைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. இஸ்லாத்தின் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டால் போராட்டங்களுக்கோ ஆர்ப்பாட்டங்களுக்கோ அவசியம் எழாது. இந்தச் செய்தியை மிகவும் ஆழமாகப் பதிவு செய்கிறது இந்நூல்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நயவஞ்சகம் அன்றும் இன்றும் (உளத்தூய்மை- 3)
நயவஞ்சகத்தனத்தின் ஆபத்தை உணர்த்தி, இது மற்ற என்னென்ன தீய குணங்களையெல்லாம் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது என்பதையும் பட்டியலிட்டு, இறுதியாக அம்மனிதனை ஒரு கோழையாகவும் பலவீனமானவனாகவும் ஆக்கி ஒழுக்க வீழ்ச்சியின் இறுதி எல்லைக்கே அவனைக் கொண்டு போய் சேர்த்து விடுகிறது என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நல்லாட்சி நாயகர் கலீஃபா உமர் (ரலி)
“வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது என்ற தவறான கூற்றுக்குத் தக்க பதிலடியாக ஆசிரியரின் இந்த வரலாற்றுப் படப்பிடிப்பு அமைந்திருக்கிறது. வெற்றி கொள்ளப்பட்ட நாடுகள் முஸ்லிம் நாடுகளாக ஆகிவிட்டன என்ற ஒரு கற்பனையில் இவ்வளவு காலம் வரலாறு எழுதப்பட்டு வந்தது என்பதே உண்மை. இரு நூறு ஆண்டுகள் முஸ்லிம்கள் நடத்திய நல்லாட்சியைக் கண்டு சுவைத்து அனுபவித்து உள்ளத்தாலும் உயர்வாலும் அங்கீகரித்த பின்னரே அந்த நாட்டு மக்கள் தங்களை இஸ்லாமிய வாழ்வியலில் இணைந்து கொண்டனர் என்பதை இதுவரை யாரும் தெளிவுபடுத்தாத ஓர் உண்மை யாகும். நூலாசிரியருக்கு வரலாற்று அறிஞர் உலகம் பல பாராட்டுகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறது.”
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நன்றி செலுத்தினால் நமக்கே நன்மை (உளத்தூய்மை- 9)
இறைவன் மனிதனுக்கு செய்த அருட்கொடைகளை பட்டிய லிட்டு மனிதன் இறைவனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நன்றி செலுத்த வேண்டும் என்பதையும் இறைத்தூதர்களின் முன்மாதிரிகளை எடுத்துக்காட்டி நமக்கு புரிய வைக்கிறது இந்நூல்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நாணமும் மானமும் (உளத்தூய்மை- 8)
நாணம் ஆண் பெண் இருவருமே பேணவேண்டிய பண்பாகும், ஏனோ இதை பெண்களுக்கு மட்டுமே உரியதாக சமூகம் ஆக்கிவிட்டிருக்கிறது.
நாணமும் மானமும் உள்ள சமூகத்தை உருவாக்குவதில் பெற்றோர்களுக்கும், கல்வியாளர்களும், ஆசிரியர்
களுக்கும் எவ்வளவு தூரம் பொறுப்புகள் உண்டு என்பதை விவரித்து இருக்கிறார் இந்நூலாசிரியர்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பகட்டு – ரியா படைத்தவனுக்காகவா? பகட்டிற்காகவா? (உளத்தூய்மை- 4)
எந்தச் செயலானாலும் அச்செயலின் தாக்கத்தை விட அச்செயலின் நோக்கம் முதன்மை பெறுகிறது. செயல் நற்செயலாக இருந்தால் அதன் தாக்கமும் நன்மையாகவே அமையலாம், ஆனால், அச்செயலுக்கு பின்னால் மறைந்திருக்கும் நோக்கம், தீயதாக இருந்தால் அது நயவஞ்சகத்தனமாகிவிடும்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பாவமன்னிப்பு எப்போது? எப்படி? (உளத்தூய்மை- 5)
பாவமன்னிப்புக்கான வழிமுறைகளையும் அதற்கான நிபந்தனைகளையும் தொகுத்துத் தந்துள்ளார். பாவ மன்னிப்பால் மானுடம் அடையும் நன்மைகளையும் பதிவு செய்யத் தவறவில்லை.
பாவம் செய்தவனை எந்தெந்த அம்சங்கள் அவனை அதிலிருந்து மீள விடாமல் தடுக்கிறது என்பதையும் விவரித்திருக்கிறார்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பொறாமைத் தீ (உளத்தூய்மை- 1)
பொறாமையால் ஏற்படுகின்ற பாதிப்பு ஏழை – பணக்காரன், படித்தவன் – பாமரன் என எந்த வித்தியாசமும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தி அவன் சம்பாதித்து வைத்த நன்மைகள் அனைத்தையும் அழித்துவிடுகிறது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பொறுமை (உறுதி – நிலைகுலையாமை) (உளத்தூய்மை- 10)
இத்தலைப்பில் எண்ணற்ற நூல்கள் வந்திருந்தாலும் இந்நூலில் ‘காரணங்கள் யாவை? அதற்கான தீர்வுகள் என்ன?’ என்கிற அடிப்படையில் தனக்குரிய தனி பாணியில் அலசியிருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மனிதவள மேம்பாட்டின் முக்கியத்துவம்
இந்நூல் மனிதவளம் என்றால் என்ன? மனிதவளத்தை எப்படி மேம்படுத்த முடியும்? அதனுடைய அவசியமும் முக்கியத்துவமும் என்ன? என்பதைப் பற்றிச் சுருக்கமாக, அழகாக, நேர்த்தியாகப் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.
Authors: DR. K.V.S. HABEEB MOHAMMED & H. ABDUR RAQEEB
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வரதட்சணை எனும் அவமானம்
குடும்பத்தின் அமைதியையும் சமுதாயத்தின் நல்லொழுக்கத்தையும் சீர்குலைத்துக் கோரத் தாண்டவமாடும்வரதட்சிணை எனும் கொடுமையை எப்படி ஒழிப்பது? அதன் ஆணிவேரையே அசைத்துப் பிடுங்கி எறிய வழிகாட்டும் நூல் இது…!
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வாருங்கள் ரமளானை அறிவோம்
‘நோன்பு என்றால் என்ன? ஆண்டுக்கொரு முறை ரமளான் மாதத்தில் காலை முதல் மாலை வரை தண்ணீர் கூட பருகாமல் உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?’ என்றெல்லாம் முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகள் நம்மிடம் கேள்வி எழுப்புவது உண்டு. அவர்களுக்குச் சரியான முறையில் விளக்கம் தரும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
விருந்தோம்பல் சிறக்க (மனித உறவுகள் – 4)
விருந்து மருந்தாகிவிட்ட இக்காலகட்டத்தில் விருந்தினர்கள் சுமையாகப் பார்க்கப்படுகிற நவீன யுகத்தில் முறையான விருந்தோம்பலின் அவசியத்தை உணர்ந்து நிறைவான கருத்துக் களை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வேதவரிகளும் தூதர் மொழிகளும் (பாகம் – 1)
Book Summary of வேதவரிகளும் தூதர் மொழிகளும் (Ordinary)
திருக்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் எளிய நடையில் தொகுக்கப்பட்டுள்ளன. இறைவன், மனிதன், நற்பண்புகள், தீயகுணங்கள், கல்வி, அரசியல், பொருளியல், சமூகவியல், பெண்கள் என 24 தலைப்புகளில் தொகுக் கப்பட்டுள்ளன.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வேதவரிகளும் தூதர் மொழிகளும் (பாகம் – 2)
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வேதவரிகளும் தூதர்மொழிகளும் (பாகம் – 3)
Dr. K.V.S. ஹபீப் முஹம்மத்
திருக்குர்ஆன் ஒரு பொறியியல் வல்லுநரின் வரைபடத்திற்கு (Blue Print) ஒப்பானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் வரைபடத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பானது. அடிப்படைகளைக் குர்ஆன் வழங்குகிறது. விரிவான விதிமுறைகளை நபி வழங்குவார். இந்தக் கோட்பாடுகள் நபிகள் நாயகம் காலத்திலேயே நிறைவேற்றப்பட்டு விட்டன. அறியாமையிலும் ஆதிக்க உணர்வுகளிலும் மனித உரிமை மீறல்களிலும் சமூக அரசியல் பொருளாதாரச் சுரண்டல்களிலும் மூழ்கியிருந்த சமூகத்தை 23 ஆண்டுகளுக்குள் இஸ்லாம் மாற்றி அமைத்தது. பின்னர் உலகெங்கும் பரவி அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது; ஏற்படுத்தி வருகிறது.
இறைவாக்கு ‘குர்ஆன்’ என்றும், நபிகளாரின் வாழ்வும் வாக்கும் ‘ஹதீஸ்’ என்றும் அழைக்கப்படும். சில ஆயிரம் பக்கங்களில் விரிந்து கிடக்கும் இஸ்லாமியக் கருத்துகள் எல்லாரும் அறிந்திடும் வண்ணம் சுருக்கமாக இந்த நூலில் தரப் பட்டுள்ளன. முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதார்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தனித் தனித் தலைப்புகளின்கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. சொற்பொழிவு ஆற்றுவோருக்கும் கட்டுரைகள் எழுதுவோருக்கும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்து இஸ்லாத்தின் பார்வை என்ன என்பதை எளிதில் அறியும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் முதல் பகுதி 25 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு மக்களின் பேராதரவைப் பெற்றது. பல பதிப்புகளைக் கண்டது.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST